கோவில் | சற்றுமுன்...




சென்னை கபாலி கோவிலில் திருட்டு

Thursday, April 17th, 2008 பகுப்புகள்: குற்றம், சென்னை | மறுமொழிகள் இல்லை »

சென்னை மயிலையில் அமைந்துள்ள கபாலீச்வரர் கோவிலில் உண்டியல் ஒன்று உடைக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் களவாடப்பட்டுள்ளன. வியாழன் அதிகாலை வந்த கோவில் ஊழியர்கள் கோவிலைத் திறந்தபோது இதனைக் கண்டு புகார் பதிந்தனர். உண்டியல் அதன் இடத்திலிருந்து பெயர்க்கப்பட்டு கோவிலின் ஒரு மூலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு ... மேலும் படிக்க..

கபாலீசுவரர் கோயிலில் அண்ணா நினைவு தின சிறப்பு வழிபாடு

Monday, February 4th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், ஆளுமை, சமூகம் | ஒரு மறுமொழி »

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோயிலில் அண்ணா நினைவு தின சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடை பெற்றது. இதில் ... மேலும் படிக்க..

சிதம்பரம் தீட்சிதர்களின் மனு மீதான விசாரணை முடிந்தது

Wednesday, January 23rd, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், சட்டம் - நீதி, சமூகம், சர்ச்சை, தமிழ்நாடு, நீதிமன்றம் | ஒரு மறுமொழி »

சிதம்பரம் நடராஜர் ஆலய திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடத் தடை விதிக்கக் கோரிய பொது தீட்சிதர்களின் மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை முடிந்தது. இம்மாத இறுதிக்குள் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. சிதம்பரம் நடராஜர் ஆலய திருச்சிற்றம்பல மேடையில் பூஜை காலங்களை தவிர, ... மேலும் படிக்க..

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அமெரிக்க சரஸ்வதி கோவில் பறிமுதல்

Tuesday, January 8th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா | மறுமொழிகள் இல்லை »

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அமெரிக்க சரஸ்வதி கோவில் பறிமுதல் கோவில் மேம்பாட்டிற்காக தனியார் நிறுவனத்திடம் பெற்ற கடனை திருப்பி செலுத்தாத காரணத்தினால், அமெரிக்கா எப்பிங்க் நகரில் உள்ள சரஸ்வதி கோவிலை கடன் கொடுத்த நிறுவனம் கையகப்படுத்திக் கொண்டது. இதைத் தொடர்ந்து, கோவில் அர்ச்சகர் ... மேலும் படிக்க..

விஜயவாடா கோவிலில் தள்ளுமுள்ளு: ஆறுபேர் மரணம்

Thursday, January 3rd, 2008 பகுப்புகள்: இந்தியா, பண்டிகைகள், பெண்கள், மரணம், விபத்து | மறுமொழிகள் இல்லை »

விஜயவாடாவிலுள்ள கனகதுர்கா கோவிலில் நேற்று பவானி தீக்சா என்ற பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானவர் அங்குள்ள துர்காகாட் துறையில் முழுக கூடியிருந்த கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளூமுள்ளுவில் ஒரு குழந்தை மற்றும் ஐந்து பெண்கள் மரணமடைந்துள்ளனர். பதினெட்டு பேர் காயமடைந்துள்ளனர். குளித்தபிறகு பக்தர்கள் குன்றின் மேலுள்ள ... மேலும் படிக்க..