திரைப்படம் | சற்றுமுன்...




தசாவதாரம் ஜூன் 12 வெளியாகும்

May 30th, 2008 பகுப்புகள்: திரைப்படம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | ஒரு மறுமொழி » |

கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தின் ரிலீஸை தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன ஜூன் 6ம் தேதிக்குப் பதில் ஜூன் 12ம் தேதிக்கு தள்ளி வைத்து விட்டார்.

திரைப்படத்தை ஜூன் 6ம் தேதி வெளியாகுவதாக இருந்தது. ஆனால் திடீரென இரு புதிய வழக்குகள் படத்துக்கு எதிராக தொடரப்பட்டன. இதனால் படம் எப்போது வெளியாகும் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

ஆனால் வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டதால், படத்திற்கு தடங்கல் நீங்கியதாக அனைவரும் நினைத்தனர். இந்திப் பதிப்பில் இன்னும் 2 ரீல்களுக்கு டப்பிங் பணிகள் பாக்கி உள்ளனவாம். அதேபோல ஆப்டிகல் வேலை மற்றும் கிராபிக்ஸ் வேலைகளும் இன்னும் முழுமை அடையவில்லை. அவை பிரசாத் லேபில் படு தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறதாம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழில் ஜூன் 12ம் தேதி படம் ரிலீஸாகும். ஆனால் இந்தி டப்பிங் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. குறிப்பிட்ட நாளுக்குள் அது முடியுமா என்பதும் தெரியவில்லை.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட பிரிண்டுகள் போட வேண்டியுள்ளது. அதற்கு சில நாட்கள் பிடிக்கும். மேலும் மும்பையில் உள்ள ஆட்லேப்ஸ் கிளையில் சில பணிகள் நடந்து வருகின்றன. அதனால்தான் இந்த தாமதம். ஜூன் மத்திக்குள் படம் எப்படியும் வெளியாகி விடும் என்றார்.

நன்றி: தட்ஸ்தமிழ் - Once again Dasavatharam postponed!!

முந்தைய சற்றுமுன்:

1. கமல் நடிக்கும் தசாவதாரம் படத்தை எதிர்த்து மீண்டும் வழக்கு

2. கமல் ஹாசன் நீதிமன்றத்தில் ….

3. கமல்ஹாசன் மீது இயக்குநர் சரண் புகார்

4. தசாவதாரம் எப்போது? - கமல் பேட்டி


தசாவதாரம்: தடை கோரி வழக்கு

May 10th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், சட்டம் - நீதி, திரைப்படம், பொழுதுபோக்கு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | 2 மறுமொழிகள் » |

பிரபல தமிழ் நடிகர் கமலஹாசன் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் ‘தசாவதாரம்’ என்கிற தமிழ் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடைவிதிக்கும்படி, உலகளாவிய ஸ்ரீவைஷ்ணவ தர்ம சம்ரக்ஷண சங்கம் என்கிற அமைப்பை சேர்ந்த கோவிந்த ராமானுஜதாசா அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

திரைப்படத்தின் விளம்பரங்களில் காட்டப்படும் காட்சிகள், வைஷ்ணவர்கள் பெரிதும் மதித்துப் போற்றும் ராமானுஜரையும் பெருமாளையும் இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்திருப்பதாகவும், அவர் தமது மனுவில் கூறியிருக்கிறார். அவரது மனுவை சென்னை உயர்நீதி மன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

கோவிந்த ராமானுஜதாசா அவர்களின் வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த இந்த படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன் அவர்கள், தமது திரைப்படத்தில் ராமானுஜரையோ, இந்துமதத்தையோ இழிவுபடுத்தும் காட்சிகள் எவையும் இடம்பெறவில்லை என்று கூறினார்.

தமது திரைப்படத்தை அதன் முழுமையான வடிவத்தில் பார்த்தால் இது போன்ற குற்றச்சாட்டுக்கள் எழாது என்றும் கூறிய அவர், இந்து மதம் உட்பட எந்த மதத்தையும் இழிவுபடுத்தும் நோக்கம் தமக்கோ தமது திரைப்படத்திற்கோ இல்லை என்றும் கூறினார்.

