*பொது | சற்றுமுன்...




சிட்டுக்குருவி எண்ணிக்கையை கணக்கு எடுத்தல் அவசியம்: நிபுணர்கள் வலியுறுத்தல்

August 23rd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, *பொது, அறிவிப்பு, சுற்றுச்சூழல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

சிட்டுக்குருவி எண்ணிக்கையை கணக்கு எடுத்தல் அவசியம்: நிபுணர்கள் வலியுறுத்தல்

 மும்பை, ஆக.22: சிட்டுக்குருவி நடமாட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே, அதன் எண்ணிக்கையை கணக்கு எடுப்பது அவசியம் என்று, பறவைகள் ஆய்வு நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிட்டுக்குருவி எண்ணிக்கை குறித்து கணக்கு எடுப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்துக்கு தாங்கள் பரிந்துரை செய்துள்ளதாக, பாம்பே தேசிய வரலாற்று சமூகத்தின் விஞ்ஞானி கிரிஷ் ஜெதர் தெரிவித்தார். பறவைகளின் நலம் குறித்து வன உயிரி ஆர்வலர்கள் பெரிய அளவில் கவலைப்படுவதில்லை. பறவைகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்காததே சிட்டுக்குருவி போன்ற பறவை இனத்தை நாம் இழக்க முக்கியக் காரணமாக அமைந்துள்ளது என்று குற்றம்சாட்டினார் நேச்சர் இந்தியா என்ற அமைப்பின் நிறுவனர் முகமது.

மாறிவரும் சுற்றுச்சூழலால் பறவைகள் இனம் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது. சில பறவை இனம் முற்றிலும் அழிந்து போகும் நிலையில் உள்ளது. செல்போன் தொலை தொடர்புக்கு உதவும் மின் காந்த அலைகளாலும் பறவைகள் அழிந்து வருவதாக அண்மையில் ஆய்வு உறுதிபடுத்தியது.
 
 


புத்தகத்துக்கு வேலையில்லை: வீணாகும் பல கோடி

August 22nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

புத்தகத்துக்கு வேலையில்லை: வீணாகும் பல கோடி

சென்னை, ஆக. 21: தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் தற்போது புத்தகங்கள் மூலம் பாடம் நடத்தப்படுவதில்லை. இதனால் மாணவர்களுக்காக அச்சிடப்படும் கோடிக்கணக்கான மதிப்பிலான புத்தகங்களுக்கு பயனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்கால சமுதாயத்தின் ஆணிவேராக அமைவது இன்றைய குழந்தைகளின் தொடக்கக் கல்வியே. இதில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்னையும் எதிர்காலத்தில் சமுதாய பிரச்னையாக உருவெடுக்கும். தமிழகத்தில் தற்போதும் மிகப் பழமையான மெக்காலே கல்வித் திட்டத்தின்படியே கல்வி முறை இயங்கி வருகிறது.

இந் நிலையில் தமிழக அரசு கடந்த 2007-2008 கல்வி ஆண்டில் “செயல்வழிக் கற்றல்’ (ஏ.பி.எல்.) என்ற புதிய கற்பித்தல் முறையை ஆரம்பப் பள்ளிகளில் (ஒன்று முதல் 4-ம் வகுப்பு வரை) அறிமுகப்படுத்தியது.

மேலும் விரிவான செய்திக்கு

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080821121210&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&ndate=8/22/2008&dName=No+Title&Dist=


ஓய்வு காலத்தை கழிக்க இந்தியாவுக்கு வருமாறு முஷாரபுக்கு சீக்கியர் அழைப்பு

August 19th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அறிவிப்பு, தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஓய்வு காலத்தை கழிக்க இந்தியாவுக்கு வருமாறு முஷாரபுக்கு சீக்கியர் அழைப்பு

புதுதில்லி, ஆக.19: ஓய்வு காலத்தை கழிக்க வருமாறு முஷாரபுக்கு இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலதேவ் சிங். முஷாரப் தனது ஓய்வுக்காலத்தை கழிக்க இந்தியாவுக்கு வர வேண்டும் என பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

முஷாரபுக்கு 350 ஏக்கர் நிலம், நல்ல குதிரைகள், சொகுசுக் கார், ஆடம்பரமான மாளிகை ஆகியவற்றைத் தரவும் அவர் முன்வந்திருக்கிறார்.

