அறிவிப்பு | சற்றுமுன்...




ஓய்வு காலத்தை கழிக்க இந்தியாவுக்கு வருமாறு முஷாரபுக்கு சீக்கியர் அழைப்பு

August 19th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அறிவிப்பு, தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஓய்வு காலத்தை கழிக்க இந்தியாவுக்கு வருமாறு முஷாரபுக்கு சீக்கியர் அழைப்பு

புதுதில்லி, ஆக.19: ஓய்வு காலத்தை கழிக்க வருமாறு முஷாரபுக்கு இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலதேவ் சிங். முஷாரப் தனது ஓய்வுக்காலத்தை கழிக்க இந்தியாவுக்கு வர வேண்டும் என பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

முஷாரபுக்கு 350 ஏக்கர் நிலம், நல்ல குதிரைகள், சொகுசுக் கார், ஆடம்பரமான மாளிகை ஆகியவற்றைத் தரவும் அவர் முன்வந்திருக்கிறார்.

முஷாரபும் இந்தியாவில் பிறந்தவர் என்பதால் தாம் இதைத் தர முன்வந்திருப்பதாகக் கூறும் பலதேவ் சிங், பாகிஸ்தானில் முஷாரபுக்கு மதிப்புக் குறைந்திருந்தாலும், இந்தியர்கள் அவர் மீது அன்பு வைத்திருக்கிறார்கள் என்றார்.


கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஜோதி நிர்மலாவுக்கு கல்பனா சாவ்லா விருது: கருணாநிதி வழங்கினார்

August 15th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அறிவிப்பு, சாதனை, பெண்கள், விருது | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஜோதி நிர்மலாவுக்கு கல்பனா சாவ்லா விருது: கருணாநிதி வழங்கினார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

துணிவு மற்றும் சாகச செயல் புரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது.

இவ் விருது பெறுபவருக்கு ரூ. 5ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கமும், ரூ.5 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படுகிறது.

இதற்காக அமைக்கப்பட்ட தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு இந்த விருதினை முதல்- அமைச்சர் கருணாநிதி சுதந்திர தின விழாவின் போது வழங்குவார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பி.ஜோதி நிர்மலா இந்த ஆண்டுக்கான துணிவு மற்றும் சாகச செயலுக்காக கல்பனா சாவ்லா விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்.

ஜோதி நிர்மலா பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்த காலத்தில் ஆற்றுப் பகுதிகளுக்கு சென்று துணிச்சலுடன் மணல் கொள்ளையர்களின் கொட்டத்தை அடக்கி முழுமையாக மணல் திருட்டை அடியோடு ஒழித்ததோடு மட்டுமல்லாமல், பல்வேறு அச்சுறுத்தலுக்கு இடையேயும் துணிவோடு செயல்பட்டு மதக்கலவரம், திருட்டு ஆகியவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் கள்ளச்சாராயம், போதை பொருள் மற்றும் சமூக விரோத செயல்களையும் தடுத்து நீதியை நிலைநாட்ட தீரமுடன் போராடிய அவரது மன உறுதியினைப் பாராட்டி இந்த வருடத்திற்கான 2008 கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மதச்சாயம் பூசுவதா? தேசிய லீக் கண்டனம்

August 14th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, அரசியல், அறிவிப்பு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

மதச்சாயம் பூசுவதா? தேசிய லீக் கண்டனம்

  சென்னை, ஆக.14 தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது விடுத்த அறிக்கையில், சுதந்திர இந்தியாவை பெற பாடுபட்ட முஸ்லிம் கள், சுதந்திரம் கிடைத்த பிறகு புறக்கணிக்கப் பட்டதன் விளைவாக இன்று பொருளாதாரத் தில், கல்வியில், வேலை வாய்ப்பில் மிகவும் பின்தங்கியுள்ளனர்.

