தமிழக அரசியல் | சற்றுமுன்...




மீனவர்கள் மீதான இலங்கை தாக்குதல்: நாளை திமுக மாபெரும் உண்ணாவிரதம்

July 18th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், தமிழக அரசியல், தேர்தல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

மீனவர்கள் மீதான இலங்கை தாக்குதல்: நாளை திமுக மாபெரும் உண்ணாவிரதம்
    

 

Karunanidhi

சென்னை: இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தைக் கண்டித்தும், தமிழக மீனவர்களை தாக்குவதைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்கள், கடலோர நகரங்களில் திமுக சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திமுக முடிவு செய்துள்ளது. இதில் தமிழக மக்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்து கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக உயர்மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டம் நேற்று மாலை முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

இந்திய கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கண்மூடித்தனமாகக் கொல்லப்படுவதும், தேவையற்ற முறையில் கைதுசெய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

மனித உரிமை மீறல்களையும், கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கும் உரிமைகளையும் சட்ட விரோதமாகத் தடுத்து, நாள்தோறும் தமிழக மீனவர்ளுக்கு பல்வேறு இன்னல்களை இலங்கை கடற்படை ஏற்படுத்தி வருகிறது.

இந்த செயல்களால் ஆழ்ந்த வேதனையுற்ற திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி, இவ்வித அத்துமீறல் நடவடிக்கைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அரசின்கவனத்துக்கு பலமுறை எடுத்துச் சென்றுள்ளார்.

மேலும் திமுக பொருளாளர் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் ஒரு குழு சென்னையில் உள்ள இலங்கைக்கான தென்னிந்திய துணைத் தூதரை சந்தித்து தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடுகளையும், அத்துமீறல்களையும் கண்டித்து இந்த செயல்கள் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும் என்று 12.3.07 அன்று வலியுறுத்தியது.

இலங்கை துணைத் தூதர் இதுபோன்றநிகழ்வுகள் நடைபெறாது என்று இக்குழுவிடம் உறுதி அளித்தார். இருந்தாலும் தமிழக மீனவர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும், கைது செய்வதும் தொடர்ந்து நடக்கிறது. இந்த ஆண்டு ஜூலை 2 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இலங்கை கடற்படை பலதமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றும், படுகாயப்படுத்தியும், 900 மீனவர்களைக் கைது செய்தும், 300 மீன் பிடிப் படகுகளை கைப்பற்றியும், அவர்களது உடமைகளை சேதப்படுத்தியும் பல அட்டூழியங்களைச் செய்தது.

இவை தமிழக மீனவர்கள் மனதில் நீங்காத அச்சத்தையும், இதன் காரணமாக அவர்கள் மீன் பிடிக்கும் தொழிலை மேற்கொள்வதற்கு பெரும் தடையையும் ஏற்படுத்தி மீனவர்களின் ஒரே வாழ்வாதாரத்தை அழித்து வருகிறது.

கடலுக்குள் மீனவர்கள் சென்று மீன் பிடிப்பதை நிறுத்தி இருந்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவச்சங்க பிரதிநிதிகளை முதல்வர் கருணாநிதி, தலைமைச் செயலகத்திற்கு அழைத்துப் பேசிய பிறகு அவர்கள் திரும்பவும் பணிக்குத் திரும்ப ஒத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீதுஅடிக்கடி தேவையற்ற முறையில் நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு உரிய தலையீட்டின் வழியாக இலங்கை அரசிடம் இந்தப் போக்கை எடுத்துக்கூறி தமிழக மீனவர்களுக்கு எதிரான தேவையற்ற நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்தி இந்த செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

லட்சக்கணக்கான மீனவ குடும்பங்களை அச்சத்திலும், அச்சுறுத்தலிலும் இருந்து மீட்டு, அவர்களது வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கடுமையான நடவடிக்கை தேவைப்படுகிறது.

மீனவர்களின் உயிர், உடமை, உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சில தீர்மானங்கள் மூலம் வலியுறுத்தப்படுகிறது.

