சென்னை | சற்றுமுன்...




கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்.

July 8th, 2008 பகுப்புகள்: அரசியல், சென்னை, தகவல், தமிழ்நாடு | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

சென்னையை அடுத்த மீஞ்சூரில் அமைக்கப்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும்  திட்டப் பணிகள் வரும் ஜனவரி மாதம் மத்தியில் முடிக்கப்பெற்று அந்த நிலையத்தில் இருந்து குடிநீரை வழங்க இயலும் என்று மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

அந்நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திட்டத்தில் 69 சதவீத கட்டுமானப் பணிகள் முடிவடைந்திருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையத்திலிருந்து மாதவரம் மற்றும் செங்குன்றம் வரை குடிநீரை கொண்டு செல்லும் குழாய் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
மாதவரம் நீரேற்று நிலையம் வரை குழாய் பதிக்கும் பணிகளில் மொத்தம் 23 ஆயிரத்து 257 மீட்டர் நீளத்தில் தற்போது 18 ஆயிரத்து 622 மீட்டர் நீளத்திற்கு, ஆயிரம் மில்லி மீட்டர் விட்டமுள்ள குழாய்கள் பதிக்க ப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தற்போது எண்பது சதவீத பணிகள் முடிவடைந்திருப்பதாகக் கூறினார்.
மாதவரம் நீரேற்று நிலையத்தில் இருந்து செங்குன்றம் வரை குழாய் பதிக்கும் பணிகளில் தற்போது 85 சதவீதம் அளவிற்கு நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.


பெட்ரோல் தட்டுப்பாடு நள்ளிரவுக்குள் சீராகும் - தலைமைச் செயலாளர்

July 1st, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, சென்னை, தமிழ்நாடு, போக்குவரத்து, போராட்டம் | தொகுப்பாளர்: ✪சிந்தாநதி | மறுமொழிகள் இல்லை » |

தமிழ்கத்தில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு காரணமாக இன்று காலை முதல் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளதால் பேருந்துகள் உட்பட வாகனங்களும் இயங்க இயலாத கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 3000க்கு மேற்பட்ட தனியார் பேருந்துகளும் 20 சதவீத அரசுப் பேருந்துகளும் நிறுத்தப் பட்டு விட்டன.

நிலைமை சீராகும்… திரிபாதி நம்பிக்கை

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து இன்று நள்ளிரவு முதல் அகில இந்திய அளவில் லாரிகள் ஸ்டிரைக் ஆரம்பமாகிறது.  இதற்கு முன்னதாக  பெட்ரோல் தட்டுப் பாடு காரணமாக இன்றே இந்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நிலைமை சீராகாத பட்சம் நாளை தமிழ்கத்தில் எந்த வாகனமும் சாலையில் காணப்படாது.
இதற்கிடையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக தலைமை செயலாளர் திரிபாதி தமிழகத்தில் டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு இன்று நள்ளிவுக்குள் சகஜ நிலைக்கு திரும்பி விடும் என்று  தெரிவித்துள்ளார்.


டீசல் பற்றாக்குறை:நகரின் பல பெட்ரோல் பங்க்கள் மூடல்

July 1st, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, சென்னை | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

தமிழகம் முழுவதும் டீசல் பற்றாக்குறை விஸ்வரூபம் எடுத்துள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரும்பாலான பங்குகள் மூடப்பட்டன. இதனால் லாரிகள், வேன்கள் உள்ளிட்ட டீசல் வாகனங்கள் டீசல் கிடைக்காமல் ஸ்தம்பித்துப் போயுள்ளன.

சமீபத்திய பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 90 சதவீத பங்குகளில் சாதாரண பெட்ரோல், டீசல் வி ற்பனை அறவே நின்று போய் விட்டது. அதற்கு மாறாக பிரீமியம், பவர் பெட்ரோல், டீசல்தான் விற்கப்பட்டு வருகிறது.