சுதந்திர தின விழா பாதுகாப்பு என்ற பெயரில் தமிழகத்தின் பல இடங்களில் அப் பாவி முஸ்லிம் இளை ஞர்கள் கைது செய்யப் படுவது கண்டனத்திற் குரியது. அதனால் உண்மை குற்றவாளி களை கண்டுபிடிக்க முடி யாமல் போய்விடும்.

இஸ்லாம் தீவிர வாதத்தை வெறுக்கிறது. இஸ்லாமிய மக்களை பார்த்து முஸ்லிம் தீவிர வாதி என்ற ஒரு மதத்தின் பெயரையே குறிப்பிட்டு முத்திரை குத்துவது எந்த விதத் தில் நியாயம்?
தனிப்பட்ட மனி தன் செய்யும் எந்த தவறுக்கும் ஒரு மதம் பொறுப்பாகாது என்று கூறியுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மனிதநீதி பாசறை பேரணிக்கு அனுமதி இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

August 14th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், அறிவிப்பு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

மனிதநீதி பாசறை பேரணிக்கு அனுமதி இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஆக. 13: மதுரையில் மனிதநீதி பாசறை அமைப்பினர் சுதந்திர தின பேரணி நடத்தக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

ஆனால், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளது.

மனிதநீதி பாசறை மதுரை மாவட்டத் தலைவர் ஏ.காலித் மொகைதீன் தாக்கல் செய்த மனு:

முஸ்லிம் மக்களிடம் கல்வி அறிவை வளர்த்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, சச்சார் கமிட்டி அறிக்கையை அமல்படுத்துதல் போன்றவற்றுக்காக எங்கள் அமைப்பு பாடுபட்டு வருகிறது.

சாதி, மதம் போன்றவற்றுக்கு அப்பாற்பட்டு எங்கள் அமைப்பு நாட்டின் சுதந்திர தினத்தைக் கொண்டாட விரும்புகிறது.

இதற்காக பேரணிக்கும், பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி கேட்டு மாநகர் காவல் ஆணையரிடம் 9.7.2008-ல் மனு அளித்தோம்.

பொதுக்கூட்டம் நடத்த ரூ.11,200 கட்டவேண்டும் என்று கூறிய அவர், எங்கள் அமைப்பு குறித்த அனைத்து விவரங்களையும் கேட்டார். அதை வழங்கினோம். அவற்றைப் பெற்ற ஆணையர், பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுத்துவிட்டார்.

விடுதலைப் போராட்ட தியாகிகளை பொதுக்கூட்டத்தில் நாங்கள் கெüரவப்படுத்த உள்ளோம். எனவே, எங்கள் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்க உத்தரவிடவேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, மதுரை விறகுப்பேட்டையில் ஆக. 15-ல் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுத்த ஆணையர் உத்தரவை ரத்து செய்தார். மேலும் மனுதாரர் பேரணி குறித்து வலியுறுத்தாததால் பேரணி நடத்தக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.


கமிஷன் தொகை ரத்து எதிரொலி டிராவல் ஏஜெண்டு அலுவலகமிஷன் தொகை ரத்து எதிரொலி டிராவல் ஏஜெண்டு அலுவலகங்கள் இன்று இயங்காது

August 14th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, அறிவிப்பு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கமிஷன் தொகை ரத்து எதிரொலி டிராவல் ஏஜெண்டு அலுவலகங்கள் இன்று இயங்காது
தென் மண்டல டிராவல் ஏஜெண்டுகள் சங்க தலைவர் அறிவிப்பு

கமிஷன் தொகை ரத்து எதிரொலியாக இன்று (வியாழக்கிழமை) ஒருநாள் மட்டும் இந்தியா முழுவதும் விமான டிராவல் ஏஜெண்டு அலுவலகங்கள் இயங்காது என்று தென் மண்டல டிராவல் ஏஜெண்டுகள் சங்க தலைவர் அறிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய டிராவல் ஏஜெண்டுகள் சங்க தென் மண்டல தலைவர் சி.கே.அசோக் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கமிஷன் தொகை குறைப்பு

