விழா | சற்றுமுன்...




சீனாவில் ஒலிம்பிக் கிராமம் திறப்பு

July 27th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், விளையாட்டு, விழா | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

சீனாவில் ஒலிம்பிக் கிராமம் திறப்பு

விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கான ஒலிம்பிக் கிராமம் சீனாவில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது. போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்கள் சுமார் 16,000 பேர் தங்கும் வகையில், 66 ஹெக்டேர் பரப்பளவில் பிரமாண்ட கிராமத்தை சீன அரசு கட்டியுள்ளது.

இந்த ஒலிம்பிக் கிராமம் முறைப்படி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
 
 


ஒலிம்பிக் தொடக்க விழா: மன்மோகனுக்கு அழைப்பில்லை?- சீனா விளக்கம்

July 18th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், விளையாட்டு, விழா | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஒலிம்பிக் தொடக்க விழா: மன்மோகனுக்கு அழைப்பில்லை?- சீனா விளக்கம்

வரும் ஆகஸ்ட்டில் சீனாவில் நடைபெறும் ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்கேற்க இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அந்நாடு அழைப்பிதழ் அனுப்பவில்லை என வெளியான செய்தியை சீன வெளியுறவுத் துறை மறுத்துள்ளது.

ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சீனா அழைப்பிதழ் அனுப்பியுள்ளதாகவும், பிரதமர் மன்மோகனுக்கு அழைப்பிதழ் அனுப்பவில்லை எனவும் இந்திய பத்திரிகைகள் சிலவற்றில் வெளியான செய்திகளை சீனா மறுத்துள்ளது.
 
 


கொல்கொத்தா-தாக்கா தொடர்வண்டி சேவை துவங்கியது

April 14th, 2008 பகுப்புகள்: இந்தியா, இரயில், விழா | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

43  வருடங்களுக்குப் பிறகு கொல்கொத்தாவிற்கும் பங்களாதேச தலைநகர் தாக்காவிற்கும் இடையேயான தொடர்வண்டி சேவைகள் இன்று துவங்கியது; இரு நகரங்களிலிருந்தும் ஒரே சமயத்தில் ‘மைத்ரி எக்ஸ்பிரஸ்’ –நட்பு விரைவுவண்டி– தனது பயணத்தை இரு அண்டைநாடுகளுக்கும் இடையேயான நட்பை வலுப்படுத்துமாறு துவங்கியது.

ஆறு பெட்டிகள் கொண்ட தொடர்வண்டி அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது; இன்று காலை 0710 மணிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி தூரத்திலிருந்தே புறப்பட சமிக்ஞை கொடுக்க வங்காள புதுவருட தினமான முதல் பைசாகி நாளில் தனது 15 மணி பயணத்தை ஆரம்பித்தது. அதே நேரம் தாக்காவின் கண்டோன்மெண்ட் நிலையத்திலிருந்து கொல்கொத்தாவை நோக்கி அவர்களது தொடர்வண்டியை பயணிகளுக்கு பூக்கொத்துகள் கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

1965 இல் பங்களாதேஷ் சண்டையின் போது இந்த சேவை நிறுத்தப்பட்டிருந்தது. 1996இல் இரு நகரங்களுக்கும் இடையே பேருந்து சேவை துவக்கப்பட்டது.

538 கிமீ தூரத்தில் 120 கி.மீ தூரம் இந்தியாவில் உள்ளது; மற்றவை பங்களாதேச பரப்பில் உள்ளது.