- உடனடியாக இலங்கை தூதரை அழைத்து தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதையும், தாக்கப்படுவதையும் கண்டிப்பான முறையில் குறிப்பிட்டு, கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவிக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்கள் தொடராமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

- இந்திய கடற்படையும், கடலோரப் பாதுகாப்புப் படையும் இணைந்து பன்னாட்டு கடல் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் பகுதிகளுக்குள் இலங்கை கடற்படை நுழைவதைத் தடுத்து உரிய பாதுகாப்பான நடவடிக்கைளை கையாண்டு, தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும், உடமை சேதங்களையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

- கொழும்பு சார்க் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளும்போது இந்தியாவின் கவலையையும், வருத்தத்தையும் இலங்கை அதிபரிடம் தெரிவித்து இதுபோன்ற தாக்குதல்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, இயல்பான சூழ்நிலையையும், அமைதியான சூழ்நிலையையும் உறுதி செய்ய வேண்டும்.

- மேற்கூறப்பட்ட இந்த தீர்மானங்களை வலியுறுத்துவதற்காகவும், மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவும் 19ம் தேதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாநிலம் முழுவதும் கடற்கரையோர நகரங்களிலும், ஊர்களிலும், மாவட்ட தலைநகரங்களிலும் ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைதாங்குகிறார். பிற ஊர்களில் அமைச்சர்கள் தலைமை தாங்குகிறார்கள்.


சென்னை : இடிக்கப்படுகிறது கலைவாணர் அரங்கம்

July 18th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, *பொது, அறிவிப்பு, சட்டமன்றம், தமிழக அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

இடிக்கப்படுகிறது கலைவாணர் அரங்கம்

1954-ல் சட்டப் பேரவைக் கூட்ட அரங்கமாக சில காலம் செயல்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கலைவாணர் அரங்கம் 2 மாதங்களில் இடிக்கப்பட உள்ளது.

இந்தியாவின் முதல் பிரதமர் நேரு உள்பட பல முக்கியத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்த அரங்கமாக அது விளங்கி வருகிறது. சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ளது கலைவாணர் அரங்கம். பல்வேறு அரசு மற்றும் தனியார் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கமாக இருந்து வருகிறது.

தற்போது, புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டப்பட உள்ளதால் கலைவாணர் அரங்கம் இடிக்கப்படுகிறது.

1954 முதல்…1954-ல் சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெறும் அரங்கமாக செயல்பட்டு வந்தது. பின்னர், 1957 - ம் ஆண்டு அந்த அரங்கத்துக்கு “பாலர் அரங்கம்’ என்று நேரு பெயர் சூட்டினார். குழந்தைகளின் கலை - இலக்கிய நிகழ்ச்சிகள் அந்த அரங்கத்தில் நடைபெற்றன.

குழந்தைகள் தொடர்பான திரைப்படங்களும், நல்ல தரமான ஆங்கிலப் படங்களும் திரையிடப்பட்டன. குழந்தைகளோடு, அப்பகுதியில் உள்ள பொது மக்களும் அரையணா, ஓரணா கொடுத்து திரைப்படங்களைக் கண்டு ரசித்தனர்.

கால ஓட்டத்தில்…காலம் செல்லச் செல்ல மக்களின் ரசனை மாற ஆரம்பித்தது. இதனால், பாலர் அரங்கத்தில் திரைப்படங்கள் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது. அதை வர்த்தக ரீதியிலான அரங்கமாக மாற்ற அரசு முடிவு செய்தது.

பொதுமக்கள் பயன்பெறும் வகையில், குறைந்த கட்டணத்தில் நாள் கணக்கு அடிப்படையில் அரங்கத்தை வாடகைக்கு விட முடிவு செய்யப்பட்டது.

1974 ஜனவரி 29-ம் தேதி அரங்கத்தின் பெயரை “கலைவாணர் அரங்கம்’ என்று மாற்றி அப்போதைய முதல்வர் கருணாநிதி அதைத் திறந்து வைத்தார்.