இந்தியாவில் விமான போக்குவரத்து சேவையை வழங்கி வருகிற தனியார் மற்றும் அரசு விமான போக்குவரத்து நிறுவனங்கள் தனது மொத்த கட்டண வசூலில் 94 சதவீதம் வசூலை டிராவல் ஏஜெண்டுகள் மூலமாகவே பெறுகின்றன. இணைய தளம் மூலமாக பெறுகிற கட்டண வசூல் 6 சதவீதம் மட்டுமே. இந்திய விமான டிராவல் ஏஜெண்டுகளின் சேவைகளை நமது நாட்டு பயணிகள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு பயணிகளும் பாராட்டுகிறார்கள்.

விமான நிறுவனங்கள் ஆரம்ப காலத்தில் ஏஜெண்டுகளுக்கு 9 சதவீதம் கமிஷன் தொகை வழங்கி வந்தன. இந்த கமிஷன் தொகையை படிப்படியாக குறைத்து தற்போது மிக குறைந்த அளவான 5 சதவீதம் மட்டுமே விமான நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்த கமிஷன் தொகையையும் நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் நிறுத்தப்போவதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கச்சா எண்ணை விலை உயர்வை காரணம் காட்டி கமிஷன் தொகையை ரத்துசெய்வதாக அறிவித்திருப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

இன்று அலுவலகங்கள் இயங்காது

இந்த முடிவால் இந்தியா முழுவதும் டிராவல் ஏஜெண்டு குடும்பங்களை சேர்ந்த 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு காலகட்டத்தில் விமான கட்டணம் அதிகமாகவும், வரித்தொகை குறைவாகவும் இருந்தன. இதனால் டிராவல் ஏஜெண்டுகளுக்கு கூடுதல் வருமானம் கிடைத்தது. ஆனால் தற்போது விமானம் கட்டணம் குறைவாகவும் வரித்தொகை அதிகமாகவும் வசூலிக்கப்படுகிறது.

இதனால் டிராவல் ஏஜெண்டுகளுக்கு கிடைக்கக் கூடிய விமான கட்டண கமிஷன் தொகை வருவாய் மிகவும் குறைந்து விட்டது. எனவே டிராவல் நிறுவனங்களுக்கு வழங்கிவந்த 5 சதவீத கமிஷன் தொகையை நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் நிறுத்திவைப்பதாக அறிவித்ததை நடைமுறை படுத்தக்கூடாது.

கமிஷன் தொகையை நிர்ணயம் செய்ய ஒரு குழு அமைக்கவேண்டும். விமான டிக்கெட்டுகளில் கமிஷன் தொகையையும் சேர்த்து கட்டணத்தை நிர்ணயம் செய்யவேண்டும் என்ற கோரிக்கைகளை வற்புறுத்துவதற்காக மும்பையில் இன்று (வியாழக்கிழமை) டிராவல் ஏஜெண்டுகளுக்கும், விமான நிறுவனங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. எனவே இன்று ஒருநாள் மட்டும் இந்தியா முழுவதும் உள்ள 3 ஆயிரம் டிராவல் ஏஜெண்டுகளும், 50 ஆயிரம் துணை டிராவல் ஏஜெண்டு அலுவலகங்களும் இயங்காது. இதேபோல் தமிழ்நாட்டில் உள்ள 350 டிராவல் ஏஜெண்டு அலுவலகங்களும், 1,500 துணை ஏஜெண்டு அலுவலகங்களும் மூடப்பட்டு இருக்கும். பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இந்த போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு சி.கே.அசோக் கூறினார். பேட்டியின் போது இந்தியா டிராவல் ஏஜெண்டுகள் கூட்டமைப்பின் தலைவர் எ.பஷீர் அகமது, அயட்டா டிராவல் ஏஜெண்டுகள் சங்க தலைவர் டிகே.கோபகுமார் ஆகியார் உடன் இருந்தனர்.