ஆனால் சாதாரண பெட்ரோல், டீசலைத்தான் பவர், பிரிமீயம் என்ற பெயரில் விற்று ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக டீசல் விநியோகம் பெரும் பா திப்பை சந்தித்துள்ளது. டீசல் விநியோகம் போதிய அளவில் இல்லாததால், பல பங்குகளில் டீசல் ஸ்டாக் இல்லை என்ற போர்டு தொங்க விடப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் இன்று நிலைமை மேலும் மோசமடைந்தது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பங்குகளில் டீசல் இல்லாத காரண த்தாலும், பவர், பிரிமீயம் பெட்ரோலுக்கும் பஞ்சம் ஏற்பட்டதாலும் பங்குகளை மூடத்தொடங்கியுள்ளன. சென்னை நகரில் பல பங்குகளை மூடி விட்டனர்.

திறந்திருக்கும் ஒன்றிரண்டு பங்குகள் முன்பு நூற்றுக்கணக்கான வாகனங்கள் குவிந்துள்ளன. அவற்றை ஒழுங்கு படுத்தி வரிசையில் வர வைத்து டீசல் வழங்கி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் இதே நிலைதான். இதன் காரணமாக வேன்கள், லாரிகள், பள்ளிப் பேருந்துகள், ஷேர் ஆட்டடீக்கள் உள்ளிட்ட டீசலால் இயங்கும் வாகனங்கள் ஸ்தம்பித்துப் போயுள்ளன. பல பகுதிகளில் கொந்தளிப்பும் காணப்படுகிறது. இதனால் பங்குகள் முன்பு போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.


ஜூன் 11-ம் தேதி நூற்றாண்டு விழா காணும் எழும்பூர் ரயில் நிலையம்

May 30th, 2008 பகுப்புகள்: *பொது, சென்னை, தகவல், தமிழ்நாடு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஜூன் 11-ம் தேதி நூற்றாண்டு விழா காணும் எழும்பூர் ரயில் நிலையம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் நூற்றாண்டு விழா வரும் ஜூன் 11-ம் தேதி நடைபெற உள்ளது.

சென்னையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு, புகழ்பெற்ற மரபுச் சின்னங்களில் முதன்மையானதாக ஏழும்பூர் ரயில் நிலையம் இன்றளவும் திகழ்கிறது.

கடந்த 1908-ம் ஆண்டு ஜூன் 11-ல் தொடங்கப்பட்ட இந்த ரயில் நிலையம் தமிழகத்தின் நுழைவாயிலாக விளங்குகிறது.

நூற்றாண்டு விழாவையொட்டி, புதுப்பொலிவு பெறும் வகையில் ரூ. 11 கோடியில் இந்த ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் மான்சிங் புதன்கிழமை கூறியதாவது:
எழும்பூர் ரயில் நிலையத்தில் ஏற்கெனவே இதுவரை ரூ. 3 கோடியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுதவிர தெற்கு ரயில்வே கட்டுமானப் பிரிவின் மூலம் மேலும் ரூ. 4 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதுதவிர வளர்ச்சிப் பணிகளுக்காக கூடுதலாக ரூ. 4 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. பிளாட்பாரங்கள் விரிவாக்கம், பயணிகளுக்கான இருக்கை வசதி, நடைமேம்பாலங்கள், கழிவறைகளைப் புதுப்பிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெறுகின்றன.

இதுதவிர கண்ணாடி -அப்ட், ஓளிரும் விளக்குகள், பொது ஆறிவிப்பு வசதி, பயணிகளின் உடைமைகளைச் சோதிக்க கன்வேயர் ஸ்கேனர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

வரும் ஜூன் 11-ம் தேதி எழும்பூர் ரயில்நிலைய வளாகத்தில் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. இதில் ரயில்வே இணை ஆமைச்சர் இர். வேலு மற்றும் மாநில ஆமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார் மான்சிங்.

அஞ்சல் தலை வெளியீடு:நூற்றாண்டு விழாவையொட்டி எழும்பூர் ரயில் நிலையத்தின் முகப்புத் தோற்றத்தை வண்ணப் படமாக அச்சிடப்பட்ட அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் ஊறை வெளியிடப்பட உள்ளது.


சென்னை கபாலி கோவிலில் திருட்டு

April 17th, 2008 பகுப்புகள்: குற்றம், சென்னை | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

சென்னை மயிலையில் அமைந்துள்ள கபாலீச்வரர் கோவிலில் உண்டியல் ஒன்று உடைக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் களவாடப்பட்டுள்ளன.

வியாழன் அதிகாலை வந்த கோவில் ஊழியர்கள் கோவிலைத் திறந்தபோது இதனைக் கண்டு புகார் பதிந்தனர்.

