ஏர் - இந்தியா எக்ஸ்பிரஸின் முதல் பெண் “பைலட்’
சென்னை, ஜூலை 26: ஏர் - இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் முதல் பெண் “பைலட்’ என்ற பெருமையை கேப்டன் செமலி க்ரோட்டபள்ளி பெறுகிறார்.
சென்னையிலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.25 மணிக்குப் புறப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை அவர் இயக்குகிறார். அவருடன் அன்றைய தினம் செல்லும் துணை பைலட் அம்ரித் நம்தாரி, பணிப் பெண்கள் எஸ். பானு, பி. புடியா, எஸ். திவ்யா, பினால் வலண்ட் ஆகிய அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் செமலி க்ரோட்டபள்ளி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் 2004-ம் ஆண்டு சேர்ந்தார். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் மொத்தம் 76 பைலட்டுகள் உள்ளனர்; இவர்களில் 6 பேர் பெண்கள்.