`மெட்ராஸ் டே’ ஒருவார கொண்டாட்டம்: சென்னைக்கு வயது 369

August 12th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, அறிவிப்பு, சுற்றுலா, தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

`மெட்ராஸ் டே’ ஒருவார கொண்டாட்டம்: சென்னைக்கு வயது 369
நகர் முழுவதும் 60 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

சென்னையின் 369-வது பிறந்த நாள் விழா ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் 60 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

4-வது ஆண்டாக

1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி சென்னை பிறந்தது. இப்போது 369 வயதாகிறது. பாரம்பரியமான இந்த சென்னையைப் பற்றி இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கடந்த 3 ஆண்டுகளாக `மெட்ராஸ் டே’ கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல இந்த ஆண்டும் `மெட்ராஸ் டே’ கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

இதுபற்றி சென்னையில் `மெட்ராஸ் டே’ நிகழ்ச்சி அமைப்பாளர்கள் எஸ்.முத்தையா, வின்சென்ட் டி சவுசா, வி.ஸ்ரீராம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

60 நிகழ்ச்சிகள்

`மெட்ராஸ் டே’ கொண்டாட்டம் கடந்த ஆண்டுகளில் தென்சென்னையில் மட்டும் நடந்தது. இந்த ஆண்டு 17-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை ஒருவாரத்திற்கு நகர் முழுவதும் குறிப்பாக ராயபுரம், அண்ணாநகர் போன்ற வடசென்னையின் பல்வேறு இடங்களில் கொண்டாட திட்டமிட்டுள்ளோம். 50 அமைப்புகள் மொத்தம் 60 வகையான நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

பராம்பரியமிக்க சென்னையின் பிறந்த நாள் மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். ஜனவரி 26 குடியரசு தினம், ஆகஸ்டு 15 சுதந்திர தினம் என்பது போன்ற நாட்கள் மக்கள் மனதில் இருப்பதைப் போல சென்னை பிறந்த நாளும் மக்கள் மனதில் இடம்பெற வேண்டும்.

அரிய புகைப்படக் கண்காட்சி

பாரம்பரியமிக்க கட்டிடங்களின் வழியே நடந்து செல்லுதல், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களைப் பற்றி பேசுதல், ஆவணப்படம் திரையிடுதல், பராம்பரிய உணவுத் திருவிழா, வினாடி வினா, கட்டுரைப் போட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், அரிய புகைப்படக் கண்காட்சி, அஞ்சல் தலை, நாணயங்கள் கண்காட்சி ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

சென்னைத் துறைமுகம், சென்னைக் கோவில்கள், சிங்கார சென்னையின் சிறப்பு அம்சம், பழைய சென்னையில் நடந்த ஆளவந்தார் கொலை வழக்கு, நடிகவேள் எம்.ஆர்.ராதா நூற்றாண்டு ஆண்டு அஞ்சலி, சென்னையும் சுதந்திரப் போராட்டமும் போன்ற பல்வேறு தலைப்புகளில் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.

அண்ணாநகர் பூங்கா

காலையில், மை லேடீஸ் பூங்கா, அண்ணாநகர் டவர் பூங்கா, அருங்காட்சியகம் ஆகியவற்றில் மரங்களின் நடுவே நடக்கவும், மெரினா கடற்கரை மற்றும் அண்ணா சாலையில் ஊர்வலமாக நடந்து செல்லவும் ஏற்பாடு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

 


குவைத் நாட்டில் வெளிநாட்டு தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்படுமா?

August 8th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அறிவிப்பு, குவைத், தொழிலாளர்கள் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

குவைத் நாட்டில் வெளிநாட்டு தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்படுமா?

குவைத் நாட்டில் சமீபத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் அவர்கள் எண்ணிக்கையை குறைக்கலாமா என்று அந்த நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.

