விளையாட்டு | சற்றுமுன்...




விளையாட்டு துறையை மேம்படுத்த மக்கள் பங்களிப்பும் அவசியம்

August 8th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், தடகளம், விளையாட்டு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

விளையாட்டு துறையை மேம்படுத்த மக்கள் பங்களிப்பும் அவசியம்
அமைச்சர் மைதீன்கான் பேச்சு

தமிழகத்தில் விளையாட்டு துறையை மேம்படுத்த மக்கள் பங்களிப்பும் அவசியம் தேவை என்று கோவையில் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற செயற்கை இழை ஓடுதள தொடக்க விழாவில் அமைச்சர் மைதீன்கான் பேசினார்.

கோவை நேரு விளையாட்டரங்கில் ரூ.21/2 கோடி மதிப்பில் 400 மீட்டர் செயற்கை இழை ஓடுதளம் (சிந்தடிக் டிராக்) அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று காலை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரபாகரன் வரவேற்று பேசினார்.

தமிழக சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் கலந்துகொண்டு புதிய ஓடுதளத்தையும், புல்வெளி கால்பந்து மைதானத்தையும் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

மக்கள் பங்களிப்பு அவசியம்

1972-ம் ஆண்டு முதல்-அமைச்சராக கருணாநிதி பொறுப்பில் இருந்தபோது கோவையில் நேரு விளையாட்டரங்கம் தொடங்கப்பட்டது. அதற்கு பிறகுதான் சென்னையில் நேரு விளையாட்டரங்கம் தொடங்கப்பட்டது. பார்வையாளர்கள் அமர்ந்து காணக்கூடிய அளவில் முழு காலரியுடன் அமைக்கப்பட்ட முதல் விளையாட்டரங்கம் என்ற பெருமையை கோவை நேரு விளையாட்டரங்கம் பெற்றது.

விளையாட்டு துறைக்கு இந்த ஆட்சியில் அதிக நிதி தரப்படுகிறது. அரசு என்னதான் நிதி கொடுத்தாலும் மக்கள் பங்களிப்பு என்பது மிகவும் அவசியம். அப்போதுதான் விளையாட்டு துறையை சிறப்பாக செயல்படுத்த முடியும். விளையாட்டு துறைக்காக தனது தொகுதி நிதியை தருவதாக இங்கு அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடியது. மக்கள் பிரதிநிதிகள், ஆர்வலர்கள், விளையாட்டு சங்கத்தினர் ஆர்வம் இருந்தால்தான் தமிழக விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து அவர்களை சிறந்த வீரர்களாக மாற்ற முடியும்.

நீச்சல் குளம்

தி.மு.க அரசு விளையாட்டு துறை மேம்பாட்டுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் தற்போது 10 மாவட்டங்களில் நீச்சல் குளம் இருந்தது. இந்த ஆண்டு 75 லட்சத்தில் விழுப்புரத்தில் பணி நடந்து வருகிறது. விளையாட்டு துறை சார்பில் விளையாட்டரங்கம் மற்றும் நீச்சல் குளம் ஏற்படுத்த அரசு தயாராக இருக்கிறது. ஆனால் அதற்குரிய இடம் மாநகராட்சியிலோ, உள்ளாட்சி அமைப்புகளிலேயே இருக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் விளையாட்டு துறையை மேம்படுத்தவும், தேவையான வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாகவும் அதிகாரிகளிடம் பேச உள்ளோம்.

இதுபோன்ற செயற்கை ஓடுதளம் அமைக்க 3 கோடி ஆகிறது. இதேபோல் மதுரை மற்றும் சென்னையில் செயற்கை ஓடுதளம் இருக்கிறது. இதன் உழைப்பு 6 அல்லது 7 ஆண்டுகள் மட்டும் வரும் என்கிறார்கள். இந்த ஆண்டு திருச்சியில் ஆக்கி மைதானம் அமைக்க ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை, கிருஷ்ணகிரியில் ரூ.3 கோடியே 10 லட்சத்தில் விளையாட்டு வீரர்கள் விடுதி கட்டப்படுகிறது.

