மரணம் | சற்றுமுன்...




கர்நாடகாவில் பேருந்து விபத்து: 16 மாணவர்கள் பலி

August 14th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், குழந்தைகள், சற்றுமுன், மரணம், விபத்து | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கர்நாடகாவில் பேருந்து விபத்து: 16 மாணவர்கள் பலி

பெங்களூர், ஆக. 14: கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து பேருந்து ஒன்று 28 மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றுகொண்டிருந்தது. அப்போது ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அங்கிருந்த ஆற்றில் கவிழ்ந்தது.

அங்கு கூடியிருந்த மக்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்கியதால் 14 மாணவர்கள் காப்பாற்றப்பட்டனர். மற்ற மாணவர்கள் இறந்துவிட்டதாகவும், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 


கிளன் மெக்ராத் மனைவி மரணம்

June 22nd, 2008 பகுப்புகள்: உடல்நலம், கிரிக்கெட், பெண்கள், மரணம் | தொகுப்பாளர்: சற்றுமுன் - வினையூக்கி | மறுமொழிகள் இல்லை » |

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளன் மெக்ராத்தின் மனைவி ஜேன் மெக்ராத் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 42. அவர் மார்பக புற்றுநோயினாலும் எலும்பு புற்றுநோயினாலும் பாதிக்கப்பட்டு சிலகாலமாக மருத்துவ சிகிச்சை பெற்றுவந்தார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் குடும்பத்தினர் மத்தியில் நன்மதிப்பைப் பெற்று இருந்த மெக்ராத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். மெக்ராத் தம்பதியினர் மெக்ராத் பவுண்டேசன் என்ற அமைப்பை மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்படும் பெண்களுக்காக நடத்தி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மெக்ராத் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

மெக்ராத் பவுண்டேசன் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்


ராஜஸ்தான் மாநிலத்தில் மோதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

May 25th, 2008 பகுப்புகள்: அரசியல், இடஒதுக்கீடு, கலவரம், கிளர்ச்சி, சட்டம் - நீதி, சமூகம், மரணம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் இனத்தாருக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையில் நடந்த மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது என இந்திய பொலிசார் கூறுகின்றனர்.

கலவரத்தை அடக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பாக இருக்கும் தங்கள் இனத்தை பழங்குடியினத்தவராக அரசு அங்கீகரித்து கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களில் சிறப்பு இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென குஜ்ஜார்கள் கோரிவருகின்றனர்.

சுமார் ஓராண்டுக்கு முன்னரும் இதேபோல் ஒரு போராட்டமும் கலவரமும் நடந்து அதில் இருபது பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. NDTV.com: Gujjar leader refuses talks with govt

2. Class violence leaves 35 dead in India - CNN.com

3. The Statesman: “Cops gun down 18 more Gujjars”


நேபாள தேர்தல் வன்முறைகளில் 6 பேர் பலி

April 9th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, உலகம், தேர்தல், மரணம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

நேபாளத்தில் புதிய அரசியல் சாசனத்தை எழுதுவதற்காக ஒரு அரசியல் சாசன சபையை தேர்ததெடுக்கும் முகமாக நாடு தழுவிய தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், தென்மேற்குப் பகுதியில் இரு கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்களின் பின்னர் ஆறு மாவோயிஸ்டுகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

டாங் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த மோதல்கள்தான் தேர்தல் காலத்தில் இடம்பெற்ற மிக மோசமான வன்முறை சம்பவமாகும்.

மன்னராட்சியை ஒழித்து ஒரு புதிய அரசியல் சாசனத்தை எழுதவுள்ளவர்கள் இந்தத் தேர்தல் மூலம் தேர்தெடுக்கப்படவுள்ளனர்.

இந்த தேர்தல் வழிமுறைதான் மாவோயிஸ்டுகளை நீண்ட கால கிளர்ச்சியை கைவிட்டு அரசியல் நீரோட்டத்துகு அழைத்து வந்தது.

நன்றி: பிபிசி

முந்தைய சற்றுமுன்:

1. நேபாள மாவோயிஸ்டுகளுக்கு கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சுக்கள் | நேபாள மாவோயிஸ்டுகள் அமைச்சரவையில் இணைந்தனர்

2. நேபாளம்: மன்னர் கட்டவேண்டிய மின்கட்டணம்.