அதற்கான கல்வெட்டு அரங்க மேடையின் இரு புறங்களிலும் இப்போதும் காட்சி அளிக்கிறது.

செப்டம்பர் வரை மட்டுமே…

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் அருகே உள்ள காலியிடத்தில் 3 ஆயிரம் இருக்கைகள் கொண்ட புதிய அரங்கம் கட்டப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்புதல் அளித்த நிகழ்ச்சிகளை முடிக்க வசதியாக செப்டம்பர் வரை அவகாசம் அளிக்க வேண்டும் என்று கலைவாணர் அரங்க நிர்வாகிகள் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அரசும் அதற்கு ஒப்புக் கொண்டுள்ளதால், 2 மாதங்களில் கலைவாணர் அரங்கக் கட்டடம் இடிக்கப்படும். “கலைவாணர் அரங்கம்’ வரலாற்றில் முக்கிய நினைவுச் சின்னம் என்கின்றனர் அப்பகுதியில் வசிக்கும் மூத்த குடிமக்கள்.
 
 


முஸ்லிம் லீக் மாநாட்டில் சமய நல்லிணக்க விருது

June 21st, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், தமிழக அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

எம்.டி.ஸலாஹுத்தீன், வின்சென்ட் சின்னதுரை, பொன்னம்பல அடிகளார், நல்லகண்ணுவுக்கு விருது!

 

சென்னை கலைவாணர் அரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாட்டையொட்டி இன்று காலை 10.00 மணிக்கு சமய நல்லிணக்க விருது வழங்கும் விழா நடைபெற்றது.

துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர்  சையத் எம். ஸலாஹுத்தீன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் வின்சென்ட் சின்னத்துரை ஆகியோருக்கு சமய நல்லிணக்க விருதினை மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி வழங்கினார். அவர்களுக்கு முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. பொன்னாடை போர்த்தினார்.

இன்று காலை 10.00 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் விழா தொடங்கியது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் ஜி.எம். பனாத்வாலா ஸாஹிப், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, டி.பி. மைதீன்கான், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், மத்திய அமைச்சர் இ.அஹமது, ஆர்.எம்.வீரப்பன், கேரளாவிலிருந்து அஜீத் சாஹிப், கவிக்கோ அப்துல் ரஹ்மான், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமை தாங்குமாறு தலைமை நிலையச் செயலாளர் அபூபக்கர் முன்மொழிந்தார். அமைப்புச் செயலாளர் நெல்லை மஜீது வழிமொழிந்தார். செய்யது ஹபீப் அப்துல் ரஹ்மான், ஜமாஅத்துல் உலமா பேரவை மாநிலத் தலைவர் உமர் பாரூக் தாவூதி ஆகியோர் துஆ ஓதினர்.

ஸலாஹுதீன், இசை மாமணி எம்.எம்.யூசுப், மாநில உலமாக்கள் அணி தலைவர் ஹாமித் பக்ரீ, மார்க்க அணி அமைப்பாளர் கனிசிஷ்தி, இலக்கிய அணி அமைப்பாளர் தஜம்முல் முஹம்மது, அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் அப்துர் ரஹ்மான், மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம். செய்யது அஹமது, அஜீஸ் சாஹிப், அமெரிக்கா காயிதெமில்லத் பேரவை தலைவர் நூர்தீன், துபாய் ஸலாஹுத்தீன், மெஜஸ்டிக் கரீம் ஆகியோர் உரையாற்றினார்.

சையத் ஸலாஹுத்தீனின் சேவைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் அப்துல் பாசித் பாராட்டு வாசித் தார்.

கம்யூனிஸ்டுகளின் மூத்த தலைவர் ஆ. நல்லகண்ணு பற்றிய பாராட்டுக் குறிப்பினை மாநில அமைப்பாளர் கமுதி பஷீர் வாசித்தார்.