Kol-Dhaka train services resume after 43 yrs


ஆஸ்திரேலியாவில் விருது பெற்ற தமிழ்நாட்டு டாக்டருக்கு சேலத்தில் பாராட்டு விழா

February 24th, 2008 பகுப்புகள்: ஆஸ்திரேலியா, மருத்துவம், விழா | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஆஸ்திரேலியாவில் விருது பெற்ற தமிழ்நாட்டு டாக்டருக்கு சேலத்தில் பாராட்டு விழா

ஆஸ்திரேலியாவில் மருத்துவத்துறையில் சிறந்த சேவைக்காக அந்நாட்டின் உயரிய விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் லட்சுமணனுக்கு சேலம் இந்திய மருத்துவச் சங்க கட்டிடத்தில் நேற்று பாராட்டு விழா நடைப்பெற்றது.
தமிழகத்தைச் சேர்ந்தவர் டாக்டர் லட்சுமணன் இவர். சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவ க்கல்லூரியில் கடந்த 1958 ஆம் வருடம் படித்தார். இவருடன் மொத்தம் 108 மாணவர்கள் அங்கு படித்தனர். இவர் பின்பு 1970 வருடம் ஜூன் மாதம் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்று பல மருத்துவமனைகளில் கண் டாக்டராக பணிபுரிந்தார். பின் ஆஸ்திரேலியாவிலேயே நிரந்தரமாக தங்கி மருத்துவச் சேவைகளை செய்தார். இதற்காக அந்த நாட்டு அரசாங்கம் அந்நாட்டின் உயரிய விருதான ஆர்டன் ஆப் ஆஸ்திரேலியா மெடல் என்ற விருதை வழங்கி கௌரவித்தது. இதனால் அவரது புகழ் இந்தியா முழுவதிலும் பரவியது.

http://www.thinaboomi.com/2008/feb/24/districts/district44.php
 


துபாயில் திமுக மற்றும் அதிமுக பிரமுகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி

January 28th, 2008 பகுப்புகள்: அமீரகம், அரசியல், துபாய், விழா | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

துபாயில் திமுக மற்றும் அதிமுக பிரமுகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி
 
திமுக மற்றும் அதிமுக பிரமுகர்கள் ஒரே மேடையில் வீற்றிருப்பது தமிழகத்தைப் பொறுத்தவரையில் பெரிதும் அபூர்வ நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது. ஆனால் துபாயில் அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு வளைகுடா தமிழர் பேரவை 28.01.2008 திங்கட்கிழமை நடத்திய பாராட்டு விழாவில் திமுகவைச் சேர்ந்த கும்பகோணம் நகரசபைத் தலைவர் அன்பு மற்றும் அதிமுகவைச் சேர்ந்த திருவாரூர் மாவட்ட அதிமுக தொழிற்சங்க தலைவர் மலர்வேந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
 
துவக்கமாக கபீர் வரவேற்றார். ஸ்கை எக்ஸ்பிரஸ் இயக்குநர் செய்யது அப்துல் காதர் ( சினா தானா ) தனது உரையில் சமூக நல்லிணக்கத்தின் அவசியம் குறித்து விவரித்தார். கல்வியின் அவசியம், புரிந்துணர்வு உள்ளிட்டவை குறித்து உரை நிகழ்த்தினார்.
 
மலர்வேந்தன தனது உரையில் அமீரக மன்னராட்சி மதிக்கத்தக்க வகையில் இருப்பது குறித்து பாராட்டு தெரிவித்தார். நமது நாட்டில் சமதர்மம், உரிமை கொடுத்திருப்பது பல்வேறு விபரீதமுடிவுகளைத் தந்து வருகிறது. இந்தியா குறிப்பாக தமிழகம் இன்று பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறது. எதிர்காலத்தில் வெளிநாட்டினரே நமது நாட்டிற்கு வேலை தேடி வரும் சூழல் ஏற்படலாம்.
 
அன்பு தனது உரையில் தமிழகத்தில் இருதுருவங்களாக இருக்கும் மலர்வேந்தனும், தானும் இங்கு ஒரே மேடையில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார். அமீரகத்தில் இருக்கும் இத்தகைய தமிழர் பண்பாடு தமிழகத்திலும் வர வேண்டும் என தான் விரும்புவதாக குறிப்பிட்டார். மனித உயிரின் முக்கியத்துவத்தை உணர்ந்து மருத்துவசேவையை செய்து வருவதாகக் குறிப்பிட்டார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது வருமானத்தை முறையாக சேமித்து எதிர்காலத்திற்கு பயனளிக்கும் வண்ணம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
 
சங்கமம் தொலைக்காட்சி இயக்குநர் கலையன்பன் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர். விழாவில் அஜ்மான் மூர்த்தி, சபீர் அஹ்மது, ஜெயந்தி சுரேஷ், குடந்தை இஸ்லாமுதீன், அண்ணாதுரை உள்ளிட்டோர் கௌரவிக்கப்பட்டனர்.
 