3. நேபாளத்தில் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொலை

மேலும் விவரங்களுக்கு:

1. NDTV.com: Nepal set for historic elections

2. BBC NEWS | South Asia | Seven dead in Nepal poll violence

3. Nine dead in pre-poll violence - Hindustan Times


இலங்கை கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் உட்பட 12 பேர் பலி

April 7th, 2008 பகுப்புகள்: அரசியல், ஈழம் - இலங்கை, குண்டுவெடிப்பு, கொலை, தடகளம், மரணம், விளையாட்டு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

அமைச்சர் ஜெயராஜ் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் மீது அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கையின் மேல்-மாகாணத்திலுள்ள கம்பஹா மாவட்டத்தில் ஞாயிறு காலை இடம்பெற்ற சக்திவாய்ந்த வெடிகுண்டுத் தாக்குதலொன்றில் இலங்கை அமைச்சரவையின் மூத்த அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே உட்பட சுமார் 12 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஞாயிறு காலை கம்பஹா மாவட்டத்தில் வலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுக்கொண்டிருந்த சிங்கள-தமிழ் புத்தாண்டையொட்டிய மராதான் ஓட்டப்போட்டியொன்றில் பிரதான விருந்திரனாக கலந்துகொண்டிருந்த அமைச்சர் பெர்ணாண்டோபுள்ளே, அந்த ஓட்டப் போட்டியினை தொடக்கிவைப்பதற்கு சில நிமிடங்கள் முன்னதாக இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றிருக்கிறது.

இதில் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளேயுடன்,

  • இலங்கையின் முன்னாள் தடகளவீரரும், தெற்காசிய மராதான் ஓட்டப் போட்டியில் தங்கப்பதங்கம் வென்றிருந்தவருமான கே.எஸ் கருணாரட்ண மற்றும்
  • தேசிய தடகளப் பயிற்றுவிப்பாளருமான லக்ஸ்மன் டீ அல்விஸ்

உட்பட சிவிலியன்களும் கொல்லப்பட்டிருப்பதாகவும், சுமார் 90க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கம்பஹா மாவட்டத்தின் மூத்த பொலிஸ் அதிகாரியான எஸ்.எஸ்.பி. ஹெக்டர் தர்மசிறி உட்பட காயமடைந்தவர்கள் அருகிலுள்ள கம்பஹா, மற்றும் ராகம தேசிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களில் மிகவும் மோசமான நிலையிலிருந்த நால்வர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

உள்ளூர் தொலைக்காட்சிகளில் இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுவதற்கு சில மணித்துளிகளுக்கு முன் அந்த நிகழ்ச்சியில் உரையாற்றுவதையும், அதன் பின்னர் மராதான் ஓட்டப் போட்டியினை ஆரம்பித்து வைக்கும்போது குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையும் விசேட செய்தி அறிவித்தல்களின்போது காண்பிக்கப்பட்டன.

பாதுகாப்புத்தரப்பினர் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஆனாலும் ஆரம்ப விசாரணைகளில் இருந்து இந்தக் குண்டுவெடிப்புக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைக் குண்டுதாரியே காரணம் என்று ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தேசிய தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் குண்டுத்தாக்குதலையும், அமைச்சரின் படுகொலைச் சம்பவத்தையும் விடுதலைப்புலிகளின் மிருகத்தனமான செயலெனக் கண்டித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டில் பயங்கரவாதத்தினை முற்றாக அழிக்கும் தனது அரசின் நடவடிக்கைகளிலும், திடசங்கற்பத்திலும் எவ்வித மாறுதல்களையும் இது ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளார்.

55 வயதான அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே ஒரு சட்டத்தரணி ஆவார். 1983ஆம் ஆண்டிலிருந்து ஆளும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வந்ததோடு, தனது அரசியல் வாழ்வில் சிவில் விமானப் போக்குவரத்து, கிறிஸ்தவ விவகாரங்கள், இனவிவகாரம் மற்றும் நல்லிணக்கம் போன்ற பல துறைகளில் பலவருடங்கள் அமைச்சராகவும் பதவிவகித்திருக்கிறார்.

இறக்கும்போது இவர் ஆளும் கட்சியின் பிரதான கொறடாவாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், பொருளாளராகவும் கடமையாற்றியிருந்ததோடு, அடுத்தமாதம் கிழக்கு மாகாணசபைக்காக இடம்பெறவிருக்கும் மாகாணசபைத் தேர்தலையொட்டி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்துக்கான அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிய வருகிறது.

இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகியதன் பின்னர் தென்னிலங்கையில் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டாவது அமைச்சர் இவராவார். இதற்கு முன்னர் கடந்த ஜனவரி 8ம் திகதி, அமைச்சரவை அந்தஸ்தற்ற தேசநிர்மாண அமைச்சர் தஸ்ஸநாயக, ஜா-எல பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. VIRAKESARI ONLINE: “அமைச்சர் மீதான குண்டுத் தாக்குதல் குறித்த விசாரணை இரகசிய பொலிஸாரிடம் மரதன் ஓட்டப் போட்டியாளர் போன்றே குண்டுதாரி ஊடுருவல்” | பூரண அரச மரியாதையுடன் வியாழனன்று இறுதிக்கிரியை

2. Pathivu: TAMIL NATIVE! :: பதிவு: தமிழரின் பூர்வீகம்! Tamil: “அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கம்பஹாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலி”

3. TamilNet: 06.04.08 Jeyaraj Fernandopulle killed in bomb blast


த‌ற்கொலை நகரமாக மா‌றிவரு‌ம் பெ‌ங்களூ‌ர்

April 4th, 2008 பகுப்புகள்: இந்தியா, சமூகம், தற்கொலை, மரணம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

இ‌ந்‌தியா‌வி‌ன் ‌சி‌லிகா‌ன் ப‌ள்ள‌த்தா‌க்கு எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌ம் பெ‌ங்களூ‌ருவி‌ல், த‌ற்போது ஆண்டுக்கு சராச‌ரியாக 2,000 பே‌ர் த‌ற்கொலை செ‌ய்து கொ‌ள்‌கி‌ன்றன‌ர். மா‌றிவரு‌ம் வா‌‌ழ்‌க்கை‌ச் சூழ‌ல், நகரமயமா‌க்க‌ல் காரணங்களால் பெ‌ங்களூ‌ருவி‌ல் த‌ற்கொலை எ‌ண்‌ணி‌க்கை உய‌ர்‌ந்து வருவதாக த‌‌னியா‌ர் மரு‌த்துவமனை‌ நர‌ம்‌பிய‌ல் ‌நிபுண‌ர் டா‌க்ட‌ர் சு‌தி‌ர் ஹெ‌ப்ப‌ா‌ர் கூறியுள்ளார்.

அதிக தற்கொலை சம்பவங்கள் நிகழும் நகரங்களின் பட்டியலில் இந்திய அளவில் பெ‌ங்களூ‌ரு முத‌லிட‌த்‌தி‌ல் உ‌ள்ளது.

பெங்களூரு நகர கு‌ற்ற‌விய‌ல் ‌பி‌ரிவு ‌வி‌கிதா‌ச்சார‌ப்படி கட‌ந்த 2004 முதல் 2008ம் ஆ‌ண்டு வரை 7,840‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் த‌ற்கொலை செ‌ய்து கொ‌ண்டு‌‌ள்ளன‌ர். இவர்கள் அனைவரும் 15 முத‌ல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். இ‌தி‌ல் ஆ‌‌ண்க‌‌ளி‌ன் 4,845, பெ‌ண்க‌ள் 2,995 பேர்.

முழுவதும் வாசிக்க: எம்.எஸ்.என்.


அப்பாவிகளை கொல்வதில்லை-அல்கொய்தா

April 4th, 2008 பகுப்புகள்: அரசியல், உலகம், சட்டம் - நீதி, சமூகம், தீவிரவாதம், போராட்டம், மரணம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

அப்பாவிகளை கொல்வது எங்கள் இயக்கத்தின் வழக்கம் அல்ல என்று அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் பின்லேடனின் வலதுகரமான அய்மன் அல்ஜவாஹிரி கூறியுள்ளார்.

அல்ஜவாஹிரி பேசியுள்ள புதிய ஆடியோவை அல்ஜசீரா டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், எகிப்தில் அல்காய்தா மற்றும் அதன் ஆதரவு படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலின் போது அப்பாவிகள் பலியானது உண்மை. ஆனால் வேண்டுமென்றே இந்த உயிர்களை பறிக்கவில்லை. பலியான அப்பாவி மக்களை ‘மனிதக் கேடயமாக’ எதிரிகள் பயன்படுத்தியதால் நடந்த விளைவு.

அல்ஜீரியாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் ஐ.நா. சபைக்கு சொந்தமான கட்டடத்தை தாக்கியபோது அருகிலிருந்த மருத்துவமனை இடிந்து 60 பேர் பலியானார்கள். ஐ.நா. சபை இஸ்லாமிய மதத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரி. அதனால் தாக்கினோம்.

பின்லேடனுக்கு ஒரு குறையும் இல்லை. அவர் நலமாக இருக்கிறார். கவலை வேண்டாம். முழு ஆரோக்கியத்துடன் இருந்தாலும் எல்லோரையும் போல் ஒருநாள் இறக்கப் போகிறவர்தானே என்று பேசியுள்ளார் அல்ஜவாஹிரி.