வின்சென்ட் சின்னத்துரை பற்றி அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர்  எம். அப்துல் ரஹ்மான் பாராட்டுக் குறிப்புரை வழங்கினார்.

பின்னர் இம்மூவருக்கும் தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமி சமூக நல்லிணக்க விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

http://www.muslimleaguetn.com/

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மணிவிழா மாநில மாநாட்டுத் தலைமையுரையும், மாநாட்டுப் பிரகடனமும்!

http://www.muslimleaguetn.com/news.asp

வந்தோரை வாழ வைப்பவர் செய்யிது ஸலாஹுத்தீன் ஆற்காடு வீராசாமி பேச்சு

http://www.muslimleaguetn.com/news.asp?id=28

பெண்கள் தமக்குத் தாமாகவே தடை விதித்துக் கொள்கிறார்கள்! -ஃபாத்திமா முஸஃப்பர் பேச்சு

http://www.muslimleaguetn.com/news.asp?id=27

மாநாட்டு நிகழ்ச்சிகள், பிறைக்கொடி பேரணி ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை!

http://www.muslimleaguetn.com/news.asp?id=26

 

 

 

 


தமிழகம் குஜராத்தாக மாறும்: கனிமொழி எச்சரிக்கை

June 16th, 2008 பகுப்புகள்: தமிழக அரசியல், தமிழ்நாடு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

தமிழகம் குஜராத்தாக மாறும்: கனிமொழி எச்சரிக்கை

மதவாத சக்திகளை ஆதரிக்கும் ஜெயலலிதாவை வளரவிட்டால், குஜராத்தைப் போல் தமிழகமும் வன்முறைக் களமாக மாறும் அபாயம் உள்ளது என்று மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார்.

கடலூர் திமுக மகளிரணி மாநில மாநாட்டில் பெரியாரின் படத்தை திறந்துவைத்து அவர் பேசியது:

பொதுநலத்துக்காக எதிரிகளைக் கொல்வது கூட நியாயம் என்று பகவத்கீதைக்கு திலகர் உரை எழுதினார். மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே தனது செயலுக்கு இதே வரியைச் சொல்லித்தான் நியாயம் கற்பித்தார்.

மதவெறி கொலைவெறியைத்தான் தூண்டும் என்பதை குஜராத்தில் கண்டோம். பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என எத்தனைப் பேர்களை அவர்கள் கொன்றார்கள் என்றும் பார்த்தோம்.

இந்த கொலைகாரர்களை மோடி பாராட்டியதை ஒரு பத்திரிகை வெளியிட்டிருந்தது. அப்படிப்பட்ட மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து விருந்தும் அளிக்கிறார் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா.

அவரது ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சாலைப் பணியாளர்களுக்கும் எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்த இரண்டும் ஒரே வன்முறைதான். இவர்களை வளரவிட்டால் தமிழ்நாடு குஜராத்தாக மாறும் அபாயம் உள்ளது.

சேது திட்டத்தை சேது”ராம்’ திட்டம் என்று பெயர் மாற்றினாலும் பரவாயில்லை நிறைவேற்றுங்கள் என்று கருணாநிதி கூறினார். அதற்கு புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள நண்பர் கருணாநிதியின் நாத்திகம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

ராமன் யார்? என்ற கேள்வியை கருணாநிதி எப்போதும் கேட்பார். அவர் மட்டுமல்ல; அவரது வாரிசுகள், வாரிசுகள் என்றால் குடும்பத்தினர் மட்டுமல்ல, தமிழ்க் குடும்பத்தின் ஒவ்வொருவரும் இந்தக் கேள்வியைக் கேட்பார்கள்.

சமூகத்துக்குப் பயன்படும் என்றால் நான் விபூதிகூட பூசுவேன் என்று பெரியார் கூறினார். அந்தவகையில்தான் ராமனின் பெயர்தானே வைத்துவிட்டுப் போங்கள் என்று கருணாநிதி கூறினார்.