ஆல்பர்ட் நன்றி கூறினார். அன்வர் பாஷா தொகுத்து வழங்கினார்.விழாவில் பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 
 


“கலகம்’ நூல் வெளியீட்டு விழா

January 28th, 2008 பகுப்புகள்: பதிவுலகம், விழா | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

“கலகம்’ நூல் வெளியீட்டு விழா

வெண்ணிலவன் எழுதிய “கலகம்’ என்ற நூலின் வெளியீட்டு விழா அண்ணாமலைப் பல்கலை. நூலக அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் நூலை வெளியிட்டார். தொழிற்கல்வி பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என மத்திய அரசின் புதிய விதியை கண்டித்து, வரும் ஜன. 30-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்…….

www.dinamani.com


திருத்தணி: முப்பெரும் விழா

January 28th, 2008 பகுப்புகள்: விழா | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

முப்பெரும் விழா

திருத்தணியில் ஏழாவது வட்ட அப்துல் கலாம் இளைஞர்கள் நற்பணி மன்றம் சார்பில் குடியரசு தினவிழா, ரத்ததான முகாம், நோட்டு புத்தகம் வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா மன்ற தலைவர் நரசிம்மன் தலைமையில் நடந்தது. ஏழாவது வார்டு கவுன்சிலர் ராமமூர்த்தி வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக தி.மு.க., நகர செயலரும், முன்னாள் நகராட்சி தலைவர் சந்திரன் முப்பெரும் விழாவை துவக்கி வைத்தார். முதலில் தேசிய கொடி முன்னால் நகராட்சி தலைவர் ஏற்றினார். பின்னர் நடந்த ரத்ததான முகாமில் நுõற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் வழங்கினர். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங் கப்பட்டது. இளைஞர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. குடியரசு தினவிழாவை முன்னிட்டு திருத்தணி ரோட்டரி சங்கம் சார்பில் இலவச ரத்ததான முகாம் ஜோதிசாமி தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைவர் நரசிம்மலு தலைமையில் நடந்தது. ரயில்வே அர்பன் வங்கி அதிகாரி குமரவேல் வரவேற்றார்.

www.dinamalar.com


அமீரகத்தில் இந்திய குடியரசு தினவிழா கோலாகலம்

January 27th, 2008 பகுப்புகள்: அமீரகம், துபாய், விழா | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

அமீரகத்தில் இந்திய குடியரசு தினவிழா கோலாகலம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபியில் இந்திய தூதர் தல்மிஷ் அஹமதும் துபாயில் இந்திய துணைத் தூதர் வேணு ராஜாமணி மற்றும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்திய சங்கங்களிலும் இந்திய குடியரசு தின விழா இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

http://www.gulfnews.com/nation/Society/10185001.html

http://www.khaleejtimes.com/DisplayArticleNew.asp?xfile=data/theuae/2008/January/theuae_January813.xml&section=theuae&col=

http://www.godubai.com/gulftoday/article.asp?AID=26&Section=Home


சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின விழா

January 26th, 2008 பகுப்புகள்: சவூதி, விழா | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின விழா

சவுதி அரேபியாவில் நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் இந்திய தூதர் எம்.ஓ.எச். பாரூக் இந்திய தேசிய கொடியை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து இந்திய தேசிய கீதமும், தேச பக்திப் பாடல்களும் பாடப்பட்டன.