மினி ஸ்டேடியம்

ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் மினி ஸ்டேடியம் அமைக்க 15 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு 5 இடங்களில் பணிகள் முடிந்தது. அதேபோல் கிராமங்களில் ஒரு குறிப்பிட்ட விளையாட்டு தேர்வு செய்யப்பட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தின் கீழ் கோவை சூலூரில் பயிற்சி வழங்க ரூ.2 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கடலோர மீனவர்களின் குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி, களைக்கூத்தாடிகளின் குழந்தைகளுக்கு ஜிம்னாஸ்டிக் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

ஒரு நாட்டின் சிறப்பு எது என்று பார்த்தால் தற்போது ஒலிம்பிக் விளையாட்டுகளில் எந்த நாடு அதிக பதக்கம் வென்றது என்றுதான் பார்க்கிறார்கள். அந்த வகையில் சிறந்த வீரர்களை உருவாக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறோம். ஒலிம்பிக் மற்றும் பிற விளையாட்டுகளில் சாதித்த வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.3 கோடியே 15 லட்சம் ஊக்க தொகை வழங்கி வருகிறோம். வலுவான விளையாட்டு வீரர்களை உருவாக்கும் தொலைநோக்கு பார்வையோடு சத்துணவில் தற்போது 3 முட்டை வழங்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் கூறினார்.

விழாவில் தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-

உள்விளையாட்டரங்கம்

ஒலிம்பிக்கில் அதிகம் பதக்கம் பெறும் நாடுதான் வலிமையான நாடு என்கிறார்கள். அந்த வகையில் அமெரிக்கா, சீனா, பிரான்சு உள்ளிட்ட நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன. உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகை கொண்ட நம் நாட்டவர்கள் அதிக பதக்கம் பெறமுடியவில்லை. ஆனால் மக்கள் தொகை குறைந்த நாடுகளில்கூட வீரர்கள் அதிக பதக்கம் குவிக்கிறார்கள்.

கோவையில் ஒரு உள்விளையாட்டரங்கம் அமைக்க வேண்டும் என்று தி.மு.க அரசு ரூ.5 கோடி ஒதுக்கியது. ஆனால் அப்போது இருந்த மேயர் கோவையில் இடம் இல்லை என்று கூறிவிட்டார். அந்த நிதி தற்போது செலவு செய்யப்பட்டு இருக்கலாம். அதனால் விளையாட்டு துறை அமைச்சர் தற்போது ரூ.10 கோடி ஒதுக்கித்தந்து உள்விளையாட்டரங்கம் அமைக்க வேண்டும். சாயிபாபா காலனியில் குப்பை கிடங்கு பகுதியில் பள்ளிக்கூடம் வருகிறது என்கிறார்கள்.

அந்த பள்ளிக்கூடத்தின் அருகில் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும். மேலும் சர்வதேச தரத்துடன் கூடிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க வேண்டும். கோவையில் உள்விளையாட்டரங்கம் அமைப்பதற்காக எனது தொகுதி நிதியில் இருந்து ரூ.3 கோடியை ஒதுக்கி தர தயாராக உள்ளேன். இன்னொரு தொண்டு நிறுவனம் 2 கோடி ஒதுக்குவதாக கூறி உள்ளது. அரசு அங்கு உள்விளையாட்டரங்கம் அமைக்குமானால் கோவையில் உள்ள வீரர்களுக்கு ஒலிம்பிக்கில் பங்குபெறுவதற்கான பயிற்சிகள் அளிக்க ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி கூறினார்.

கலந்துகொண்டோர்

விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ம.ரா.மோகன் திட்ட விளக்க உரையாற்றினார். மாநகராட்சி ஆணையாளர் வி.கே.சண்முகம், மேயர் வெங்கடாசலம், சர்வதேச கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், துணை மேயர் நா.கார்த்திக், மண்டல தலைவர் பைந்தமிழ்பாரி, மாவட்ட தலைவர் சி.ஆர்.ராமச்சந்திரன், வெ.ந.உதயகுமார், நாச்சிமுத்து, முன்னாள் எம்.பி.க.ரா.சுப்பையன், கவுன்சிலர்கள் கார்த்திக் செல்வராஜ், தமிழ்செல்வி, அசோக்குமார், ராஜேந்திரபிரபு, யமுனாதேவி, மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் உமாபதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிகளை செய்திமக்கள் தொடர்பு உதவி அலுவலர் தமிழ்மொழி அமுது தொகுத்து வழங்கினார். முடிவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொது மேலாளர் மேரி ராஜாத்தி நன்றி கூறினார்.