எனவே, தெரியாமல் பேசி வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள் என்று அந்த நண்பருக்கு பாசத்தோடு சொல்லிக்கொள்கிறேன்.

வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்ற நிலை மாறி, வட நாட்டவர்கள் தமிழகத்திடம் ஆலோசனை கேட்கும் காலம் வந்துள்ளது. அதற்குக் காரணம் திராவிட இயக்கமும் அதன் கொள்கைகளும்தான்.

சேதுசமுத்திரத் திட்டத்தை பொருளாதாரம், சுற்றுச்சூழல் என காரணங்களை கூறி எதிர்த்தார்கள். அவர்களுக்கு உரிய பதில் அளித்துவிட்டோம். மாற்று வழி இருக்கிறதா என்று கேட்டார்கள். அதற்கும் வழியில்லை என்று தெரிவித்துவிட்டோம்.

தற்போது அவர்கள் கையில் எடுத்துள்ள ஆயுதம் அறிவுப்பூர்வமானது அல்ல! சேதுசமுத்திரத் திட்டம் நமக்கெல்லாம் மாற்றத்தைக் கொண்டுவரும் திட்டம். நமது சுயமரியாதையை கேள்விக்குறியாக்கும் ஒன்றாக இந்தத் திட்டத்தின் எதிர்ப்பு மாறியுள்ளது. இதை விட்டுவிட்டோம் என்றால், நாம் இத்தனை ஆண்டுகள் போராடிப் பெற்றதெல்லாம் இழந்ததாகி விடும். இத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பகுத்தறிவு தீபம் ஏந்தி முதல்வர் கருணாநிதி பின்னால் அணி வகுப்போம். நமது உரிமையை யாருக்காகவும் விட்டுத் தரமாட்டோம் என்றார் கனிமொழி.
 
 


அழகிரி-ஸ்டாலின் பூசல் அதிகரிப்பு: நெருங்கி வரும் மாறன் சகோதரர்கள்

June 3rd, 2008 பகுப்புகள்: தமிழக அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

அழகிரி-ஸ்டாலின் பூசல் அதிகரிப்பு: நெருங்கி வரும் மாறன் சகோதரர்கள்     

 

Dayanithi and Stalin

சென்னை: முதல்வர் கருணாநிதி தனது 85வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது புதல்வர்களான மு.க.அழகிரிக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் இடையிலான இடைவெளி பலமாக அதிகரித்துள்ளது. அதேசமயம், பேரன்களான மாறன் சகோதரர்கள் கருணாநிதி, ஸ்டாலினுடன் வேகமாக நெருங்க ஆரம்பித்துள்ளனராம்.

இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் முக்கியமானவரான கலைஞர் கருணாநிதி இன்று தனது 85வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். சில நாட்களுக்கு முன்பு தனக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் தேவையில்லை என்று கூறியிருந்தார் கருணாநிதி.

இதனால் திமுகவினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், தொண்டர்களை சந்திப்பதே எனக்குப் புத்துணர்ச்சி என்று கூறுபவர் கருணாநிதி. அப்படிப்பட்டவரே பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று கூறியதால் திமுகவினர் பெரும் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

ஆனால் முதல்வர் பிறந்தநாளே தேவையில்லை என்று கூறியதற்கு அவரது புதல்வர்கள் அழகிரி, ஸ்டாலினுக்கு இடையே மீண்டும் தலை தூக்கியுள்ள விரிசலே காரணம் எனக் கூறப்படுகிறது.

ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியும், அழகிரிக்கு கட்சியில் துணைத் தலைவர் அல்லது துணை செயலாளர் பதவியும் தரப்பட வேண்டும்  என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு திமுகவின் முக்கியத் தலைவர்கள் பலர் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அழகிரிக்கு முக்கியப் பொறுப்பு கொடுப்பதை ஸ்டாலினும், வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட சில மூத்த தலைவர்கள் விரும்பவில்லையாம்.

