சற்றுமுன் | சற்றுமுன்...




கர்நாடகாவில் பேருந்து விபத்து: 16 மாணவர்கள் பலி

August 14th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், குழந்தைகள், சற்றுமுன், மரணம், விபத்து | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கர்நாடகாவில் பேருந்து விபத்து: 16 மாணவர்கள் பலி

பெங்களூர், ஆக. 14: கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து பேருந்து ஒன்று 28 மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றுகொண்டிருந்தது. அப்போது ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அங்கிருந்த ஆற்றில் கவிழ்ந்தது.

அங்கு கூடியிருந்த மக்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்கியதால் 14 மாணவர்கள் காப்பாற்றப்பட்டனர். மற்ற மாணவர்கள் இறந்துவிட்டதாகவும், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 


சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் சினிமா: கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு

August 5th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், சற்றுமுன், தகவல், தகவல், தமிழ்நாடு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் சினிமா: கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு

சென்னை, ஆக. 4 : சுதந்திர தினத்தன்று தொலைக்காட்சியில் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைத் தவிர்க்குமாறு திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் சுதந்திர தினத்தை கொச்சைப்படுத்துகிறார்கள். கூத்தும், கும்மாளமும், பேட்டி என்ற பெயரில் நடிகர், நடிகைகள் தங்களின் சுயபுராணத்தைக் கூறுவதும் அருவருப்பாக உள்ளது.

வரும் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று காலை முதல் மாலை வரை சுதந்திரத்தின் அருமை, பெருமைகள், தியாகிகளின் வீர வரலாறு, காட்சிகளாக, ஆடல், பாடல்களாக, எழுச்சி உரைகளாக, கதை, கவிதை, பட்டிமன்றங்களாக ஒளிபரப்ப வேண்டும்.

இதைத்தான் மாணவர்களாகிய நாங்கள் எதிர்பார்க்கிறோம் என, தங்கள் கையெழுத்துடன் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 


மனைவியை கொன்ற வழக்கில் பெங்களூர் சாமியாருக்கு ஆயுள் முழுவதும் சிறை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

July 23rd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, குற்றம், சட்டம் - நீதி, சற்றுமுன், தீர்ப்பு, நீதிமன்றம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

மனைவியை கொன்ற வழக்கில் பெங்களூர் சாமியாருக்கு ஆயுள் முழுவதும் சிறை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

பெங்களூரை சேர்ந்த சாமியார் சரதானந்தா. இவரது மனைவி சாகேரா. சாகேராவின் சொத்துகளை அடைவதற்காக அவருக்கு அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாமியார் சரதானந்தா கொடுத்தார். பின்னர் அவரை வீட்டுக்குள்ளேயே புதைத்து விட்டார். இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இரண்டு நீதிபதிகள் பெஞ்சு முன்பு நடந்தது.

அதில் தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவர், `மிகவும் அரிதான இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும்’ என்றார். மற்றொரு நீதிபதி, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இரண்டு தீர்ப்புகளும் முரணாக இருந்ததால் வழக்கை மூன்று நீதிபதிகள் பெஞ்சுக்கு தலைமை நீதிபதி மாற்றினார்.

இதையடுத்து நீதிபதிகள் அகர்வால், சிங்வி, அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்சு விசாரித்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, “சொத்துக்காக மனைவியை கொலை செய்த சாமியார் சரதானந்தாவை ஆயுள் காலம் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும்” என மூன்று நீதிபதிகளும் ஒன்றாக உத்தரவிட்டனர்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=427197&disdate=7/23/2008


கணவருடன், ஐஸ்வர்யா ராய் கடும் வாக்குவாதம் தாய்லாந்து ஓட்டலில் பரபரப்பு சம்பவம்

June 28th, 2008 பகுப்புகள்: தகவல், திரையுலகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | ஒரு மறுமொழி » |

கணவருடன், ஐஸ்வர்யா ராய் கடும் வாக்குவாதம் தாய்லாந்து ஓட்டலில் பரபரப்பு சம்பவம்

தாய்லாந்து ஓட்டலில் கணவர் அபிஷேக் பச்சனுடன் நடிகை ஐஸ்வர்யா ராய் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நட்சத்திர ஜோடி

முன்னாள் உலக அழகியும், முன்னணி இந்தி நடிகையுமான ஐஸ்வர்யா ராயும், அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்தனர். இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்குப் பின் கணவன்- மனைவி இருவரும் விழாக்களில் தம்பதி சமேதராய் ஆஜராகி வருகின்றனர். சினிமா விருது விழாவாக இருந்தாலும் சரி… பத்திரிகையாளர்கள் சந்திப்பாக இருந்தாலும் சரி… இருவரும் சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த நட்சத்திர ஜோடி சமீபத்தில் ஒரு பொது இடத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

திரைப்பட விழா

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் அண்மையில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்றது. இதற்காக நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மாமனார் அமிதாப்பச்சன் ஆகியோருடன் சென்றிருந்தார்.

ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார்கள். அங்கிருந்து இருவரும் ஜோடியாக திரைப்பட விழாவுக்கு புறப்பட்டனர். நடிகர் குணால் கபூரும் உடன் இருந்தார்.

கணவருடன் வாக்குவாதம்

அப்போது ஐஸ்வர்யா ராய் உரத்த குரலில் பலமாக பேச ஆரம்பித்தார். உடனே பக்கத்தில் இருந்த அபிஷேக் பச்சன் மனைவியிடம் மெதுவாக பேசு… என்று நாசூக்காக கூறினார். ஆனால் ஐஸ்வர்யா ராய் அதை கண்டுகொள்ளவில்லை. அவர் தொடர்ந்து உரத்த குரலில் பேசிக் கொண்டு இருந்தார்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த நடிகர் குணால் கபூர் அங்கிருந்து நைசாக நழுவி வேறு இடத்துக்கு சென்று விட்டார்.

உடனே மனைவி ஐஸ்வர்யா ராயை ஓட்டல் வராந்தாவில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்துக்கு அபிஷேக் பச்சன் அழைத்துச் சென்றார். அங்கு அவரை அமர வைத்து, பொறுமையாக பேசினார். ஆனால் ஐஸ்வர்யா ராய் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல், கணவருடன் உரத்த குரலில் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்.

அறைக்கு அழைத்துச் சென்றனர்

ஓட்டலில் வருவோர், போவோர் எல்லாம் இதை வேடிக்கை பார்த்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அபிஷேக் பச்சன் தர்மசங்கடத்துக்கு ஆளானார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த அவர், தனது மெய்க்காப்பாளரை அழைத்து மனைவி ஐஸ்வர்யா ராயை அவரது அறைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்.

உடனே ஐஸ்வர்யா ராயை அவர்கள் அழைத்துச் சென்று விட்டனர்.

 

 


தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தர் ராஜேந்திரன்

June 14th, 2008 பகுப்புகள்: *பொது, அறிவிப்பு, சற்றுமுன் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தர் ராஜேந்திரன்     

 

Tajnore

சென்னை: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் எம்.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான சுர்ஜித் சிங் பர்னாலா இன்று பிறப்பித்தார்.

இப்போது ராஜேந்திரன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனராக இருந்து வருகிறார்.

தஞ்சை பல்கலைக்கழக துணை வேந்தராக அவர் 3 ஆண்டு காலம் பதவி வகிப்பார் என ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.


சாகித்திய அகாதமியைக் கண்டித்து புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

June 8th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், அரசியல், இந்தியா, ஊழல், கலை-இலக்கியம், கிளர்ச்சி, சமூகம், தகவல், தமிழ், போராட்டம், மொழி | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | 6 மறுமொழிகள் » |

சாகித்திய அகாதமியில் புதுச்சேரிக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காததைக் கண்டித்து புதுச்சேரியில் இன்று (08-06-2008) காலை 11.00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், தமிழ் அமைப்புகள் சேர்ந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