உண்டியல் அதன் இடத்திலிருந்து பெயர்க்கப்பட்டு கோவிலின் ஒரு மூலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உடைக்கப்பட்டுள்ளது. மூன்று பாதுகாவல் ஊழியர்கள் கோவிலுக்குள் இருந்தும் CCTV காமிராக்கள் கண்காணித்தும் இத்திருட்டு நடந்துள்ளது அதிகாரிகளுக்கு வியப்பாக உள்ளது.

Theft in Chennai’s Kapaleeswarar temple


ஒரு வரி செய்திகள் - விடுதலை

April 14th, 2008 பகுப்புகள்: *பொது, கலை-இலக்கியம், கல்வி, சட்டம் - நீதி, சென்னை | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

  • சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் பதிப்போவியங்கள் தொடர்பாக நிரந்தர காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. (மேலும்: The Hindu : Front Page : Facelift for heritage buildings in Chennai)
  • மக்கள் வீடுகளுக்கே சென்று நீதி வழங்குவதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் ஏழாயிரம் கிராம நீதிமன்றங்களை ஏற்படுத்த உள்ளது என மத்திய அமைச்சர் வேங்கடபதி கூறியுள்ளார். (முந்தைய செய்தி: The Hindu : Union Minister of State for Law and Justice K. Venkatapathy: Centre planning ‘gram nyayalayas’ (village courts))
  • நாடு முழுவதும் உள்ள கிராம பள்ளிகளில் மேல் நிலைப் படிப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவிகள் ஒரு லட்சம் பேருக்கு பாரத ஸ்டேட் வங்கி தலா ரூ. 1001 ரொக்கப் பரிசு வழங்கும் என அவ்வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார். (மேலும்: The Hindu : ‘The State Bank of India Talent Awards’: SBT awards for toppers)

முழுவதும் வாசிக்க: விடுதலை


பிரபல தெலுங்கு நடிகர் சோபன் பாபு மரணம்

March 20th, 2008 பகுப்புகள்: சென்னை, திரையுலகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

பிரபல தெலுங்கு நடிகர் சோபன் பாபு மரணம்
பிரபல தெலுங்கு நடிகர் சோபன் பாபு இன்று காலை காலமானார். அவருக்கு வயது 71. சென்னை அமைந்தக்கரையிலுள்ள தனது வீட்டில் இன்று காலை வழக்கம்போல யோகா செய்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால் காயமடைந்த அவரின் மூக்கிலிருந்து ரத்தம் வந்தது. உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்தது.


ஸ்பென்சரில் மோதல்: தீ வைப்பு

March 16th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி, சென்னை, வணிகம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

ஸ்பென்ஸர் பிளாசா வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் காஷ்மீர் கைவினைப் பொருள் கடை பணியாளர்களுக்கும், அருகில் இருந்த உணவு விடுதியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Vishal Shindeசென்னையில் உள்ள மிகப்பெரிய வணிக வளாகமான ஸ்பென்சர் பிளாசாவில், இரு கடைகளைச் சேர்ந்த பணியாளர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் அங்குள்ள் கடைக்கு தீ வைக்கப்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். இதில் உணவு விடுதியை எதிர் தரப்பினர் தீ வைத்து கொளுத்தியதாகத் தெரிகிறது. இதனால் அப்பகுதி கலவர பூமி போல் காட்சியளித்தது. பீதியடைந்து மக்கள் ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்த தீயணைப்புப் படையினர், உடனடியாக தீயை அணைத்தனர். சனிக்கிழமை என்பதால் ஸ்பென்சர் பிளாசாவில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. எனினும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது. இந்த மோதல் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: எம்.எஸ்.என்.