முஷாரபும் இந்தியாவில் பிறந்தவர் என்பதால் தாம் இதைத் தர முன்வந்திருப்பதாகக் கூறும் பலதேவ் சிங், பாகிஸ்தானில் முஷாரபுக்கு மதிப்புக் குறைந்திருந்தாலும், இந்தியர்கள் அவர் மீது அன்பு வைத்திருக்கிறார்கள் என்றார்.


எழுத்தாளர்கள் சிந்தனையாலே சமூகம் சீர்படும்’

August 17th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

எழுத்தாளர்கள் சிந்தனையாலே சமூகம் சீர்படும்’

மதுரை, ஆக. 16: எழுத்தாளர்களது சிந்தனையாலே சமூகம் சீர்படும் என, உலகத் தமிழர் பேரமைப்பு 6 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் உலகத் தமிழ் எழுத்தாளர் சிறப்பு மாநாட்டில் பேராசிரியர் க. நெடுமாறன் பேசினார்.

மதுரை அரசரடி இறையியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டுக்கு பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் தலைமை வகித்தார். திருவள்ளுவர் கழகத் தலைவர் கமலத்தியாகராஜன் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.

மாநாடு வரவேற்புக்குழுத் தலைவர் ரெ. மாணிக்கம் வரவேற்றார். கவிஞர் இன்குலாப் மாநாட்டுத் தொடக்க உரையாற்றினார்.

அவர் பேசுகையில், படைப்பாளிகள் மனித நீதிக்காக போராடவேண்டும். தமிழக மீனவர்களுக்கு இலங்கை ராணுவத்திடமிருந்து பாதுகாப்பு அளிப்பது மிகவும் முக்கியம் என்றார்.

பின்னர் எழுத்தாளர்களின் சமூகக் கடமைகள் எனும் பொருளிலான கருத்தரங்கை பேராசிரியர் பர்வீன் சுல்தானா தொடங்கி வைத்தார்.

பெண்ணிய நோக்கில் எனும் பொருளில் பேசிய அவர், சீனர்களைப் போல தமிழர்களும் மொழிப் பற்று மிக்கவர்களாக விளங்கவேண்டும். பெண்ணியம் என்பது குடும்ப உறவுகளை சிதைப்பதாக அமையும். எனவே பெண் விடுதலை குறித்து பேசுவது நல்லது என்றார்.

கருத்தரங்குக்கு தலைமை வகித்துப் பேசிய பேராசிரியர் க. நெடுமாறன் தமது உரையில், எழுத்தாளர்களது சிந்தனையாலே சமூகம் சீர்படும் என்றார்.

நூலகங்கள் சீரழிந்து கிடக்கின்றன: தமிழகத்தில் நூலகங்கள் சீரழிந்து கிடப்பதாக மாநாட்டில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

25 ஆண்டுகளாக தமிழகத்தில் அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசை மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தமிழகத்தில் நூலகங்கள் முற்றிலும் சீரழிந்துள்ளன. நூலகங்களுக்கு நூல்கள் வழங்கப்படுவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. மேலும், தரமில்லாத நூல்கள் வாங்கப்படுகின்றன. போதுமான நூலகர்கள், ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.

தமிழ் எழுத்தாளர், திறனாய்வாளர்கள் நூலக ஆணைக் குழுவில் நியமிக்கப்பட வேண்டும். உலகளாவிய இலக்கியப் பரிசுத் திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

இலங்கைக்கு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கச்சத்தீவை இந்திய ஆளுகைக்கு உள்பட்ட பகுதியாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையால் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு இழப்பீடு தர வேண்டும், வெளிநாடுவாழ் தமிழர்கள் தமிழகம் வர விசா தரப்பட வேண்டும் போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் மொழிச் செழுமையில் எழுத்தாளர் பங்கு, தமிழ் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்கு, அயலகத் தமிழர் ஆகிய பொருள்களில் கருத்தரங்கு அமர்வுகள் நடைபெற்றன.