நன்றி: பிபிசி


இந்தியாவில் பாகிஸ்தானிய திரைப்படம் “குதா கே லியே” இன்று வெளியீடு

April 4th, 2008 பகுப்புகள்: *பொது, திரைப்படம் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

நாற்பதாண்டுகளுக்கும் மேலாக இல்லாதிருந்த குறையை நீக்குமாறு பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட திரைப்படம் “குதா கே லியே ” ( கடவுளுக்காக) இந்திய திரையரங்குகளில் இன்று திரையிடப்படுகிறது. பாகிஸ்தானின் இயக்குநர் சையூப் மன்சூரின் முதல் படமான இது அங்கு வசூலில் முன்னணி வகித்திருந்தது. சான் மற்றும் இமாம் அலி நடித்திருக்கும் இந்தப்படத்தில் இந்திய நடிகர் நசிருத்தீன் சா ஒரு மதகுருவாக கௌரபணியாற்றியிருக்கிறார். மத மிதவாதி ஒருவன் எவ்வாறு தனது மதத்திற்குள்ளும் வெளியிலும் புறம்தள்ளப்படுகிறான் என்பதை சித்தரிக்கும் படம் இது.

Pak. film ‘Khuda Ke Liye’ released in India


கமலஹாசன் இயக்கி நடிக்கும் மர்மயோகி

April 4th, 2008 பகுப்புகள்: திரைப்படம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | 2 மறுமொழிகள் » |

சுமார் 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் ‘மர்மயோகி’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது.

பிரபல ஹாலிவுட் பட நிறுவனமான வால்ட் டிஸ்னியும் பாலிவுட் நிறுவனமான பரத்பாலா புரொடக்ஷன்ஸும் இணைந்து இந்த பிரமாண்ட படத்தைத் தயாரிக்கின்றன. ஏழாம் நூற்றாண்டில் நடக்கும் ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் அஸின், ஹேமமாலினி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

நன்றி: தினமணி


அங்காடி தெருவிலிருந்து ஜெயமோகன் விலகினார்

March 20th, 2008 பகுப்புகள்: கலை-இலக்கியம், சர்ச்சை, தமிழ்நாடு, திரைப்படம், திரையுலகம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | 8 மறுமொழிகள் » |

எம்.ஜி.ஆர்-சிவாஜி ஆகிய இமயங்களை விமர்சித்த எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. அத்துடன், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவர் வசனம் எழுதும் படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று கூறியிருந்தது.

இதையடுத்து தான் இயக்கி வரும் அங்காடி தெரு படத்திலிருந்து ஜெயமோகனை விலகி கொள்ள சொல்லிவிட்டாராம் வசந்தபாலன். ஆனால், ஜெயமோகன் வசனம் எழுதிய நான் கடவுள் படம் சம்பந்தப்பட்டவர்கள் என்ன முடிவை எடுத்திருக்கிறார்கள் என்பது இன்னும் வெளியிடப்படவில்லை.

நன்றி: தமிழ் சினிமா


அமெரிக்க இராணுவ தடுப்புக்காவலில் இறந்த ஆப்கானிய இளைஞருக்கு ஆஸ்கர் விருது விழாவில் அஞ்சலி

February 25th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, அரசியல், ஆசியா, உலகம், கலை-இலக்கியம், குறும்படம், திரைப்படம், திரையுலகம், விருது | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

ஹாலிவுட்டில் நடந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவின்போது அமெரிக்க இராணுவத்தின் தடுப்புக் காவலில் இறந்த ஆப்கானிய இளம் வாடகைக் கார் ஓட்டுநர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

டாக்ஸி ஆன் த டார்க் சைட் என்ற படத்துக்காக சிறந்த விவரணப் பட விருதை வாங்கிய அமெரிக்க இயக்குநர் அலெக்ஸ் கிப்னீ, தனது படைப்பை டிலாவர் என்றஅந்த 22 வயது ஓட்டுநருக்கு அர்ப்பணித்தார்.