தொழிலாளர்கள் போராட்டம்

குவைத் நாட்டில் வெளிநாட்டு தொழிலாளர்கள் சமீபத்தில் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோபம் கொண்ட அந்த நாட்டு அரசு, வெளிநாட்டு தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைக்கலாமா என்பது பற்றி பரிசீலனை செய்து வருகிறது.

வெளிநாட்டு தொழிலாளர்களில் வங்காளதேசத்தினரின் எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

850 வங்காளதேசத்தினர்

சுத்திகரிப்பு தொழிலில் ஈடுபட்டு உள்ள வங்காளதேசத்தை சேர்ந்த 850 தொழிலாளர்கள் அவர்களின் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். இதே போல வன்முறையில் ஈடுபட்டு உள்ள இன்னொரு நாட்டைச்சேர்ந்த தொழிலாளர்களும் திருப்பி அனுப்பப்பட இருக்கிறார்கள்.

வங்காளதேசத்தை சேர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதற்கு முன்பு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த நாட்டு தலைவர்கள் வற்புறுத்தலின்பேரில் தான் இந்த தடை நீக்கப்பட்டது.

குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம்

அதோடு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கவும் திட்டமிட்டு உள்ளது. இதற்காக ஆன்லைன் மூலம் தேர்தல் நடத்தப்பட்டது.

சுத்திகரிப்பு வேலைக்கு குறைந்த பட்ச ஊதியமாக மாதம் ரூ.6ஆயிரம் (40தினார்கள்)நிர்ணயிக்கலாம் என்ற அரசாங்கத்தின் திட்டத்துக்கு ஆன்லைன் தேர்தலில் பெரும்பாலானவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

புதிய விசா

விசிட் விசா என்ற புதிய விசா முறையை அறிமுகப்படுத்துவது பற்றியும் குவைத் பரிசீலித்து வருகிறது. அரபு நாடுகளை சேர்ந்த வர்த்தகர்களுக்காக பிசினஸ் விசாவை அறிமுகப்படுத்தவும் அந்த நாடு பரிசீலித்து வருகிறது.


குழந்தைகள் நல அகில இந்திய மருத்துவர்கள் மாநாடு

August 6th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அறிவிப்பு, சுகாதாரம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

குழந்தைகள் நல அகில இந்திய மருத்துவர்கள் மாநாடு

குழந்தைகள் நல மருத்துவர்கள் மாநாடு மதுரையில் 3 நாட்கள் நடைபெறுகிறது.

2008 ம் ஆண்டிற்கான குழந்தைகள் நல மருத்துவர்கள் மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாடு வருகிற 8 ம் தேதி தொடங்கி 10 ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தொற்று நோய், புதிய சவால்கள், குறைந்த வாய்ப்புகள் மற்றும் டெங்கு, மலேரியா, வயிற்று போக்கு உள்ளி நோய்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது. மாநாட்டையொட்டி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவிலிகளுக்கான பச்சிளங்குழந்தைகள் உயிர் காக்கும் பயிற்சி 7 ம் தேதி நடக்கிறது.

இந்த மாநாட்டில் இத்துறையில் தலைசிறந்த வல்லுனர்கள் அம்பேத்கார், ரோஹித் அகர்வால், உட்பட ஏராளமானோர் சிறப்புரையாற்றுகின்றனர். 8 ம் தேதி காலை 7 மணிக்கு குடும்ப நலத்துறை செயலாளர் மாநாட்டை துவக்கி வைக்கிறார். இதில் மாவட்ட கலெக்டர் ஜவகர், மருத்துவமனை டீன் சிவக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை அரசு மருத்துவமனை குழந்தைகள் நல பிரிவு துறை தலைவர் டாக்டர் வசந்தாகுமாரி மற்றும் மருத்துவர் மகாலிங்கம், ஒருங்கிணைப்பாளர் சண்முக சுந்தரம், அமுதா ராஜேஸ்வரி உள்ளிட்ட மருத்துவர்கள் செய்து வருகிறார்கள்
 