சாகித்திய அகாதமியின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக புதுச்சேரி அரசின் பரிந்துரையின்படி மகரந்தன, தமிழக அரசின் பிரதிநிதியாக இராம.குருநாதன், பல்கலைக்கழக பிரதிநிதியாக இரா.மோகன் மற்றும் தமிழ்ச் சங்கப் பிரதிநிதியாக சிற்பி பாலசுப்ரமணியம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் தமிழ்மொழியின் ஒருங்கிணைப்பாளராக சிற்பி பாலசுப்ரமணியத்தை மற்ற மூன்று உறுப்பினர்களும் சேர்ந்து தேர்வு செய்தனர். மேலே உள்ள நான்கு பொதுக்குழு உறுப்பினர்களும் சேர்ந்து மேலும் 6 செயற்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இதன் அடிப்படியில் புதுச்சேரி மகரந்தன் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய மூவர் பெயரை ஒருங்கிணைப்பாளர் சிற்பி பாலசுப்ரமணியத்திடம் அளித்துள்ளார். ஆனால், இவர் பரிந்துரை செய்த ஒருவரையும் நியமிக்காமல் தன்னிச்சையாக தனக்கு வேண்டிய ஒருவரை சிற்பி நியமித்துள்ளார். பரிந்துரையின் அடிப்படையிலோ அல்லது மற்ற உறுப்பினர்களை கலந்தாலோசனையின் அடிப்படையிலோ அவர் தேர்வு செய்யாமல் தன்னிச்சையாக அவர் தேர்வு செய்துள்ளார். இது புதுச்சேரி இலக்கிய வட்டத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பணத்தில் இயங்கும் இத்தகைய நிறுவனங்கள் தமது உறுப்பினர்களுக்கே வெளிப்படை தன்மை இல்லாமல் இருக்கும் போது, பொதுமக்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் எப்படி இருக்கும் என எதிர்பார்க்க இயலும் என்று இந்த தமிழ் அமைப்புகள் கோருகின்றன.

மேலும் புதுச்சேரியில் சாகித்திய அகாதமி சார்பாக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஒன்பது திட்டமங்களை மகரந்தன் அளித்திருந்தார் அதில் அத்தனையும் அதன் ஒருங்கிணைப்பாளர் நிராகரித்துள்ளார். புதுச்சேரியோ அதன் அருகிலுள்ள மாவட்டங்கள் எதிலும் நிகழ்ச்சி எதற்கும் இதன் ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளிக்கவில்லை. பிறகு ஏன் புதுச்சேரி பகுதியிலிருந்து ஒரு பிரதிநிதி என்று புதுவையைச் சேர்ந்தவர்கள் கேள்வி எழுபபினர். சென்ற பத்து ஆண்டுகளாக புதுச்சேரியில் சாகித்திய அகாதமி சார்பாக இரண்டே இரண்டு நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்துள்ளன.

அத்துடன் ஆரோவில் (தமிழகம்) பகுதியைச் சேர்ந்த இரா.மீனாட்சி என்பவரை சிற்பி அவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் புதுச்சேரி பிரதிநிதியாக தேர்வு செய்துள்ளனர். அவர் தமிழ் இன விரோத சிந்தனை கொண்டவர். எனவே, அவரை திரும்பப் பெற வேண்டும். புதிதாக புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் கோரினர்.

புதுவைத் தமிழ்ச் சங்கம், தமிழ் எழுத்தாளர் கழகம், பெரியார் திராவிடர்க் கழகம், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழு, புதுச்சேரி பூர்வ குடிமக்கள் உரிமைப் பாதுகாப்பு பேரவை, மீனவர் விடுதலை வேங்கைகள், தமிழர் தேசிய இயக்கம், செம்படுகை நன்னீரகம், பூவுலகின் நண்பர்கள், சமூக நீதி போராட்டக் குழு இராவணன் பகுத்தறிவு இயக்கம், புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை உள்ளிட்ட 27 அமைப்புகள் சேர்ந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

100க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் ஒரு தொடக்கம் தான் “சாகித்திய அகாதமியின்” நடவடிக்கை ஏதும் மேற் கொள்ளாமல் புதுச்சேரியைத் தொடர்ந்துப் புறக்கணிக்குமானால் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ. சுகுமாரன் தெரிவித்தார்.


பாராசூட் பயிற்சி மையத்தில் புருணை சுல்தான்

May 24th, 2008 பகுப்புகள்: ஆளுமை, சற்றுமுன் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

பாராசூட் பயிற்சி மையத்தில் புருணை சுல்தான்

 
பெங்களூரில் உள்ள, ராணுவ வீரர்கள் பாராசூட் பயிற்சி பெறும் மையத்தை புருணை நாட்டு சுல்தான் தாருஸ் சலாம் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.

ராணுவ அதிரடிப் படையினர் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம், போர்க்களத்தில் எதிரி அணிகளுக்குப் பின்னால் இறங்கித் தாக்குவது, ஹெலிகாப்டர்கள் இறங்க முடியாத பகுதிகளில் பாராசூட் மூலம் ராணுவ வீரர்கள் குதிப்பது உள்ளிட்ட பயிற்சிகளை ராணுவ வீரர்கள் செய்துகாட்டினர். அவற்றை புருணை சுல்தான் பார்வையிட்டார்.