2002ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஒரு சிறையில் நிகழ்ந்த அவரது மரணம், அமெரிக்கப் படைகளின் புலன் விசாரணை உத்திகளை ஆராய்வதாக அமைந்துள்ள இந்தப் படத்தின் கருவாக ஆனது. அவர் குற்றமற்றவர் என்று விசாரணையாளர்கள் முடிவுதெரிவித்த பின்னரும் அவர் மோசமாக நடத்தப்பட்டதாக பிற்பாடு ரகசியமாக கசியவிடப்பட்ட ஒரு அமெரிக்க இராணுவ அறிக்கையில் கண்டறியப்பட்டிருந்தது.

நன்றி: தமிழ் பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. www.kansascity.com | 02/24/2008 | Documentary | ‘Taxi to the Dark Side’

2. BBC NEWS | South Asia | Oscars tribute to torture victim

3. Think Progress » Taxi to the Dark Side wins best documentary.


ரோபோவில் அர்ஜுன்?

February 16th, 2008 பகுப்புகள்: திரைப்படம் | தொகுப்பாளர்: லக்கிலுக் | மறுமொழிகள் இல்லை » |

ஷங்கரின் கனவுப்படமான ரோபோட் குறித்து தினம் தினம் புதுச்செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. ஐஸ்வர்யா ராய் இருக்கிறாரா? இல்லையா? என்பதே இன்னமும் தெரியாத நிலையில் ஆக்சன் கிங் அர்ஜூன் படத்தில் இடம்பெறுவார் என்று புதிய செய்தி ஒன்று கோலிவுட்டை கலக்கி வருகிறது. 

ஷங்கரின் பிரமாண்டப் படைப்பான ரோபோட்டில் நடிக்கும் கலைஞர்கள் தேர்வு படு கமுக்கமாக நடந்து வருகிறது. ரஜினியைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராயை முடிவு செய்தனர். இப்போது பிற கலைஞர்கள் பக்கம் ஷங்கர் பார்வையைத் திருப்பியுள்ளார்.

படத்தில் வரும் ஒரு முக்கிய கேரக்டருக்கு அர்ஜூனை, ஷங்கர் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இது வில்லன் ரோல் அல்லவாம்.

சூப்பர் நடிகர் ஒருவருடன் அர்ஜூன் இணைவது இது முதல் முறையல்ல. முதன் முதலில் அவர் உலக நாயகன் கமல்ஹாசனுடன், குருதிப் புணல் படத்தில் இணைந்து நடித்தார். அதில் கமலுடன் சேர்ந்து, அர்ஜூன் கேரக்டரும் வெகுவாக பேசப்பட்டது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டாருடன் தற்போது இணையப் போகிறார் அர்ஜூன்.

தனிப்பட்ட முறையில் அர்ஜூன், ரஜினியின் விசிறியும் கூட. தனது ஆசான் என்று ரஜினியை அவர் அடிக்கடி வர்ணிப்பார்.

அர்ஜூனுக்குப் பெரிய பிரேக் கொடுத்த படம் ஜென்டில்மேன். அதேபோல இடையில் தொய்வடைந்து கிடந்த அர்ஜூனின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய படம் முதல்வன். இரு படங்களும் ஷங்கரின் இயக்கத்தில் உருவானவை.

முதல்வன் படத்தில் முதலில் ரஜினிதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு ரஜினி மிக நெருக்கமாக இருந்ததால் சர்ச்சை வந்து விடப் போகிறது என்பதால் அப்படத்தில் நடிக்க மறுத்தார். ஆனால் அர்ஜூனை நடிக்க வைக்கலாம் என ரஜினிதான் ஷங்கரிடம் பரிந்துரைத்தாக கூட கூறப்பட்டது.