இந்திய மாணவர்கள வரைந்த ஓவியங்கள் அடங்கிய கண்காட்சியையும் இந்திய தூதர் துவக்கி வைத்தார். விழாவில் 500 க்கும் மேற்பட்ட இந்திய மக்கள் பங்கேற்றனர்.

http://www.yahind.com/news/directory.php?id=1045

http://www.yahind.com/articles/directory.php?id=297


அஜ்மானில் முப்பெரும் விழாவில் அரபியரைக் கவர்ந்த தமிழக கரகாட்டம்

January 25th, 2008 பகுப்புகள்: அமீரகம், விழா | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

அஜ்மானில் முப்பெரும் விழாவில் அரபியரைக் கவர்ந்த தமிழக கரகாட்டம்
 
அஜ்மான் அமீரக தமிழர்கள் அமைப்பு மற்றும் ஷார்ஜா தமிழ்நாடு பண்பாட்டுக் கழகம் 25.01.2008 வெள்ளிக்கிழமை அஜ்மான் ஜுவல் பேலஸில் நடத்திய பக்ரீத், கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் ஆகிய முப்பெரும் விழாவில் தேசிய விருது பெற்ற ரமேஷின் கரகாட்டத்தை சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த அரபியரைக் கவர்ந்திருந்தது.
 
துவக்கமாக அஜ்மான் அமீரக தமிழர்கள் அமைப்பின் மூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.
 
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஷேக் காலித் பின் சயீத் அல் நுயமி, முஹம்மது அப்துல்லாஹ் அல்வான், சுல்தான் அப்துல்லாஹ் ராஷித் அல் மத்ரூஸி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
சென்னை உலக நட்புறவுக் கழகத்தின் சார்பில் ‘சாதனையாளர்’ விருது இலக்கியத்திற்காக கவிஞர் பா. இராமலிங்கம், மருத்துவ சேவைக்காக குடந்தை அன்பு மருத்துவமனை நிறுவனர் சாக்கோட்டை க. அன்பழகன், கல்விப் பணிக்காக நவநீதகிருஷ்ணன், சிவ் ஸ்டார் பவன் கோவிந்தராஜன், அண்டா டிராவல்ஸ் மேலாளர் பொதக்குடி ஜெய்னுலாபுதீன், சென்னை டாக்டர் பி. தங்கராஜ், டாக்டர் சுந்தரம், பாபு தாமஸ் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது.

மேலும்

http://muduvaihidayath.blogspot.com/


துபாயில் அமீரக இந்திய நட்புறவுப் பேரவையின் இந்திய குடியரசு தினவிழா

January 25th, 2008 பகுப்புகள்: அமீரகம், துபாய், தோஹா, விழா | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

துபாயில் அமீரக இந்திய நட்புறவுப் பேரவையின் இந்திய குடியரசு தினவிழா

துபாயில் அமீரக் இந்திய நட்புறவுப் பேரவையின் சார்பில் இந்திய குடியரசு தின விழா 26.01.2008 சனிக்கிழமை மாலை 8.30 மணிக்கு கரூத் ( Garoud ) ஈட் அண்ட் டிரிங்க் உணவக கூட்ட அரங்கில் நடைபெற இருக்கிறது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக நைஜீரியாவுக்கான முன்னாள் இந்திய தூதரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சையத் சஹாபுதீன் கலந்து கொள்ள இருக்கிறார். கத்தாரில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று விட்டு துபாய் வருகிறார்.

நிகழ்ச்சி குறித்து மேலதிக விபரங்களுக்கு அப்துல் ரசாக் 050 - 1973609 எனும் கைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

http://www.milligazette.com/Archives/2004/16-30Apr04-Print-Edition/1604200450.htm


ஓமன் நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலித்த மஸ்கட் திருவிழா

January 25th, 2008 பகுப்புகள்: ஓமன், பொழுதுபோக்கு, விழா | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | ஒரு மறுமொழி » |

ஓமன் நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலித்த மஸ்கட் திருவிழா

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் ஒன்பதாவது ஆண்டாக 26 நாட்கள் நடைபெற்ற மஸ்கட் திருவிழா ஓமன் நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக இருந்தது.

http://www.gulfnews.com/news/gulf/oman/10183959.html