உலகப் பெருந்தமிழர் விருதுகள் வழங்கப்பட்டன. மாநாட்டில் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழ்ச் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
 


முதல்வருக்கு பாராட்டு விழா

August 17th, 2008 பகுப்புகள்: *பொது | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

முதல்வருக்கு பாராட்டு விழா

சென்னை, ஆக. 16: அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் நிறுவனத்தை தொடங்கியதற்காக தமிழக முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு விழா கோவையில் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்கம் சனிக்கிழமை தெரிவித்தது.

கடந்த மாதம் அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் நிறுவனத்தை தஞ்சையில் முதல்வர் திறந்து வைத்தார். அடுத்து ஆகஸ்டு 15-ம் தேதி கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தப் பகுதி பொது மக்களும், கேபிள் டிவி ஆப்பரேட்டர்களும் பயனடைய வாய்ப்புள்ளது. இந்தத் தொழிலைக் கெடுக்க புதியவர்கள் உருவாக்கப்பட மாட்டார்கள் என்று முதல்வர் வாக்களித்துள்ளார். இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலும், அரசு கேபிள் டிவியை வரவேற்றும் கோவை மாநகரில் ஆகஸ்டு 20-ம் தேதி விழா எடுக்க உள்ளோம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார் காயல் ஆர்.எஸ். இளவரசு.
 


நூலகங்களின் செயல்பாடு போற்றத்தக்கதாக இல்லை’: முதல்வர்

August 17th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, அரசியல், தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

நூலகங்களின் செயல்பாடு போற்றத்தக்கதாக இல்லை’: முதல்வர்

சென்னை, ஆக. 16: நூலங்களின் செயல்பாடு போற்றத்தக்கதாக இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 120 கோடியில் உலக தரத்தில் அமைக்கப்பட உள்ள அரசு நூலக வளாகத்துக்கு அடிக்கல் நாட்டி சனிக்கிழமை அவர் பேசியது:-

தங்கம் தென்னரசுவை எதற்காக அமைச்சராக நியமித்தேனோ அது நிறைவேறியுள்ளது. எனது நினைப்பை நுகர்ந்து பார்த்து நிறைவேற்றுகிறார். அதில் ஏமாறவில்லை. நானும் ஏமாற மாட்டேன்.

யார், யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும், யார், யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்த்து நாங்கள் செயல்படுகிறோம்.

கோட்டூர்புரம் எனது வாழ்க்கையின் முழுமையான அத்தியாயம். ஒரு பொதுத் தேர்தல் நேரத்தின்போது இப்பகுதியில் சிலர் என்னையும், உடன் வந்தவர்களையும் ஒரு மண்டபத்தில் சிறைவைத்து தாக்கினர்.

அவர்களிடம் இருந்து என்னை ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த சாரங்கன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் காப்பாற்றினர். அவர்களுக்கு வேஷ்டி, சேலைகளை பரிசாக அண்ணா வழங்கினார்.

அவர்கள் என்னைக் காப்பாற்றாவிட்டால், என்னை முதல்வராக நீங்கள் பார்த்திருக்க முடியாது. எனது வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

வீடுகள்தோறும் நூலகம்: வீட்டில் உள்ள பொருள்கள் ஒவ்வொன்றும் அது, எந்த இடத்தில் வாங்கப்பட்டது என்பது குறித்து அதன் சரித்திரத்தைக் கூறுவார்கள். நூலகம் நமது அடிப்படைத் தேவை. வீட்டுக்கு ஒரு நூலகம் இருக்க வேண்டும் என்று விரும்பினார் அண்ணா. அவரது ஆவல் இன்னமும் நிறைவேறவில்லை. அதை நிறைவேற்றும் வகையில் நாம் நடைபோடுவோம். எனவே, இந் நூலகம் சிறப்பாக அமைக்கப்படும்.

வருங்காலத்தில் இந்த நூலகத்தை பல்லாயிரக் கணக்கானோர் பயன்படுத்தினால், இந்த விழா வெற்றி பெற்றதாக அமையும்.