ஹிட் லிஸ்டில் யார் யார்? பரபரப்பில் திரையுலகம்

March 13th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி, சென்னை, திரையுலகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

அமெரிக்காவிற்கு கள்ளதனமாக ஆட்களை அழைத்து செல்ல உதவிய நடிகர், நடிகைகளின் பட்டியலை சென்னை அமெரிக்க தூதரக அதிகாரிகள் போலிஸ் கமிஷ்னர் நாஞ்சில் குமரனிடம் அளித்துள்ளனர். அந்த பட்டியலில் யார் யர்ர் பெயர் உள்ளது என்பது குறித்து திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போலிஸிடம் அளிக்கப்பட்ட பட்டியலில் பிரபலமான டைரக்டர்களும், வெளி நாடுகளில் அடிக்கடி இசை நிகழ்ச்சி நடத்தும் இசையமைப்பாளர்களும், தங்கள் படங்களின் பாடல் காட்சிகளை வெளி நாடுகளில்தான் நடத்த வேண்டுமென வலியுறுத்தும் தயாரிப்பாளர்களும் என திரைப்படதுறையில் அனைத்து பிரிவை சேர்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர். அதில் முக்கியமாக நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய பிரபல டைரக்டர், பிரபல தமிழ் இசையமைப்பாளர் ஒருவரின் தம்பியும் வெளிநாடுகளில் இசை கச்சேரிகளை நடத்தும் இசையமைப்பாளர்களும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறதாம். இந்நிலையில் இதில் பெரும்பாலும் பலனடைந்தவர்கள் தயாரிப்பாளர்கள்தான், அதனால் எங்கள் பெயர் பாதிக்கப்படுகிறது என நடிகர் நடிகையர்கள் வருத்தப்படுகின்றனர். இந்த மோசடியில் நடிகர் நடிகையர் தொடர்பு உறுதியானால் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவோமென அதன் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இப்பிரச்சனை குறித்து விவாதிக்க தயாரிப்பாளர் சங்கத்தின் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

http://www.thamizhmail.com/news.asp?id=133


உலக கேரம் சாம்பியன் இளவழகியின் துயரங்கள்

February 28th, 2008 பகுப்புகள்: சென்னை, விருது, விளையாட்டு | தொகுப்பாளர்: மணியன் | 7 மறுமொழிகள் » |

Ilavazhagi.jpgஉலகின் பிறநாட்டு விளையாட்டுவீரர்களுக்கு கோடிகளில் பணம் வழங்கும் இந்தியாவில் உலக அரங்கில் கேரம் விளையாட்டில் விருதுகளை சத்தமின்றி கொணர்ந்து சேர்க்கும் இளவழகியின் சாதனைகளை ‘கண்டு’கொள்ள நேரமெங்கே ? தானி ஓட்டுநரின் 24 வயது மகளான இவருக்கு தனது சாதனைகளை ஊடகங்கள் கவனிக்கவில்லையே என இருக்கும் மனவருத்தம் சொல்லில் வடிக்க முடியுமா ?
உலக அரங்கில் அவரது சாதனைகள் உலகசாம்பியன் பட்டம்வரை உயரும்போது அவரது வரவேற்பு குழுக்கள் அதே விகிதத்தில் குறைந்து வந்துள்ளது. பிரான்ஸின் கான்நகரில் நடைபெற்ற ஐந்தாவது உலக கேரம் போட்டியில் பெண்களூக்கான முதன்மை விருது பெற்றார். இவரை எதிர்த்து இறுதி ஆட்டத்தில் ஆடியவரும் இந்தியரே; நிர்மலா என்பவரை 25-11,25-11 என்ற கணக்கில் வென்றார். தவிர இந்தியாவில் பிப்.7இல் நடந்த போட்டிகளில் முதலாவதாக வந்தார்.

வடசென்னையின் வியாசர்பாடியைச் சேர்ந்த இளவழகி தானி ஓட்டுநர் இருதயராஜ் மற்றும் செல்விக்கு முதல் மகளாவார்.அவரது எதிர்காலம் என்ன என்பதே இருதயராஜின் கவலை. இளவழகி கடந்த ஒருவருடமாக ஒரு வேலை தேடியவாறே காரம் ஆடிவந்துள்ளார்.

பிரான்சிலிருந்து வெற்றிவாகை சூடி சென்னை பன்னாட்டு விமானநிலையத்திற்கு வந்த அவரை வரவேற்க அவரது தந்தையும் தங்கையும் சென்னை மாவட்ட காரம் அதிகாரிகளுமே இருந்தனர்.அவருக்குக் கொடுக்கப்பட்ட ஒரு மலர்கொத்தைக் கண்டே மிகவும் மகிழ்ந்தார்.