 

 


ஒலிம்பிக் போட்டி: முதல் நாள் போட்டியில் இந்திய வீரர்களின் பங்கு

August 8th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், தடகளம், விளையாட்டு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஒலிம்பிக் போட்டி: முதல் நாள் போட்டியில் இந்திய வீரர்களின் பங்கு

சீன நாட்டின் தலைநகரமான பீஜிங்கில் இன்று இரவு 29வது ஒலிம்பிக் போட்டிகள் கோலகலமாக தொடங்குகிறது. இந்தியா சார்பில் இதில் 56 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். முதல் நாள் போட்டியில் இந்திய வீரர்கள் பங்கு பெறும் போட்டிகள் விவரம் வருமாறு:-

பேட்மிட்டன்:-
அரூப் ஸ்ரீதர்-மார்கோ வாஸ்கோன் செலஸ்(போர்ச்சுக்கல்)
சானியா நெய்வால் தில் கரசோவா(ரஷ்யா)
குத்துச்சண்டை:-
விஜேந்தர்(75கிலோ),தினேஷ்குமார்(81கிலோ)
சூட்டிங்:-ஆரம்ப சுற்று
மன்விஜித் சந்து,மன்சர் சிங்(டிராப்)
சமரேஸ் சங்(ஏர்பிஸ்டல் 10மீட்டர்)
வினித் கவு சிது(பெண்கள் ஏர்ரைபிள் 10 மீட்டர்)
நீச்சல்:- சந்தீப் சஜ்வர் (100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக்)
படகு போட்டி:-
ஜோல்(ஹெவி வெயிட் முதல் சுற்று)
ரோவிங்:-
பஜ்ரங் தாகூர்(ஒற்றையர் பிரிவு)
தேவேந்தர் சந்த்லால் மஞ்சித் சிங்(இரட்டையர் பிரிவு)
குமுஜம் தொம்பி தேவி(48 கிலோ)
 


சீனாவில் ஒலிம்பிக் கிராமம் திறப்பு

July 27th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், விளையாட்டு, விழா | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

சீனாவில் ஒலிம்பிக் கிராமம் திறப்பு

விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கான ஒலிம்பிக் கிராமம் சீனாவில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது. போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்கள் சுமார் 16,000 பேர் தங்கும் வகையில், 66 ஹெக்டேர் பரப்பளவில் பிரமாண்ட கிராமத்தை சீன அரசு கட்டியுள்ளது.

இந்த ஒலிம்பிக் கிராமம் முறைப்படி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
 
 


ஒலிம்பிக் தொடக்க விழா: மன்மோகனுக்கு அழைப்பில்லை?- சீனா விளக்கம்

July 18th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், விளையாட்டு, விழா | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஒலிம்பிக் தொடக்க விழா: மன்மோகனுக்கு அழைப்பில்லை?- சீனா விளக்கம்

வரும் ஆகஸ்ட்டில் சீனாவில் நடைபெறும் ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்கேற்க இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அந்நாடு அழைப்பிதழ் அனுப்பவில்லை என வெளியான செய்தியை சீன வெளியுறவுத் துறை மறுத்துள்ளது.

ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சீனா அழைப்பிதழ் அனுப்பியுள்ளதாகவும், பிரதமர் மன்மோகனுக்கு அழைப்பிதழ் அனுப்பவில்லை எனவும் இந்திய பத்திரிகைகள் சிலவற்றில் வெளியான செய்திகளை சீனா மறுத்துள்ளது.
 
 


ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை மீண்டும் சாம்பியன்

July 7th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், இந்தியா, இலங்கை, கிரிக்கெட், விளையாட்டு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை மீண்டும் `சாம்பியன்’
இந்திய கனவை தகர்த்தார், மென்டிஸ்

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது. சுழற்பந்து வீச்சாளர் மென்டிஸ், இந்தியாவின் கனவை சிதறடித்தார்.