மதுரையில் சுதந்திரதின அணிவகுப்பு திட்டமிட்டபடி நடைபெறும் மனித நீதி பாசறை அறிவிப்பு

August 6th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, அரசியல், அறிவிப்பு, தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

மதுரையில் சுதந்திரதின அணிவகுப்பு திட்டமிட்டபடி நடைபெறும் மனித நீதி பாசறை அறிவிப்பு

மதுரையில் சுதந்திரதின அணி வகுப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என்று மனித நீதி பாசறை அறிவித்துள்ளது.

இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப்இந்தியாவின் அகில இந்திய பொதுச் செயலாளர் இ. எம். அப்துர் ரஹ்மான் மதுரையில் நேற்று கூறிய தாவது; ஆகஸ்ட் 15 அன்று மதுரையில் சுதந்திரதின அணிவகுப்பு திட்டமிட்டபடி நடைபெறும். இந்த அணிவகுப்பில் சுமார் 500 பேர் வீரர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். அணிவகுப்பின் முன்பாக தேசிய கொடி ஏந்திச் செல்லப்படும் இந்த அணிவகுப்பு பிற்பகல் சுமார் 3 மணியளவில் மதுரை செயிண்ட் மேரீஸ் பள்ளி மைதானத்தில் துவங்கி மாட்டுத்தாவணி அருகே உள்ள விறகுப்பேட்டை மருதநாயகம் திடலில் முடிவடையும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அகில இந்திய தலைவர் ஆ.அஞீபக்கர் இந்த அணிவகுப்பு மரியாதையை பெற்றுக் கொள்வார்கள் அஸ்ஸாம் யுனைடெட் டெமாக்ரடிக் ஃரண்ட் கட்சியின் செயல் தலைவர் வழக்கறிஞர் ஹஃபீஸ் ரஷீத் சௌவ்த்தரி இந்த சுதந்திர அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்.

அணிவகுப்பின் முடிவில் சுதந்திரதினப் பொதுக்கூட்டம் நடைபெறும். அங்கு அணிவகுப்பு வீரர்களும் பொதுமக்களும் சுதந்திர தின உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை சுமார் 6.30 மணியளவில் நிகழ்ச்சி நிறைவுறும்.

இந்திய விடுதலைப் போர் என்பது ஓர் வீரகாவியம், இந்தப் போரில் எண்ணற்றோர் சிறை சென்றனர். லட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்தனர். அந்நிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக சுதந்திர தாகம் கொண்ட இந்திர்களின் தியாகம் சுதந்திரப் போராட்டத்தில் வெளிப்பட்டது.

இந்த சுதந்திர தியாகத்தை நினைவு கூறும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எதிர்வரும் ஆகஸ்ட் 15_ம் நாள் சுதந்திரதின அணிவகுப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

தமிகத்தில் மதுரையிலும், கேரளாவில் கொச்சி, வயநாடு ஆகிய இரு இடங்களிலும், கர்நாடகத்தில் மங்களுரிலும் இந்த சுதந்திரதின அணிவகுப்பு நடக்கின்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஓர் அங்கமான மனித ஞிதிப் பாசறை மதுரையில் இந்த சுதந்திரதின அணிவகுப்புபை நடத்த ஏற்பாடுகளை முன்னின்று செய்து வருகின்றது.

சுதந்திரத்திற்கு எதிராக இருந்தார்கள் சங்பரிவார்கள் என்பதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது. இன்று சுதந்திர தியாகிகளை கௌரவிக்கும் சுதந்திரதின அணிவகுப்பிற்கும் தடையாக இருக்கிறார்கள் என்பதை வரலாறு பதிவு செய்து கொண்டிருக்கிறது.