நூலகங்களின் செயல்பாடு சரியில்லை: தமிழகத்தில் மொத்தம் 3,924 பொது நூலகங்கள் உள்ளன. எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும்கூட, நூலகங்களின் சிறப்பு, செயல்பாடு போற்றத்தக்கதாக இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

எழுத்தாளர்களின் கோரிக்கையை ஏற்று, நூலகங்களில் பெறப்படும் புத்தகங்களின் எண்ணிக்கையை 1000-மாக அரசு உயர்த்தியுள்ளது. நூலகங்களுக்கு மேலும் அதிக புத்தகங்கள் தேவைப்படுமானால், இதை 2 ஆயிரமாக உயர்த்த அரசுக்கு அதிக நேரம் ஆகாது.

கோட்டூர்புரத்தில் நூலகம் உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையை நான் பெற்றதற்கு எனது மகள் கனிமொழியே காரணம் என்று குறிப்பிட்டனர். கனிமொழியின் ஆர்வத்தை செயல்படுத்தி இருக்கிறோம்.

விரைவில் இந்த நூலகம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழாவுக்கு என்னை அழைப்பீர்கள் என்று நம்புகிறேன் என்றார் முதல்வர் கருணாநிதி.

இதில் அமைச்சர்கள் க. அன்பழகன், துரைமுருகன், தங்கம் தென்னரசு, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, தலைமைச் செயலர் எல்.கே திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஜோதி நிர்மலாவுக்கு கல்பனா சாவ்லா விருது: கருணாநிதி வழங்கினார்

August 15th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அறிவிப்பு, சாதனை, பெண்கள், விருது | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஜோதி நிர்மலாவுக்கு கல்பனா சாவ்லா விருது: கருணாநிதி வழங்கினார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

துணிவு மற்றும் சாகச செயல் புரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது.

இவ் விருது பெறுபவருக்கு ரூ. 5ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கமும், ரூ.5 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படுகிறது.

இதற்காக அமைக்கப்பட்ட தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு இந்த விருதினை முதல்- அமைச்சர் கருணாநிதி சுதந்திர தின விழாவின் போது வழங்குவார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பி.ஜோதி நிர்மலா இந்த ஆண்டுக்கான துணிவு மற்றும் சாகச செயலுக்காக கல்பனா சாவ்லா விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்.

ஜோதி நிர்மலா பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்த காலத்தில் ஆற்றுப் பகுதிகளுக்கு சென்று துணிச்சலுடன் மணல் கொள்ளையர்களின் கொட்டத்தை அடக்கி முழுமையாக மணல் திருட்டை அடியோடு ஒழித்ததோடு மட்டுமல்லாமல், பல்வேறு அச்சுறுத்தலுக்கு இடையேயும் துணிவோடு செயல்பட்டு மதக்கலவரம், திருட்டு ஆகியவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் கள்ளச்சாராயம், போதை பொருள் மற்றும் சமூக விரோத செயல்களையும் தடுத்து நீதியை நிலைநாட்ட தீரமுடன் போராடிய அவரது மன உறுதியினைப் பாராட்டி இந்த வருடத்திற்கான 2008 கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மதச்சாயம் பூசுவதா? தேசிய லீக் கண்டனம்

August 14th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, அரசியல், அறிவிப்பு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

மதச்சாயம் பூசுவதா? தேசிய லீக் கண்டனம்

  சென்னை, ஆக.14 தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது விடுத்த அறிக்கையில், சுதந்திர இந்தியாவை பெற பாடுபட்ட முஸ்லிம் கள், சுதந்திரம் கிடைத்த பிறகு புறக்கணிக்கப் பட்டதன் விளைவாக இன்று பொருளாதாரத் தில், கல்வியில், வேலை வாய்ப்பில் மிகவும் பின்தங்கியுள்ளனர்.