இறுதிப்போட்டி

6 நாடுகள் பங்கேற்ற 9-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடந்தது. இதில் கராச்சியில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக பிரவின்குமாருக்கு பதிலாக உத்தப்பா சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் முந்தைய ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த சமிந்தா வாஸ், அஜந்தா மென்டிஸ் மீண்டும் திரும்பினர்.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோனி முதலில் இலங்கையை பேட் செய்ய பணித்தார். இதையடுத்து ஜெயசூர்யாவும், சங்கக்கராவும் இலங்கை அணியின் இன்னிங்சை தொடங்கினார்கள். 2-வது ஓவரில் இலங்கை அணிக்கு அதிர்ச்சி ஆரம்பமானது. சங்கக்கரா (4 ரன்) ரெய்னாவால் ரன்-அவுட் செய்யப்பட்டார். இதன் பிறகு ஒரு பக்கம் ஜெயசூர்யா சரவெடியாய் வெடித்துக் கொண்டிருக்க, மறுபுறம் விக்கெட்டுகள் சரிந்தன. கேப்டன் ஜெயவர்த்தனே 11 ரன்னிலும் (19 பந்து, ஒரு பவுண்டரி), கபுகேதரா 5 ரன்னிலும் (11 பந்து), சமர சில்வா ரன் ஏதுமின்றியும் (0), இஷாந்த் ஷர்மா பந்து வீச்சுக்கு இரையானார்கள். 12-வது ஓவரில் 66 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தத்தளித்தது.

ஜெயசூர்யா சதம்

இந்த சூழலில் ஜெயசூர்யாவுடன், தில்ஷன் ஜோடி சேர்ந்தார். விக்கெட் சரிவை பற்றி துளியும் கவலைப்படாமல் ஜெயசூர்யா தனது வழக்கமான பாணியில் வெளுத்து வாங்கினார். அவர் 56 ரன்களில் இருந்த போது மிட்-ஆன் திசையில் நின்ற ஆர்.பி.சிங் கடினமான ஒரு கேட்ச்சை கோட்டை விட்டார். அதன் பலனை ஆர்.பி.சிங் உடனே அனுபவிக்க நேர்ந்தது. அவர் வீசிய ஒரு ஓவரில் 3 சிக்சரும், 2 பவுண்டரியும் ஜெயசூர்யா விளாசி, திகைக்க வைத்தார். ஜெயசூர்யா அதிரடியால், இலங்கை அணியின் ரன்-ரேட் 6 ரன்களுக்கு மேலாகவே சென்று கொண்டிருந்தது. ஸ்கோர் 300 ரன்களை தாண்டலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அபாரமாக ஆடிய ஜெயசூர்யா 79 பந்துகளில் தனது 27-வது சதத்தை தொட்டார். இந்தியாவுக்கு எதிராக அவர் கண்ட 6-வது சதமாகும்.

சதத்திற்கு பிறகு ஜெயசூர்யா மிகவும் களைத்து போனார். தவிர, ஓஜாவும், ஷேவாக்கும் சுழற்பந்து வீச்சில் அவர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் மிடில் பகுதியில் ரன் வேகம் வெகுவாக குறைந்தது. ஜெயசூர்யாவும், தில்ஷனும் ஒன்று, இரண்டு ரன்கள் வீதமே எடுத்தனர்.

ஸ்கோர் 197 ரன்களாக உயர்ந்த போது, முக்கியமான கட்டத்தில் இந்த ஜோடி பிரிந்தது. ஜெயசூர்யா 125 ரன்களில் (114 பந்து) குவித்த நிலையில், ஷேவாக் பந்து வீச்சில் இஷாந்த் ஷர்மாவிடம் கேட்ச் ஆனார். அவரது ரன்னில் 9 பவுண்டரியும், 5 சிக்சரும் அடங்கும். அணியை சரிவில் இருந்து மீட்ட இந்த இணை 5-வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்தது சிறப்பம்சமாகும். சிறிது நேரத்தில் தில்ஷனும் (56 ரன், 74 பந்து, 3 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.