Did you know - world carom champ is Chennai girl

கடைசிச் செய்தி : இளவழகிக்கு தமிழ் மையம் ரூ. ஒரு இலட்சம் பரிசளிப்பு. அரசு உதவி அளிக்க கனிமொழி உறுதி


சென்னையில் வரும் 23-ல் 2-வது தமிழ் மாநாடு தொடக்கம்

February 22nd, 2008 பகுப்புகள்: *பொது, அறிவிப்பு, சென்னை | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | ஒரு மறுமொழி » |

சென்னையில் வரும் 23-ல் 2-வது தமிழ் மாநாடு தொடக்கம்

சென்னையில் பன்னாட்டு தமிழ் நடுவம் சார்பில் வரும் 23-ம் தேதி 2-வது தமிழ் மாநாடு நடக்கவுள்ளது.

இதுதொடர்பாக பன்னாட்டு தமிழ் நடுவத்தின் இந்தியத் தலைவர் சுதா ரகுநாதன், செயலாளர் மணிமேகலை கண்ணன், அமெரிக்கத் தலைவர் வின்த்டன் பஞ்சாசரம் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:

பன்னாட்டு தமிழ் நடுவம் சார்பில் 2-வது தமிழ் மாநாடு, சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள இமேஜ் அரங்கத்தில் பிப்ரவரி 23-ம் தேதி நடைபெறுகிறது. அனைவரும் தமிழில் பேசுவது, அனைத்து துறைகளில் தமிழ் மொழியை புகுத்துவது, திருக்குறளை அனைவரும் படித்தல் போன்றவை இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

இதில் இசையரங்கு, கருத்தரங்கு, கவியரங்கு நடைபெறுகிறது. மாநாட்டின் சிறப்பு நிகழ்ச்சியாக 1,330 பள்ளிக் குழந்தைகள் ஒன்று சேர திருக்குறளை சேர்ந்திசையாகப் பாட உள்ளனர்.

நிறைவு விழாவில் கனிமொழி எம்.பி. மற்றும் தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
 
 http://www.dinamani.com


டீக்கடை, தள்ளுவண்டிகளில் சுகாதாரமற்ற 4,400 கிலோ பிரியாணி, பஜ்ஜி பறிமுதல்

February 21st, 2008 பகுப்புகள்: உடல்நலம், சமூகம், சென்னை, வணிகம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

டீக்கடைகள், தள்ளுவண்டிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுகாதாரமற்ற பிரியாணி, பஜ்ஜி, போண்டா, வடை உள்ளிட்ட உணவுப் பொருள்கள் 4,415 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. இவை தவிர, சமையல் எண்ணெய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், டீத்தூள் உட்பட 83 வகை பொருட்களின் மாதிரிகள் கடைகளில் இருந்து பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.

டீக்கடைகள், தள்ளு வண்டிகளில் வடை, பஜ்ஜி, போண்டா தயார் செய்து விற்கின்றனர். இவை சுகாதார மற்ற முறையில் தயார் செய்து விற்கப்படுகின்றன என்று பல புகார்கள் எழுந்தன. இதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப் போக்கு உள்ளிட்ட உடல் நலக்குறைவு ஏற்படுகிறது என்று மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. மேயர் உத்தரவின் பேரில், 10 மண்டலங்களிலும் மாநகராட்சி உதவி சுகாதார அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

திருவல்லிக்கேணி நெடுஞ் சாலை, தி.நகரில் உள்ள நடேசன் சாலை, பாண்டிபஜார், ராயபுரம் ஜி.ஏ.ரோடு, எஸ். என்.செட்டி சாலை, வால் டாக்ஸ் சாலை, மூர்மார்க்கெட் அல்லிகுளம், பிராட்வே பஸ் நிலையம், என்.எஸ்.சி. போஸ் சாலை உள்பட அனைத்து மண்டலங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. அங்குள்ள டீக்கடைகள், தள்ளு வண்டிகளில் இருந்து உணவுப் பொருள்கள் தயாரிக்கப் பயன் படும் சமையல் எண்ணெய், டீத்தூள் ஆகியவற்றின் மாதிரிகள் எடுத்து தரமற்ற உணவுப் பொருள்கள் கண்டுபிடிக் கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் அனைத் தும் பிளீச்சிங் பவுடர், பினாயில் தெளித்து அழிக்கப் பட்டன. சுகாதாரமற்ற உண வுகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.

நன்றி: விடுதலை