சுதந்திர தின விழா பாதுகாப்பு என்ற பெயரில் தமிழகத்தின் பல இடங்களில் அப் பாவி முஸ்லிம் இளை ஞர்கள் கைது செய்யப் படுவது கண்டனத்திற் குரியது. அதனால் உண்மை குற்றவாளி களை கண்டுபிடிக்க முடி யாமல் போய்விடும்.

இஸ்லாம் தீவிர வாதத்தை வெறுக்கிறது. இஸ்லாமிய மக்களை பார்த்து முஸ்லிம் தீவிர வாதி என்ற ஒரு மதத்தின் பெயரையே குறிப்பிட்டு முத்திரை குத்துவது எந்த விதத் தில் நியாயம்?
தனிப்பட்ட மனி தன் செய்யும் எந்த தவறுக்கும் ஒரு மதம் பொறுப்பாகாது என்று கூறியுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மனிதநீதி பாசறை பேரணிக்கு அனுமதி இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

August 14th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், அறிவிப்பு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

மனிதநீதி பாசறை பேரணிக்கு அனுமதி இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஆக. 13: மதுரையில் மனிதநீதி பாசறை அமைப்பினர் சுதந்திர தின பேரணி நடத்தக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

ஆனால், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளது.

மனிதநீதி பாசறை மதுரை மாவட்டத் தலைவர் ஏ.காலித் மொகைதீன் தாக்கல் செய்த மனு:

முஸ்லிம் மக்களிடம் கல்வி அறிவை வளர்த்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, சச்சார் கமிட்டி அறிக்கையை அமல்படுத்துதல் போன்றவற்றுக்காக எங்கள் அமைப்பு பாடுபட்டு வருகிறது.

சாதி, மதம் போன்றவற்றுக்கு அப்பாற்பட்டு எங்கள் அமைப்பு நாட்டின் சுதந்திர தினத்தைக் கொண்டாட விரும்புகிறது.

இதற்காக பேரணிக்கும், பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி கேட்டு மாநகர் காவல் ஆணையரிடம் 9.7.2008-ல் மனு அளித்தோம்.

பொதுக்கூட்டம் நடத்த ரூ.11,200 கட்டவேண்டும் என்று கூறிய அவர், எங்கள் அமைப்பு குறித்த அனைத்து விவரங்களையும் கேட்டார். அதை வழங்கினோம். அவற்றைப் பெற்ற ஆணையர், பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுத்துவிட்டார்.

விடுதலைப் போராட்ட தியாகிகளை பொதுக்கூட்டத்தில் நாங்கள் கெüரவப்படுத்த உள்ளோம். எனவே, எங்கள் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்க உத்தரவிடவேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, மதுரை விறகுப்பேட்டையில் ஆக. 15-ல் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுத்த ஆணையர் உத்தரவை ரத்து செய்தார். மேலும் மனுதாரர் பேரணி குறித்து வலியுறுத்தாததால் பேரணி நடத்தக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.


கமிஷன் தொகை ரத்து எதிரொலி டிராவல் ஏஜெண்டு அலுவலகமிஷன் தொகை ரத்து எதிரொலி டிராவல் ஏஜெண்டு அலுவலகங்கள் இன்று இயங்காது

August 14th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, அறிவிப்பு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கமிஷன் தொகை ரத்து எதிரொலி டிராவல் ஏஜெண்டு அலுவலகங்கள் இன்று இயங்காது
தென் மண்டல டிராவல் ஏஜெண்டுகள் சங்க தலைவர் அறிவிப்பு

கமிஷன் தொகை ரத்து எதிரொலியாக இன்று (வியாழக்கிழமை) ஒருநாள் மட்டும் இந்தியா முழுவதும் விமான டிராவல் ஏஜெண்டு அலுவலகங்கள் இயங்காது என்று தென் மண்டல டிராவல் ஏஜெண்டுகள் சங்க தலைவர் அறிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய டிராவல் ஏஜெண்டுகள் சங்க தென் மண்டல தலைவர் சி.கே.அசோக் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கமிஷன் தொகை குறைப்பு

இந்தியாவில் விமான போக்குவரத்து சேவையை வழங்கி வருகிற தனியார் மற்றும் அரசு விமான போக்குவரத்து நிறுவனங்கள் தனது மொத்த கட்டண வசூலில் 94 சதவீதம் வசூலை டிராவல் ஏஜெண்டுகள் மூலமாகவே பெறுகின்றன. இணைய தளம் மூலமாக பெறுகிற கட்டண வசூல் 6 சதவீதம் மட்டுமே. இந்திய விமான டிராவல் ஏஜெண்டுகளின் சேவைகளை நமது நாட்டு பயணிகள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு பயணிகளும் பாராட்டுகிறார்கள்.

விமான நிறுவனங்கள் ஆரம்ப காலத்தில் ஏஜெண்டுகளுக்கு 9 சதவீதம் கமிஷன் தொகை வழங்கி வந்தன. இந்த கமிஷன் தொகையை படிப்படியாக குறைத்து தற்போது மிக குறைந்த அளவான 5 சதவீதம் மட்டுமே விமான நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்த கமிஷன் தொகையையும் நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் நிறுத்தப்போவதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கச்சா எண்ணை விலை உயர்வை காரணம் காட்டி கமிஷன் தொகையை ரத்துசெய்வதாக அறிவித்திருப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

இன்று அலுவலகங்கள் இயங்காது

இந்த முடிவால் இந்தியா முழுவதும் டிராவல் ஏஜெண்டு குடும்பங்களை சேர்ந்த 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு காலகட்டத்தில் விமான கட்டணம் அதிகமாகவும், வரித்தொகை குறைவாகவும் இருந்தன. இதனால் டிராவல் ஏஜெண்டுகளுக்கு கூடுதல் வருமானம் கிடைத்தது. ஆனால் தற்போது விமானம் கட்டணம் குறைவாகவும் வரித்தொகை அதிகமாகவும் வசூலிக்கப்படுகிறது.

இதனால் டிராவல் ஏஜெண்டுகளுக்கு கிடைக்கக் கூடிய விமான கட்டண கமிஷன் தொகை வருவாய் மிகவும் குறைந்து விட்டது. எனவே டிராவல் நிறுவனங்களுக்கு வழங்கிவந்த 5 சதவீத கமிஷன் தொகையை நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் நிறுத்திவைப்பதாக அறிவித்ததை நடைமுறை படுத்தக்கூடாது.

கமிஷன் தொகையை நிர்ணயம் செய்ய ஒரு குழு அமைக்கவேண்டும். விமான டிக்கெட்டுகளில் கமிஷன் தொகையையும் சேர்த்து கட்டணத்தை நிர்ணயம் செய்யவேண்டும் என்ற கோரிக்கைகளை வற்புறுத்துவதற்காக மும்பையில் இன்று (வியாழக்கிழமை) டிராவல் ஏஜெண்டுகளுக்கும், விமான நிறுவனங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. எனவே இன்று ஒருநாள் மட்டும் இந்தியா முழுவதும் உள்ள 3 ஆயிரம் டிராவல் ஏஜெண்டுகளும், 50 ஆயிரம் துணை டிராவல் ஏஜெண்டு அலுவலகங்களும் இயங்காது. இதேபோல் தமிழ்நாட்டில் உள்ள 350 டிராவல் ஏஜெண்டு அலுவலகங்களும், 1,500 துணை ஏஜெண்டு அலுவலகங்களும் மூடப்பட்டு இருக்கும். பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இந்த போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு சி.கே.அசோக் கூறினார். பேட்டியின் போது இந்தியா டிராவல் ஏஜெண்டுகள் கூட்டமைப்பின் தலைவர் எ.பஷீர் அகமது, அயட்டா டிராவல் ஏஜெண்டுகள் சங்க தலைவர் டிகே.கோபகுமார் ஆகியார் உடன் இருந்தனர்.