 

273 ரன்கள் சேர்ப்பு

இதன் பிறகு ஆட்டம் இந்தியாவின் கட்டுக்குள் வந்தது. 20-40-வது ஓவர் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை. இறுதி கட்டத்தில் வாஸ் (19 ரன்), குலசேகரா (29 ரன், 29 பந்து, 3 பவுண்டரி) ஆட்டம் மட்டும் குறிப்பிடும்படி இருந்தது. முடிவில் இலங்கை அணி 49.5 ஓவர்களில் 273 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இந்திய தரப்பில் ஆர்.பி.சிங், இஷாந்த் ஷர்மா தலா 3 விக்கெட்டுகளும், இர்பான் பதான் 2 விக்கெட்டுகளும், ஷேவாக் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

ஷேவாக் அரை சதம்

அடுத்து 274 ரன்கள் எடுத்தால் ஆசிய கோப்பை என்ற இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய ஷேவாக், பந்துகளை தொடர்ச்சியாக பவுண்டரிக்கு ஓட விட்டு மிரட்டினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கம்பீர் 6 ரன்களில் ஏமாற்றி நிலையில், அடுத்து சுரேஷ் ரெய்னா ஆட வந்தார். மின்னல் வேகத்தில் ஆடிய ஷேவாக் 26 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். இதன் மூலம் ஆசிய கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் அரை சதம் அடித்தவர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

ஆனால், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மென்டிஸ் பந்து வீச தொடங்கியதும் ஆட்டத்தின் போக்கு மாறியது. அவரது பந்தில் ஷேவாக் (60 ரன், 36 பந்து, 12 பவுண்டரி), ஸ்டம்பிங் ஆனார். அடுத்து வந்த யுவராஜ்சிங் (0) அதே ஓவரில் போல்டு ஆக இந்தியா அதிர்ந்தது. இதன் பிறகு ரெய்னா (16 ரன்), ரோகித்ஷர்மா (3 ரன்) ஆகியோரையும் மென்டிஸ் காலி செய்ய இந்தியா பெரும் சரிவுக்குள்ளானது. கேப்டன் டோனி-உத்தப்பா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு சிறிது நேரம் போராடினாலும், இந்தியாவை அவர்களால் நிமித்த முடியவில்லை. உத்தப்பா 20 ரன்களில் (41 பந்து) எல்.பி.டபிள்ï. ஆனார்.

இலங்கை சாம்பியன்

அடுத்து மீண்டும் பந்து வீச வந்த மென்டிஸ் மேலும் 2 விக்கெட்டுகளை சரித்து இந்தியாவை முழுமையாக தோல்வி பாதைக்கு தள்ளினார். கடைசி வரை போராடிய டோனி 49 ரன்களில் (74 பந்து, 4 பவுண்டரி) வெளியேற இந்திய அணி 39.3 ஓவர்களில் 173 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதனால் 100 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டது.

இலங்கை தரப்பில் மென்டிஸ் 13 ரன்கள் விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். ஆசிய கிரிக்கெட் வரலாற்றில் ஓர் வீரர் 6 விக்கெட்டுகள் வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். 23 வயதான மென்டிஸ் இதுவரை 8 ஒரு நாள் போட்டிகளில் தான் ஆடியிருக்கிறார். அவர் தான் எங்களுக்கு துருப்பு சீட்டாக இருப்பார் என்று இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே சொல்லியிருந்தார். அதனை அவர் நிரூபித்தும் காட்டி விட்டார். லீக்கில் அடைந்த தோல்விக்கும் இந்தியாவை பழிதீர்த்து கொண்டனர். முன்னதாக இலங்கை அணி 1986, 1997, 2004 ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மென்டிஸ் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் தட்டிச் சென்றார். அவர் தொடரில் மொத்தம் 17 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்தியா பரிதாபம்

இந்தியா ஏற்கனவே 4 முறை ஆசிய கோப்பையை வென்றிருந்தாலும், 1995-ம் ஆண்டுக்கு பிறகு ஆசிய கோப்பையை முகர்ந்ததில்லை. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக இலங்கைக்கு எதிராக மோதிய இறுதிப்போட்டிகளில் வெற்றி பெற்றதில்லை. அந்த சோகம் இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. கடந்த 2004-ம் ஆண்டு ஆசிய இறுதிப்போட்டியிலும் இந்திய அணி, இலங்கையிடம் தான் தோற்றது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் போர்டு