சுதந்திர தினத்தை கௌரவிக்கும் இந்த சிறப்பான நிகழ்ச்சியில் ஜாதி, மதம் அரசியல், கட்சி ஆகியவற்றை கடந்து இந்த தேசத்தின் குடிமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் அழைக்கின்றோம்.

பேட்டியின போது மனித நீதிப் பாசறையின் மாநில துணைத் தலைவர் மௌலவி ஷேக் முஹம்மது தெஹ்லான் பாகவி எம். என். பி.யின் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது முபாரக், எம்.என்.பி.யின் மதுரை மாவட்டச் செயலாளர் முஹம்மது நஸ்ருதீன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

http://www.thinaboomi.com/2008/aug/06/districts/district9.php


துபாய் நூலகங்களில் காந்தி நூல்!

July 21st, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, *வித்தியாசமானவை, அறிவிப்பு, ஆளுமை | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

துபாய் நூலகங்களில் காந்தி நூல்!     

 

Mahatma Gandhi

துபாயிலுள்ள பொது நூலகங்களில் ( http://www.libraries.ae ) மகாத்மா காந்தியடிகள் குறித்த அரபி மொழி நூல் கிடைக்கிறது. 

காந்தியடிகளின் பிறப்பு முதல் இறப்பு வரை அவரது வாழ்க்கை நிகழ்வுகளைத் தொகுத்து அரேபிய நாட்டவர் இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட மகாத்மாவைப் பற்றி அறியும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி பங்கேற்ற பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்கள் சிறப்பான முறையில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.

இந்நூலை இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் சிறப்பான முறையில் தயாரித்துள்ளது. இதனை அரபி மொழி தெரிந்தவர்களுக்கு இலவசமாகவும்  வழங்கப்பட்டுகிறது.


சென்னை : உருட்டு கட்டைகளுடன் பொதுமக்கள் ரோந்து: குடியிருப்பு காவலாளி வேடத்தில் போலீஸôர்

July 20th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அறிவிப்பு, குற்றம், கைது, கொலை, சட்டம் - நீதி, தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

உருட்டு கட்டைகளுடன் பொதுமக்கள் ரோந்து: குடியிருப்பு காவலாளி வேடத்தில் போலீஸôர்

சென்னை வடபழனி அருகே உள்ள புதூர் மற்றும் ஒட்டகபாளையத்தில் பொதுமக்கள் இரவில் விடிய விடிய உருட்டு கட்டைகளுடன் ரோந்து சுற்றி வருகின்றனர்.

சைக்கோ மனிதன் பீதியால், அவர்கள் உருட்டு கட்டைகளுடன் வலம் வருவதாகப் போலீஸôர் தெரிவித்தனர்.

அதேநேரத்தில், அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிகளாகவும் போலீஸôர் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை வடபழனி, கே.கே.நகர் பகுதிகளில் தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிகள், குப்பை பொறுக்கும் நபர்கள் கொலை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தல், தீ வைத்து எரித்தல் என சுமார் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால் வடபழனி மற்றும் கே.கே.நகர், அசோக் நகர் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே ஒருவித பீதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புதூர் மற்றும் ஒட்டகபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், இரவு நேரங்களில் உருட்டு கட்டைகளுடன் வலம் வருகின்றனர். அவ்வழியே செல்பவர்களும் மிகுந்த அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

காவலாளி வேடத்தில்…: காவலாளிகள் குறி வைத்து கொல்லப்பட்டு வருவதால், போலீஸôரே நேராக அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிகளாக மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாதிரி சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீஸôர் காவலாளிகளாக இரவு ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் குப்பை பொறுக்கும் நபர்களாகவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போலவும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகப் போலீஸôர் தெரிவிக்கின்றனர்.

அசோக்நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கியிருந்த நேபாள இளைஞர்கள் 3 பேரை பிடித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.


90வது பிறந்த நாளைக் கொண்டாடினார் நெல்சன் மண்டேலா

July 19th, 2008 பகுப்புகள்: