வரலாறு | சற்றுமுன்...




மன்மோகன் அரசு தப்பியது ஆதரவு - 275 எதிர்ப்பு - 256

July 22nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அரசியல், அரசியல், இந்தியா, தகவல், தேர்தல், தேர்தல்முடிவு, நாடாளுமன்றம், மத்திய அரசியல், வரலாறு | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | மறுமொழிகள் இல்லை » |

மத்திய அரசு இன்று நம்பிக்கை வாக்கு கோரி இருந்ததை அறிந்திருப்பீர்கள் இவ்வாக்கெடுப்பில் காங்கரசுக்கு ஆதரவாக 256 வாக்குகளும் எதிராக 232 வாக்குகளும் மின்னனு இயந்திரம் மூலம் பதிவானதை அடுத்து மன்மோகன் அரசு தனது ஆட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் தங்களது வாக்குகள் பதிவாக வில்லை என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்ததால் பின்னர் வாக்கு சீட்டு அளித்து வாக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து இப்போது ஆதரவு 275 எனவும் எதிர்ப்பு 256 என அறிவித்து  காங்கிரசு அரசு வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.


மேற்கு வங்கத்தில் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

March 27th, 2008 பகுப்புகள்: இந்தியா, வரலாறு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | 3 மறுமொழிகள் » |

இதுவரை நம்பப்படாத காலத்திற்கு முன்னரே அதாவது இருபது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கற்கால மனிதன் இந்த இடத்தில் வாழ்ந்திருப்பது தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் மேற்கு வங்கத்தில், அசாதாரணமான - மிகுந்த முக்கியத்துவம் பெறக்கூடிய - கற்கால தொல்பொருட்கள் சிலவற்றை தொல்பொருள் அகழ்வு ஆராய்ச்சி நிபுணர்கள் கண்டெடுத்துள்ளனர்.

வங்கதேச எல்லையருகே முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நில அகழ்வு வேலைகளின்போது கோடாரிகள் மற்றும் சிறு ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்தியாவின் மலைசார் பகுதிகளில் கற்கால மனிதன் வாழ்ந்தமைக்கு சான்றுகள் நிறைய இருந்தாலும் கங்கை நதியின் வெள்ளப் பகுதியில் அவர்கள் வாழ்ந்ததைக் காட்டும் இதுபோன்ற சான்றுகள் மிக அரிது என்றும் கூறப்படுகிறது.

நன்றி: பிபிசி


பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பற்றிய ஆவணப்படம்

February 22nd, 2008 பகுப்புகள்: ஆளுமை, குறும்படம், வரலாறு | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

                  அவரது நூறாவது பிறந்தநாள்விழா கொண்டாட்டங்கள் முன்னிட்டு அவரது thevar.jpgவாழ்க்கையை ‘பசும்பொன் தேவர் வரலாறு’ என்ற 75 நிமிடங்கள் ஓடும் ஆவணப்படத்தை ஐபி கார்த்திகேயனின் பாபிலோன் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ரூ.ஒரு கோடி செலவில் தயாரித்துள்ளது. கடந்த அக்டோபரில் ஆரம்பித்த படபிடிப்பு தற்போது முடிந்து வரும் மார்ச் மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது. எம்.பி அப்ரகாம் லின்கன் இதனை இயக்கியிருக்கிறார்.

தேவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசுடன் கொண்டிருந்த பற்றுதலையும் பிணைப்பையும் மீட்டு, அவர் இறந்ததாகக் கருதப்படும் 1945க்குப் பிறகு பத்துவருடங்கள் கழித்து 1956இல் நேதாஜியை தேவர் நேரில் சந்த்தித்து நாடாளுமன்றத்திலும் உரையாற்றியதும் திரைப்படமாகியுள்ளது.1927இல் பிரித்தானிய காவலர்களுக்கு தெரியாமல் தேவர் அவருக்கு தன்னுடைய புளிச்சிக்குளம் பண்ணையில் ஒருவருடத்திற்கும் மேலாக அடைக்கலம் கொடுத்ததை அவரது உறவினர்கள் ஆதாரங்களுடன் கூறுவதும் ஆவணப் படுத்தப் பட்டிருக்கிறது.