பாராசூட் மையத்தை 2 மணி நேரம் சுற்றிப் பார்த்த சுல்தான், அங்குள்ள உள்ளரங்க நவீன துப்பாக்கிசுடும் பயிற்சி மையத்தையும் அங்கு நிகழ்த்திக்காட்டப்பட்ட செயல்விளக்கத்தையும் பார்வையிட்டார்.
 
 


புகைப்படங்களும் செய்திகளும்

April 2nd, 2008 பகுப்புகள்: கருத்துப்படம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

நன்றி: தினமலர்


கொசோவா - கருத்துக்கணிப்பு

February 23rd, 2008 பகுப்புகள்: கருத்துக்கணிப்பு | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | ஒரு மறுமொழி » |


புகைப்படங்களும் செய்தியும்

February 2nd, 2008 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, இடஒதுக்கீடு, இந்தியா, கருத்துப்படம், கலை-இலக்கியம், கிரிக்கெட், குற்றம், கைது, சட்டம் - நீதி, சமூகம், சென்னை, தமிழ்நாடு, தொழிலாளர்கள், பொருளாதாரம், போராட்டம், மரணம், வணிகம், விளையாட்டு, வேலைநிறுத்தம், வேலைவாய்ப்பு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

அனைத்துப் புகைப்படங்களும் செய்திகளும்: தினமலர்

1. கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா நினைவு தினம்:

Host unlimited photos at slide.com for FREE!

2. அரசு உதவித்தொகை வழங்குவதில் உள்ள விதிமுறைகளை நீக்கக் கோரி போராட்டம்:

Host unlimited photos at slide.com for FREE!

தொடர்புள்ள செய்திகள்: The Hindu News :: Withdraw marks as criteria for SC-ST scholarships: CPI(M) | TN to maintain status quo on scholarship

3. நவீன பேருந்து நிறுத்த நிழற்குடை:

Host unlimited photos at slide.com for FREE!

4. தோழி சசிகலா - அதிமுக

Host unlimited photos at slide.com for FREE!

தொடர்புள்ள செய்திகள்: VIPs galore in TN Assembly

5. கொச்சியில் சர்வதேச புத்தகக் கண்காட்சி

Host unlimited photos at slide.com for FREE!

தொடர்புள்ள செய்திகள்: Fourth DC international book fair from February 1 to 11- ET Cetera - News By Industry - News - The Economic Times

6. ஆடி - இந்தியா

Host unlimited photos at slide.com for FREE!

தொடர்புள்ள செய்திகள்: Audi to spend 20 mln euros in India, assemble A4s: Reuters Business | Audi targets to sell 3,000 cars in India by 2010: - Automobiles-Auto-News By Industry-News-The Economic Times | Financial Express: Audi to spruce up dealership network

7. டில்லியில் குளிர்

Host unlimited photos at slide.com for FREE!

தொடர்புள்ள செய்திகள்: North and north-east shiver, two die of cold in UP - Politics/Nation-News-The Economic Times | Delhi weathers another chilly morning -Delhi-Cities-The Times of India

8. டில்லி தமிழ் சங்கத்தின் இசை விழா - வடக்கு வாசல்

Host unlimited photos at slide.com for FREE!

9. ஹூண்டாய் கார் தொழிற்சாலை

Host unlimited photos at slide.com for FREE!

தொடர்புள்ள செய்திகள்: Workers of Hyundai Motor arrested for trying to stage demo - Automobiles-Auto-News By Industry-News-The Economic Times | Hyundai plans to invest $US1b in India - Breaking News - Business

10. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இருபது-20 விளையாட்டு

Host unlimited photos at slide.com for FREE!

தொடர்புள்ள செய்திகள்: BBC SPORT | Cricket | Australia crush lamentable India

11 .காதலர் தின ரோஜாக்கள் - ஏற்றுமதி

Host unlimited photos at slide.com for FREE!

தொடர்புள்ள செய்திகள்: Rs 60 cr worth roses for export this Valentine's day

12. சமாஜ்வாதி கட்சி எம்பி அதிக் அகமது கைது

Host unlimited photos at slide.com for FREE!

தொடர்புள்ள செய்திகள்: UP don Atiq held in Delhi - Hindustan Times | Murder-accused MP Ateeq Ahmad held - India - The Times of India