இதுகுறித்து முதல்வரிடம் அவர்கள் தெளிவாக கூறியுள்ளனர். ஆனால் மறுபக்கம் அழகிரி தரப்பிலிருந்து பொதுக்குழுக் கூட்டத்திற்கு முன்பு பதவி கொடுத்தே ஆக வேண்டும் என்று நெருக்கடி தரப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட பூசலால்தான் ஸ்டாலின் கோபித்துக் கொண்டு பெங்களூரில் உள்ள தனது சகோதரி செல்வி வீட்டுக்குப் போய் விட்டார் என்று தெரிகிறது.

இங்கு இன்னொரு முக்கிய நிகழ்வும் நடந்துள்ளதை சொல்லியாக வேண்டும். மதுரை தினகரன் அலுவலகம் மீதான தாக்குதலுக்குப் பிறகு மாறன் சகோதரர்களுக்கும், கருணாநிதி குடும்பத்தினருக்கும் இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டு விட்டது. அது இப்போது படுவேகமாக அடைபட்டு வருகிறதாம்.

குறிப்பாக ஸ்டாலினுக்கும், மாறன் குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் பழைய நட்பு துளிர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் முக்கிய பங்காற்றியது ஸ்டாலினின் மகன் உதயநிதி என்கிறார்கள். தந்தைக்கும்-மாறன் சகோதரர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் அதிக அக்கறை காட்டினார் என்கிறார்கள்.

அதேபோல கருணாநிதிக்கும் கூட மாறன் சகோதரர்கள் மீது முன்பு போல தீவிர வருத்தம் இல்லையாம்.

வரும் லோக்சபா தேர்தலில் திமுக வெற்றி பெற சன் டிவியின் ஒத்துழைப்பும், உதவியும் மிக முக்கியம் என ஸ்டாலின் நினைக்கிறாராம்.

இந்த மாற்றங்களுக்கு உதயநிதியை விட மிக முக்கிய காரணமாக விளங்கியவர் கருணாநிதியின் புதல்வி செல்வி.

இந்த நிகழ்வுகள், காரணமாக தற்போது அழகிரி கிட்டத்தட்ட தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக ஸ்டாலின் மற்றும் மாறன் சகோதரர்கள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இருந்தாலும் இதுகுறித்து அழகிரி சற்றும் கவலைப்படவில்லை. காரணம் அவரது பலம் வேறு, களம் வேறு. தனக்குப் பதவி வேண்டும் என்பதில், அழகிரி மிகத் தீவிரமாக உள்ளாராம்.

அவரை ஒரேயடியாக புறக்கணித்து விட முடியாது. அதேசமயம், ஸ்டாலின் கோரிக்கையையும் புறக்கணித்து விட முடியாது என்பதால் முதல்வர் கருணாநிதி இந்த மோதலுக்கு மத்தியில் என்ன முடிவு எடுப்பது என்பதில் சற்றே தடுமாற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால்தான் பொதுக்குழுவில் அழகிரிக்குப் பதவி கொடுப்பது குறித்தோ, ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது குறித்தோ முடிவெடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இடையில் காணாமல் போயிருந்த அழகிரி, ஸ்டாலின் பூசல் மீண்டும் புதிய வடிவில் வெடித்திருப்பதை திமுகவினர் கவலையுடன் கவனித்து வருகின்றனர். அதேசமயம், மாறன் சகோதரர்கள் மீண்டும் கருணாநிதி குடும்பத்துடன் நெருங்கி வருவது அவர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.