ஒரு கோடி புத்தகங்களின் சங்கமம்! கோவை புத்தக திருவிழா நாளை துவக்கம்

August 13th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், தகவல், பதிவுலகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஒரு கோடி புத்தகங்களின் சங்கமம்! கோவை புத்தக திருவிழா நாளை துவக்கம்

கோவை, ஆக.12: கோவை மத்திய சிறை மைதானத்தில் ஒரு கோடி புத்தகங்களுடன் “கோவை புத்தகத் திருவிழா’ வியாழக்கிழமை (ஆக.14) தொடங்குகிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் 24-ம் தேதி வரை இக் கண்காட்சியை நடத்துகிறது. 176 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. தமிழ் புத்தகம் 136 அரங்கிலும், ஆங்கிலப் புத்தகம் 36 அரங்கிலும், மல்டி மீடியா தொடர்பானவை 6 அரங்கிலும் இடம் பெறும். அனைத்து நாளிலும் காலை 11 முதல் இரவு 9 வரை கண்காட்சி நடைபெறும்.
 
 


`மெட்ராஸ் டே’ ஒருவார கொண்டாட்டம்: சென்னைக்கு வயது 369

August 12th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, அறிவிப்பு, சுற்றுலா, தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

`மெட்ராஸ் டே’ ஒருவார கொண்டாட்டம்: சென்னைக்கு வயது 369
நகர் முழுவதும் 60 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

சென்னையின் 369-வது பிறந்த நாள் விழா ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் 60 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

4-வது ஆண்டாக

1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி சென்னை பிறந்தது. இப்போது 369 வயதாகிறது. பாரம்பரியமான இந்த சென்னையைப் பற்றி இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கடந்த 3 ஆண்டுகளாக `மெட்ராஸ் டே’ கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல இந்த ஆண்டும் `மெட்ராஸ் டே’ கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

இதுபற்றி சென்னையில் `மெட்ராஸ் டே’ நிகழ்ச்சி அமைப்பாளர்கள் எஸ்.முத்தையா, வின்சென்ட் டி சவுசா, வி.ஸ்ரீராம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

60 நிகழ்ச்சிகள்

`மெட்ராஸ் டே’ கொண்டாட்டம் கடந்த ஆண்டுகளில் தென்சென்னையில் மட்டும் நடந்தது. இந்த ஆண்டு 17-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை ஒருவாரத்திற்கு நகர் முழுவதும் குறிப்பாக ராயபுரம், அண்ணாநகர் போன்ற வடசென்னையின் பல்வேறு இடங்களில் கொண்டாட திட்டமிட்டுள்ளோம். 50 அமைப்புகள் மொத்தம் 60 வகையான நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

பராம்பரியமிக்க சென்னையின் பிறந்த நாள் மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். ஜனவரி 26 குடியரசு தினம், ஆகஸ்டு 15 சுதந்திர தினம் என்பது போன்ற நாட்கள் மக்கள் மனதில் இருப்பதைப் போல சென்னை பிறந்த நாளும் மக்கள் மனதில் இடம்பெற வேண்டும்.

அரிய புகைப்படக் கண்காட்சி

பாரம்பரியமிக்க கட்டிடங்களின் வழியே நடந்து செல்லுதல், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களைப் பற்றி பேசுதல், ஆவணப்படம் திரையிடுதல், பராம்பரிய உணவுத் திருவிழா, வினாடி வினா, கட்டுரைப் போட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், அரிய புகைப்படக் கண்காட்சி, அஞ்சல் தலை, நாணயங்கள் கண்காட்சி ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

சென்னைத் துறைமுகம், சென்னைக் கோவில்கள், சிங்கார சென்னையின் சிறப்பு அம்சம், பழைய சென்னையில் நடந்த ஆளவந்தார் கொலை வழக்கு, நடிகவேள் எம்.ஆர்.ராதா நூற்றாண்டு ஆண்டு அஞ்சலி, சென்னையும் சுதந்திரப் போராட்டமும் போன்ற பல்வேறு தலைப்புகளில் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.

அண்ணாநகர் பூங்கா

காலையில், மை லேடீஸ் பூங்கா, அண்ணாநகர் டவர் பூங்கா, அருங்காட்சியகம் ஆகியவற்றில் மரங்களின் நடுவே நடக்கவும், மெரினா கடற்கரை மற்றும் அண்ணா சாலையில் ஊர்வலமாக நடந்து செல்லவும் ஏற்பாடு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.