இப்படி முந்தைய நிகழ்வுகளை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது ரோபோட் படத்தில் ரஜினியுடன் அர்ஜூன் நடிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளன.

 http://thatstamil.oneindia.in/movies/heroes/2008/02/15-action-king-with-box-office-king.html


ஜோதா அக்பருக்கு வெளிநாட்டு இந்தியர்கள் எதிர்ப்பு

February 13th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, சர்ச்சை, திரைப்படம், போராட்டம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

ஜோதா அக்பரில் வரலாற்று உன்மைகள் திரிக்கப்படு காண்பிக்கப்படுவதாக இந்தியாவில் தோன்றியுள்ள எதிர்ப்புக்கு ஆதரவாக வெளிநாட்டு இந்தியர்களும் குரல்கொடுக்கத் துவங்கியுள்ளனர்.

அமெரிக்காவில் சிலிக்கான் பள்ளத்தாக்கு பகுதியில் Agni Foundation; the Netherlands, Global Institute for Truth & Awareness (GITA), USA; Hindi USA; Independent NRI Forum, USA; Kashmir Task Force, USA; Save Temples, USA. ஆகிய அமைப்புக்களின் சார்பில் ஜோதா அக்பர் படத்தை புறக்கணிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.

திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் அக்பருக்கும் ஜோதா பாய்க்கும் இடையேயான காதல் முற்றிலும் கற்பனையானது என்றும் அக்பரின் வரலாற்றை பதித்த அபுல் பசலின் குறிப்புக்களில் ஜோதாபாய் என ஒருவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும் இவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

NRI groups call for boycott of Jodhaa Akbar movie - TOI


“சற்றுமுன் கிடைத்த தகவல்” - திரைப்படமாகிறது

January 25th, 2008 பகுப்புகள்: திரைப்படம், திரையுலகம் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

kanalkannan03.thumbnail.jpgதிரைப்படங்களில் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கும் கனல்கண்ணன் ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமல்லாமல் நகைச்சுவை காட்சிகளிலும் அவ்வப்போது நடித்து வருபவர் . இந்த நிலையில் அவர் முழு நேர நாயகனாக “சற்றுமுன் கிடைத்த தகவல்” என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். கண்ணனுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் ‘அம்முவாகிய நான்’ நாயகி பாரதி. ஒரு காலத்தில் முன்னணி நாயகியாக விளங்கி இப்போது தொலைக்காட்சி தொடர்களில் நிலைத்துள்ள கெளசல்யா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.தக்காளி சீனிவாசன் இயக்கத்தில் உருவாகி வருகிறது இப்படம்.

இப்படத்தின் திரைப்பாடல்கள் ஒலிநாடா வெளியீட்டு விழா சென்னை சவேரா ஹோட்டலில் இன்று மாலை நடக்கிறது.படம் அடுத்தமாதம் வெளியாகும் என்று தெரிகிறது.

தட்ஸ்தமிழ் தளம் வழியே…


ரஜினி படத்தில் சிம்ரன்

January 18th, 2008 பகுப்புகள்: திரைப்படம், திரையுலகம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

Host unlimited photos at slide.com for FREE!கவிதாலயா தயாரிப்பில் பி.வாசு இயக்கும் ‘குசேலர்’ படத்தில் சிம்ரன் நடிக்கிறார் . இந்தத் தகவலை நேற்று பி.வாசு வெளியிட்டார்.

‘சந்திரமுகி’ படத்தில் ஜோதிகா நடித்த வேடத்தில் முதலில் ஒப்பந்தமானவர் சிம்ரன். அவரை வைத்து சில காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் திடீரென்று படத்திலிருந்து விலகிக் கொண்டார். சிம்ரன் கர்ப்பமாக இருந்ததால், பாடல் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து ஆட முடியாது, அதனால்தான் படத்திலிருந்து விலகினார் என அப்போது காரணம் கூறப்பட்டது.

நன்றி: சினிசவுத்


ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ‘குசேலன்’

January 15th, 2008 பகுப்புகள்: திரைப்படம், திரையுலகம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | ஒரு மறுமொழி » |

மம்முட்டி நடித்த ‘கதபறயும் போல்’ என்ற மலையாள படத்தை கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தமிழில் தயாரிக்கிறது. இந்த படத்தை பி.வாசு இயக்குகிறார்.

ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க, அவருடைய நண்பராக பசுபதி நடிக்கிறார். படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடி கிடையாது. மற்ற நடிகர்-நடிகைகளின் தேர்வும் நடைபெறுகிறது.

இந்த படத்துக்கு ‘குசேலன்’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இது ஒரு ஏழை நண்பனுக்கும், பணக்கார நண்பனுக்கும் இடையேயான பாச போராட்டத்தை அடிப்படையாக கொண்ட கதை.

‘கதபறயும் போல்’ படத்தில் மம்முட்டி சினிமா நடிகராகவே நடித்திருந்தார். அவருடைய ஏழை நண்பராக சீனிவாசன் நடித்திருந்தார். சவரத்தொழில் செய்யும் சீனிவாசன் வறுமையில் வாடுகிறார். இந்த நிலையில், அந்த ஊருக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள மம்முட்டி படப்பிடிப்புக்காக வருகிறார்.

அப்போது மம்முட்டியை சந்திக்கும்படி சீனிவாசனிடம் அவருடைய மனைவியும், குழந்தைகளும் வற்புறுத்துகிறார்கள். ஆனால், சீனிவாசன், மம்முட்டியை சந்திக்க மறுக்கிறார். பணக்கார நண்பரான மம்முட்டியிடம், சீனிவாசன் உதவி கேட்க விரும்பவில்லை.

இந்த நிலையில், நண்பன் சீனிவாசன் அந்த ஊரில்தான் வசிக்கிறார் என்பதை கேள்விப்பட்டு அவருடைய குடிசை வீட்டுக்கு வருகிறார் மம்முட்டி. அப்போதுகூட மம்முட்டியிடம், சீனிவாசன் உதவி எதுவும் கேட்காமல் உபசரிக்கிறார்.

புராணத்தில் கிருஷ்ணர்-குசேலர் நட்பை சித்தரிப்பது போன்ற இந்த கதைக்கு ‘குசேலன்’ என்று பெயர் சூட்டினால் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறார்கள். மம்முட்டி நடித்த வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். சீனிவாசன் நடித்த வேடத்தில் பசுபதி நடிக்கிறார். மலையாள படத்தில் சீனிவாசனின் மனைவியாக மீனா நடித்திருந்தார்.

தமிழ் படத்திலும் மீனாவே நடிக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. ஆனால், இதுவரை இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு தனக்கு வரவில்லை என்று மீனா கூறுகிறார். இது தொடர்பாக, ‘என்னிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை’ என்று அவர் கூறினார்.

‘குசேலன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு உங்களை தேடி வந்தால் பசுபதி ஜோடியாக நீங்கள் நடிப்பீர்களா? என்று மீனாவிடம் கேட்டதற்கு, “வாய்ப்பு வரும்போது பார்க்கலாம்” என்று பதில் அளித்தார்.

நன்றி: தினத்தந்தி


“சுல்தான்: த வாரியர் அப்பாவிற்காக” - சௌந்தர்யா

January 14th, 2008 பகுப்புகள்: ஆளுமை, திரைப்படம், திரையுலகம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

நடிகர் ரஜினிகாந்தின் மகள் உருவாக்கி வரும் சுல்தான்:த வாரியர் எனும் அனிமேஷன் திரைப்படத்தின் இரண்டாவது முன்னோட்ட(trailer) வெளியீட்டின் போது இந்தப் படம் தன் தந்தைக்காக என அவர் மகள் சௌந்தர்யா கூறியுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் சௌந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோவும் ஆட்லாப்சும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் வரும் நவம்பரில் வெளியாகவுள்ளது. இந்திய சூப்பர்ஸ்டார் ஒருவரைக் கொண்டு தயாரிக்கப்படும் முதல் வரைகலை திரைப்படம் இது.
ரூ.40 கோடி செலவில் தயாராகும் த வாரியர் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி உட்பட்ட 12 மொழிகளில் வெளிவரவுள்ளது.

படத்தின் முனோட்டம் இங்கே.

‘Sultan: The Warrior’ is for my Appa: Rajnikanth’s daughter