இலங்கை

ஜெயசூர்யா (சி) இஷாந்த் (பி) ஷேவாக் 125

சங்கக்கரா (ரன்-அவுட்) 4

ஜெயவர்த்தனே (சி) ரோகித் (பி) இஷாந்த் 11

கபுகேதரா (சி) ரெய்னா (பி) இஷாந்த் 5

சமர சில்வா (பி) இஷாந்த் 0

தில்ஷன் (சி) டோனி (பி) இர்பான் பதான் 56

வாஸ் (பி) ஆர்.பி.சிங் 19

குலசேகரா (நாட்-அவுட்) 29

துஷாரா எல்.பி.டபிள்ï. (பி) ஆர்.பி.சிங் 5

மென்டிஸ் (பி) ஆர்.பி.சிங் 8

முரளிதரன் (சி) டோனி (பி) இர்பான் பதான் 2

எக்ஸ்டிரா 9

மொத்தம் (49.5 ஓவர்களில் ஆல்-அவுட்) 273

விக்கெட் வீழ்ச்சி: 1-11, 2-34, 3-66, 4-66, 5-197, 6-213, 7-236, 8-256, 9-264

பந்து வீச்சு விவரம்

ஆர்.பி.சிங் 9-1-67-3

இஷாந்த் ஷர்மா 10-1-52-3

இர்பான் பதான் 9.5-0-67-2

ஓஜா 10-1-38-0

ஷேவாக் 8-0-30-1

ரோகித் ஷர்மா 3-0-11-0

இந்தியா

கம்பீர் (சி) தில்ஷன் (பி) வாஸ் 6

ஷேவாக் (ஸ்டம்பிங்) சங்கக்கரா (பி) மென்டிஸ் 60

ரெய்னா (பி) மென்டிஸ் 16

யுவராஜ்சிங் (பி) மென்டிஸ் 0

டோனி (சி) சங்கக்கரா (பி) வாஸ் 49

ரோகித் ஷர்மா எல்.பி.டபிள்ï (பி) மென்டிஸ் 3

உத்தப்பா எல்.பி.டபிள்ï (பி) முரளிதரன் 20

இர்பான் பதான் (சி) ஜெயவர்த்தனே (பி) மென்டிஸ் 2

ஆர்.பி.சிங் (பி) மென்டிஸ் 0

ஓஜா (நாட்-அவுட்) 6

இஷாந்த் ஷர்மா (பி) குலசேகரா 8

எக்ஸ்டிரா 3

மொத்தம் (39.3 ஓவர்களில் ஆல்-அவுட்) 173

விக்கெட் வீழ்ச்சி: 1-36, 2-76, 3-76, 4-93, 5-97, 6-135, 7-154, 8-154, 9-160

பந்து வீச்சு விவரம்

வாஸ் 9-0-55-2

குலசேகரா 6.3-0-26-1

துஷாரா 8-0-51-0

மென்டிஸ் 8-1-13-6

முரளிதரன் 8-0-26-1


கிளன் மெக்ராத் மனைவி மரணம்

June 22nd, 2008 பகுப்புகள்: உடல்நலம், கிரிக்கெட், பெண்கள், மரணம் | தொகுப்பாளர்: சற்றுமுன் - வினையூக்கி | மறுமொழிகள் இல்லை » |

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளன் மெக்ராத்தின் மனைவி ஜேன் மெக்ராத் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 42. அவர் மார்பக புற்றுநோயினாலும் எலும்பு புற்றுநோயினாலும் பாதிக்கப்பட்டு சிலகாலமாக மருத்துவ சிகிச்சை பெற்றுவந்தார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் குடும்பத்தினர் மத்தியில் நன்மதிப்பைப் பெற்று இருந்த மெக்ராத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். மெக்ராத் தம்பதியினர் மெக்ராத் பவுண்டேசன் என்ற அமைப்பை மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்படும் பெண்களுக்காக நடத்தி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மெக்ராத் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

மெக்ராத் பவுண்டேசன் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்


ஜஸ்டின் ஹெனின் ஓய்வு

May 14th, 2008 பகுப்புகள்: ஆளுமை, டென்னிஸ் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

பெண்கள் டென்னிஸ் உலகத் தரவரிசையில் முதலில் இருக்கும் ஜஸ்டின் ஹெனின் முதல்தர டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓர்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார்.

World No. 1 Henin quits pro tennis - Fox Sports


ஹர்பஜன் சிங்க்கு 11 ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தடை

April 28th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்க்கு 11 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்ட்டுள்ளது. சக வீரர் ஸ்ரீசாந்தை அறைந்ததற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் ஒரு ஆட்டத்தில் மும்பை அணியின் தலைவராக இருந்த ஹர்பஜன் சிங் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரரான சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த்தை ஆடுகளத்தில் வைத்து அடித்தது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியது.