உறவினருக்கு பரிந்துரை: அமைச்சர் பூங்கோதை ராஜினாமா

May 14th, 2008 பகுப்புகள்: ஊழல், சட்டம் - நீதி, தமிழக அரசியல், தமிழ்நாடு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கிய தனது உறவினரை காப்பாற்றுவதற்காக ஏடிஜிபியிடம் பரிந்துரை செய்த விவகாரத்தில், தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

DMK Minister - Resignation for Corruption: Phone tapping by Subramania Swamyதமிழக மின்வாரியத்தில் பணிபுரியும் துணை இன்ஜினியர் ஜவஹர் என்பவர் சமீபத்தில் லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கினார். இவர் அமைச்சர் பூங்கோதையின் உறவினர் ஆவார். ஜவஹரை ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்றும்படி, தமிழக ஏடிஜிபி உபாத்யாயாவை அமைச்சர் பூங்கோதை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இந்த தொலைபேசி உரையாடல் அடங்கிய சிடியை, ஜனதா தளம் தலைவர் சுப்பிரமணியம் சாமி ஆதாரத்துடன் வெளியிட்டார். இதுகுறித்து கவர்னரிடமும் அவர் புகார் செய்தார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஓ. பன்னீர் செல்வம் பேரவையில் இன்று எழுப்பிய பிரச்சனைக்கு முதலமைச்சர் கருணாநிதி பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தற்போதைய விஞ்ஞான யுகத்தில் ஒருவர் பேசுவதை மற்றொருவர் பதிவு செய்வது எளிதானது. எனினும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியுடன் பேசியதாக செய்தி வருவதற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர் அமைச்சர் என்பது வேதனையை தருகிறது.

இதற்கு பொறுப்பேற்று தனது பதவி விலகல் கடிதத்தை அமைச்சர் பூங்கோதை அனுப்பி வைத்துள்ளார். உறவினரை காப்பாற்ற முயற்சிக்கும் செயல் வெட்கப்பட வேண்டிய ஒன்று. தனது தவற்றை உணர்ந்து அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அவரது ராஜினாமா கடிதம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து வேறொரு விசாரணைக் குழு தேவையா? அல்லது தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்து விசாரிக்கும் குழுவே போதுமா? என்பது குறித்தும் பரிசீலனை செய்யப்படுகிறது.

லஞ்சம் வாங்குவோருக்கு ஆதரவாக செயல்படுவது குற்றம் ஆகும். நிச்சயம் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மன்னிப்பு கிடையாது.

இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

நன்றி: எம்.எஸ்.என் & யாஹு

மேலும் விவரங்களுக்கு: Tamil Nadu minister quits after expose - National News – News – MSN India - News


ஓகனெக்கல் குடிநீர் திட்டம் நிறுத்தி வைப்பு : தமிழக முதல்வர்

April 5th, 2008 பகுப்புகள்: கிளர்ச்சி, தமிழக அரசியல், நதிநீர் பிரச்சினை | தொகுப்பாளர்: மணியன் | ஒரு மறுமொழி » |

kalainjar mu.karuNanithi

காவிரி நீரை தடுத்து தர்மபுரி,கிருஷ்ணகிரி மாவட்டங்களின் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க 1340 கோடி செலவில் திட்டமிடப்பட்ட ஓகனெக்கல் குடிநீர் திட்டத்தை கர்நாடகாவில் எழுந்த எதிர்ப்பின் பின்னணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமையும்வரை நிறுத்தி வைப்பதாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இன்று கூறினார்.

Hogenakkal water project on hold

Karunanidhi puts Hogenakkal project on hold


தட்ஸ்தமிழ் தளத்திலிருந்து அவரது முழு அறிக்கை:
ஓகேனக்கல்லிருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் வாழும் முப்பது லட்சம் தமிழர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடி தண்ணீர் வழங்க ரூ. 1,334 கோடி ஜப்பான் நாட்டு வங்கியின் நிதி உதவி பெற்று- முறைப்படி பெற வேண்டிய தடையிலா சான்றுகள், அனுமதிகளையெல்லாம் படிப்படியாகப் பெற்று- திட்டத்தை நிறைவேற்ற பணிகளை மேற்கொண்ட நிலையில்;

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலை மனத்தில் வைத்துக் கொண்டு; அந்த மாநிலத்து பா.ஜ.க. போன்ற சில கட்சிகளும் -எப்போதுமே தமிழ், தமிழர் நலன்களுக்கு விரோதமாகச் செயல்படும் சமூக விரோதிகளும் ஓகேனக்கல் திட்டத்துக்கு எதிர்ப்பு என்று குரல் எழுப்பி அதையொட்டி வன்முறைச் செயல்களிலும் ஈடுபடத் தொடங்கினர்.