பிரச்சினைக்குறிய முதுகுளத்தூர் சாதிக்கலவரமும் உள்ளூர் பாதிக்கப்பட்டவர்கள் வாய்மொழியாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.அந்நாளைய ஆட்சியாளர்களின் அரசியல்சூழ்ச்சிகளே இக்கலவரங்களுக்குக் காரணம் என்று இயக்குனர் லின்கன் கூறினார்.

விஜய் அண்டனி இசை அமைக்க யுகபாரதி மூன்று பாடல்களை எழுதியுள்ளார். வாகை சந்திரசேகர் பின்னணி குரல் கொடுத்துள்ளார். தேவர் பாத்திரத்தில் யாரும் நடிக்காது 3D நிழற்படங்கள் மூலமே அவரை சுட்டவேண்டிய காட்சிகளில் படம் எடுக்கப்பட்டுள்ளது.

Film on Tamil leader sheds light on Netaji’s secret years 


வரலாற்றுப் பொக்கிஷங்கள் பாதுகாக்கப்படுமா?: விழுப்புரத்தில் மியூசியம் தேவை

January 10th, 2008 பகுப்புகள்: சமூகம், வரலாறு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

வரலாற்றுப் பொக்கிஷங்கள் பாதுகாக்கப்படுமா?: விழுப்புரத்தில் மியூசியம் தேவை

விழுப்புரம் மாவட்டத்தில் காணப்படும் பழமை வாய்ந்த வரலாற்று பொக்கிஷங்களை பாதுகாப்பதற்கு மியூசியம் அமைக்க வேண்டும் என வரலாற்று ஆய் வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் வரலாற் றுச் சிறப்புமிக்க பல அற்புதங்களை உள்ளடக்கியதாக விளங்கி வருகிறது. மாவட்டத்தின் வடக்கே ராஜாதேசிங்கு ஆண்டுவந்த வரலாற்று புகழ்மிக்க செஞ்சிக்கோட் டையும், வடகிழக்கே ஆரோவில், புதுச்சேரி மாநிலத்தையொட்டிய சுற்றுலா தலங்களையும், தெற்கே நீர் வீழ்ச்சிகளோடு கூடிய கல்வராயன் மலைத் தொடர்ச்சியும் கொண்டுள் ளது. இத்தகைய புகழ்மிக்க பல் வேறு இடங்களை கொண்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் பழமை வாய்ந்த பொக்கிஷங்களை வைத்து பாதுகாப்பதற்கும், அதனை பின் வரும் சந்ததியினர்கள் தெரிந்து கொள்வதற்கும் மியூசியம் அமைக் கப்படவில்லை. இதனால் பல வரலாற்று அற்புதங்களை மக்கள் தெரிந்து கொள்ள முடியாத நிலை நீடித்து வருகிறது.

விழுப்புரம் அடுத்த கீழ்வாலை, செத்தவரையில் உள்ள பழங்கால பாறை ஓவியங்கள், திருவக்கரை கல்மரமான அறிவியல் விந்தை, மண்டகப்பட்டு, தளவானுõரில் உள்ள குடைவரைக்கோவில்கள், திருக்கோவிலுõர் அருகே கம்பையில் லிங்கங்கள், ஆரோவில் பகுதியில் முதுமக்கள் தாழிகள் என பல்வேறு இடங்களில் கிடைத்த சாமி சிலைகள், வரலாற்று நிகழ்வுகளை குறித்துள்ள செப்பேடுகள், நாணயங்கள், கல்வெட்டுகள் ஆகியன மாவட்டம் முழுவதும் பல் வேறு இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டு வைக்கப்பட்டுள்ளது. இவை பெரும்பாலான இடங்களில் முறையாக பாதுகாக்கப்படாமல் சிதைந்து வருகிறது. பழமையான சிலைகள் விக்கிரவாண்டி அருகே சாலையோரமாகவும், விழுப்புரத்தில் பொதுப்பணித் துறை அலுவலகத்தின் வெளியேயும் போடப்பட்டு சிதைந்து வரு கிறது. சமீபத்தில் சேர்ந்தனுõர் அருகே கிடைத்த கருடாழ்வார், லட்சுமிநரசிம்மர் சிலையும் பாதுகாப்பற்ற நிலையில் திறந்தவெளி கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தியாகதுருகம் மலைப் பகுதியில் சிதிலமடைந்து கிடந்த திப்புசுல்தான் காலத்திய பீரங்கியை எஸ்.பி., அமல்ராஜ் நேரில் பார்வையிட்டார். பின்னர் அரசு அனுமதிபெற்று அதனை கொண்டு வந்து விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தின் முகப்பில் வைத்துள்ளார்.

இது போன்ற கண்டுபிடிப்புகள், அரிய பொக்கிஷங்கள் பாதுகாப்பாக வைக்க முடியாமலும், பரவலாக கிடைக்கின்ற இடங்களில் கோவில்களிலும், அதே போல் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் திருவக்கரை கல்மரம் உள் ளிட்ட சில அரிய பொருட்களை காட்சிக்கு வைத்துள்ளனர். இத்தனை சிறப்பம்சம் கொண்ட விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்று சிற்பங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாக்க ஒரு மியூசியம் அவசியம் தேவை என வரலாற்று ஆய் வாளர் கள் அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளனர். எனவே வரலாற்று அற்புதங்களை அனைத்து தரப்பினரும் தெரிந்துகொள்ளும் வகையில் விழுப்புரத்தில் புதிதாக மியூசியம் அமைப்பதற்கு தொல்பொருள் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் வரலாற்று ஆராய்ச் சியாளர்களும், சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் பயன்பெறுவதோடு, பின்வரும் சந்ததியினரும் வரலாற்று பின்னணிகளை தெரிந்துகொள்வதற்கு வழி வகுக்கும்.

www.dinamalar.com


சுதந்திர போராட்ட வரலாறு மாணவர்கள் காண வாய்ப்பு

January 8th, 2008 பகுப்புகள்: வரலாறு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

சுதந்திர போராட்ட வரலாறு மாணவர்கள் காண வாய்ப்பு

இந்தியாவின் 150 ஆண்டு கால சுதந்திர போராட் டங்களை சித்தரிக்கும் நடமாடும் கண்காட்சி ரயில்(ஆஷாதி எக்ஸ்பிரஸ்) மதுரைக்கு ஜன., 11ல் வருகிறது. மாணவர்கள் இதனை பார்வையிட்டு சுதந்திர வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் 1857 முதல் 1947 வரையில் நடந்த சுதந்திர போராட்ட நிகழ்ச்சிகளை சித்தரித்து இந்த ரயிலில் கண்காட்சி அமைத்துள்ளது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் நடந்த போராட் டங்களின் போட்டோக்கள், அரிய படங்கள் 16 பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் ஜன., 8 முதல் 22 ம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களுக்கு செல்கிறது. கன்னியாகுமரியில் இருந்து மதுரை வரும் ரயில் ஜன., 11 மற்றும் 12ம் தேதிகளில் 8 வது பிளாட்பாரத்தில் நிற்கும். பிறகு ரயில் இங்கிருந்து ராமேஸ்வரம் செல்கிறது. அங்கு ஜன., 13 முதல் 16 வரை நிற்கும். அங்கிருந்து ரயில் சென்னை, காட்பாடிக்கு செல்லும். மதுரையில் இந்த ரயிலை காலை 10 முதல் மாலை 6 மணி வரை மாணவர்கள், பொது மக்கள் இலவசமாக கண்டு களிக்கலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.