இதைத் தொடர்ந்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இது குறித்த விசாரணையை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் போட்டி நடுவருமான ஃபரூக் இஞ்ஜினியர் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் முடிவில் ஹர்பஜன் சிங் மீதான குற்றச்சாட்டி நிரூபிக்கப்பட்டது எனவும், அதன் காரணமாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையின் அடிப்படையில், 11 ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலரான நிரஞ்சன் ஷா தமிழோசையிடம் தெரிவித்தார்.

நன்றி: பிபிசி

விழியம்:

1. YouTube - Sreesanth Crying In Mohali IPL

2. YouTube - Sreesanth and Harbhajan Singh :: THE WHOLE THINGS

மேலும் விவரங்களுக்கு:

1. The Hindu News Update Service: “Harbhajan banned for rest of IPL, to lose Rs. 3 cr.”

2. BBC SPORT | Cricket | International Teams | India | Harbhajan given long ban for slap

3. BCCI appoints Nanavati as commissioner in Harbhajan enquiry


முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் அசார் சென்ற கார் பேருந்துடன் விபத்து

April 14th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட், விபத்து | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

ஞாயிறு காலை மும்பையின் புறநகர் நவிமும்பை பகுதியில் உள்ள பாம்பீச் சாலையில், இதனை தொகுக்கும் பதிவரின் வீட்டருகே, மாநில அரசுபேருந்துடன் முன்னாள் அணித்தலைவர் முகமது அசாருத்தீனின் மகிழ்வுந்து மோதியதில் சிறுகாயங்களுடன் அவர் தப்பினார்.அவரும் அவரது ஓட்டுநர் அமர்நாத் அல்குபாலும் அடுத்துள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிட்சை/முதலுதவி அளிக்கப்பட்டனர். அசாரின் இரு மகன்களும் பின்ன்னிருக்கையில் பயணம் செய்திருந்தனர்; அவர்களுக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது. உரான் சென்று கொண்டிருந்த பேருந்தில் சில பயணிகளே இருந்தனர். அவர்களுக்கும் பேருந்து ஓட்டுநருக்கும் காயமேதும் ஏற்படவில்லை.

அசாரும் அவரது மக்களும் சோலாப்பூரில் கிரிக்கெட் விளையாட தங்கள் ஹோண்டா CR-V வண்டியில் சென்று கொண்டிருந்தனர். வண்டியிலிருந்த காற்றுப்பைகள் உப்பியதால் அசாரும் ஓட்டுநரும் தப்பியதாக காவல்துறையினர் கூறினர்.

Azhar’s car hit by speeding bus


டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா 3-0 என ஜப்பானை வென்று உலக சுற்றுக்குள் நுழைந்தது

April 12th, 2008 பகுப்புகள்: டென்னிஸ், விளையாட்டு | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

தங்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட பகையை மறந்து மகேஷ் பூபதியும் லியாண்டர் பேயசும் இரட்டையர் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி சதோஷி இவாபுச்சி மற்றும் டகௌ சுசுகி ஜோடியை 7-6(2), 3-6,6-3,6-4 என்ற செட்கணக்கில் வென்று இந்தியா அடுத்த உலக சுற்று விளையாட்டிற்கு தகுதிபெற வைத்துள்ளனர்.

வெள்ளியன்று ரோகன் போபன்னாவும் பிரகாஷ் அமிர்தராஜும் தங்கள் விளையாட்டுக்களை வென்றதால் இந்தியா 3-0 என்ற நிலையில் இருக்கிறது. நாளைய போட்டிகள் நடக்குமுன்னரே ஐந்து போட்டிகள் கொண்ட டென்னிஸ் பந்தயத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

India beat Japan 3-0, reach World Group Playoff


இலங்கை கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் உட்பட 12 பேர் பலி

April 7th, 2008 பகுப்புகள்: அரசியல், ஈழம் - இலங்கை, குண்டுவெடிப்பு, கொலை, தடகளம், மரணம், விளையாட்டு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

அமைச்சர் ஜெயராஜ் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு விடுதலைப் புலிக