இதை நான் ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்டி, மத்திய அரசுக்கு தெரிவித்தது மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தில் உள்ள கட்சிகளும், அரசும், இத்திட்டம் நிறைவேறுவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தது பயனில்லாமல் போய், கர்நாடகத்தில் தமிழர்களைத் தாக்கும் அளவுக்கு போய்,

வாகனங்கள்-உடைமைகளுக்கு சேதம் விளைவிக்கின்ற அளவுக்கும் வன்முறைச் சேட்டைகளைத் தொடரத் தொடங்கியதால்- அதன் எதிரொலியாக தமிழகத்திலும் எதிர்ப்பு நிலை தவிர்க்க முடியாததாகி சில விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன.

இரு மாநில மக்களும் சகோதர உணர்வுடன் வாழ வேண்டுமென்று நான் பல காலமாகத் தொடர்ந்து கூறி வருகிற வேண்டுகோள் புறக்கணிக்கப்படுகிறதே என்ற எனது வேதனைக்கு மருந்தாக இங்குள்ள கட்சிகள் பலவும், கட்சித் தலைவர்களும், தமிழ்த் திரை உலகத்துக் கலைஞர் பெரு மக்களும் அணி திரண்டு,

அமைதியான முறையில் அறவழியில் ஒரு பிரமாண்டமான உண்ணா நோன்பை மேற்கொண்டு நமது அரசும் மக்களும் எடுத்துரைக்கும் நியாயத்தை இந்தியா முழுக்க சுட்டிக் காட்டினர்.

இந்தத் தமிழ் உணர்வை போற்றுவதுடன் இதயமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் எழுந்துள்ள கோபமும் கொந்தளிப்பும் மேலும் தொடர்ந்து- சகோதர மாநிலங்களான தமிழகம் கர்நாடகத்திற்கிடையே நிரந்தரப் பகை மூள்வதை இந்திய ஒருமைப்பாட்டிலும் இறையாண்மையிலும், ஒற்றுமையிலும் நம்பிக்கையுள்ள யாராலும் ஏற்றுக் கொள்ள இயலாது.

கர்நாடகத்தில் விரைவில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த விரும்பத்தகாத வன்முறைகள் தொடரக் கூடாது.

நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும்- இனி நடப்பவைகள் நல்லவைகளாக இருப்பதற்கு நாம் தான் நம்மை முன்னிருத்தி அமைதி அணி வகுப்பை நடத்திட வேண்டும்.

கர்நாடகத்தில் இன்று நடந்திடும் கவர்னர் ஆட்சி முடிவுற்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைய இருக்கும் புதிய ஆட்சி மலருவதற்கு இடையேயுள்ள சில நாட்கள் மட்டுமே அவசியம் கருதி பொறுத்திருப்போம்.

அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்த பிறகு; அந்த ஆட்சி நமது நியாயத்தை உணரும் என்றும்-1998ல் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி இத்திட்டம் நடக்குமென்றும்- நடப்பதற்கு வலியுறுத்துவோம் என்றும்- அதற்கு நியாயம் கிடைக்குமென்றும் அசையாத நம்பிக்கையோடு, இப்போது தற்காலிகமாக இந்தப் பிரச்சினையில் அமைதி காப்போம்.

அதன் பிறகும் இதே நிலை நீடிக்குமென்றால்; தமிழர்கள் தங்கள் உடைமைகளையும், உயிர்களையும் இழந்தாலும் கூட, உரிமைகளையும் இழந்திட முன் வரும் சுயமரியாதை அற்றவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதை உலகத்திற்கு உணர்த்துவோம்.

அந்த தன்மா