நன்றி: தட்ஸ்தமிழ்

மேலும் விவரங்களுக்கு:

1. FOXNews.com - Al Qaeda's Zawahiri: Militant Organization Doesn't Kill Innocents; Threatens Egypt - International News | News of the World | Middle East News | Europe News

2. Al-Qaeda's No. 2 Defends Attacks - TIME

3. News | Africa - Reuters.com: “Al Qaeda charges are ‘totally false’-UN chief”


மேற்கு வங்கத்தில் குண்டு வெடிப்பு

April 4th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, இந்தியா, குண்டுவெடிப்பு, கொலை, சட்டம் - நீதி, மரணம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்ததுடன் குறைந்தது மூவர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும், ஆனால் அவர்கள் திபெத்தியர்களாக இருக்கலாம் என்றும் காவல் துறை கூறியுள்ளது.

சிலிகுரியில் உள்ள குண்டு வெடித்த வீட்டின் உரிமையாளர், தனது வீட்டை திபெத்தியர்கள் கம்யூட்டர் வியாபாரம் செய்வது தொடர்பாக வாடகைக்கு எடுத்திருந்தனர் என்று கூறியுள்ளார். குண்டு வெடிப்புக்குப் பிறகு, சம்மந்தப்பட்ட வீட்டில் இருந்து அதிக அளவிலான வெடிப்பொருட்கள், டிடனேட்டர்கள் மற்றும் நேரத்துக்கு வெடிக்கச் செய்யும் கருவிகளையும் தாம் மீட்டுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. BBC NEWS | South Asia | Three dead in Indian 'Tibet' bomb: “Siliguri has a high number of Tibetan exiles”

2. Three killed in West Bengal bomb blast | Top News | Reuters


வடக்கு டான்சானியா சுரங்க விபத்தில் பலர் பலி

March 31st, 2008 பகுப்புகள்: ஆப்பிரிக்கா, உலகம், மரணம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

வடக்கு டான்சானியாவில் சுரங்கங்களில் வெள்ளநீர் புகுந்ததில் குறைந்தப்பட்சம் 65 மூழ்கியுள்ளனர்.

அரூஷாவில் இருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்ற மேரேராணி என்ற இடத்தில் உள்ள ரத்தினகற்கள் எடுக்கும் சுரங்கங்களில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது வரையில் ஆறு உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மூழ்கியவர்களை உயிருடன் மீட்போம் என்ற நம்பிக்கை இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நிவாரணப் பணியில் ஈடுப்பட்டுள்ளவர்கள் தங்களுக்கு சரியான உபகரணங்கள் இல்லை என குற்றம் சாட்டியுள்ளனர். அத்தோடு கனமழை பெய்து வருவதால், சுரங்கத்தில் இருந்து தண்ணீர் வெளியேற்றுவதற்கு நீர் இறைப்பான்கள் கிடைக்கும் வரையில் தங்களால் எதுவும் செய்ய முடியாமல் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. BBC NEWS | Africa | Hopes fade for Tanzanian miners

2. News | Africa - Reuters.com: 75 Miners Missing in Tanzania


போபால் விஷவாயுக் கசிவு: பாதிக்கப்பட்டவர்கள் தில்லியில் போராட்டம்

March 30th, 2008 பகுப்புகள்: இந்தியா, உடல்நலம், குழந்தைகள், சட்டம் - நீதி, சுகாதாரம், தொழில், பொருளாதாரம், போராட்டம், மரணம், வணிகம், விபத்து | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

இந்தியாவின் போபால் நகரில் கடந்த 1984ஆம் ஆண்டு யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், 24 ஆண்டுகளாகியும் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று போராடிவருகிறார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போபாலில் இருந்து தலைநகர் புதுடெல்லிக்கு 800 கி.மீ. பாதயாத்திரை நடத்தி, இவர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்கள்.

ஆனால் அப்போது பிரதமர் அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், அதை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரி, பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாதயாத்திரையாக வெள்ளிக்கிழமையன்று புதுடெல்லி வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. AFP: Bhopal tragedy survivors reach Delhi after 37-day protest march

2. Tehelka - India's Independent Weekly News Magazine: “Timeline: The Toxic Trail”

3. Indians Pressure Dow on Bhopal Cleanup - washingtonpost.com


4 விவசாயிகள் தற்கொலை

March 30th, 2008 பகுப்புகள்: இந்தியா, தற்கொலை, தொழில், பொருளாதாரம், மரணம், வணிகம், விலைவாசி, விவசாயம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

மகாராஷ்டிரம், விதர்பா பகுதியில் கடன்தொல்லை காரணமாக 2 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டனர். மழையால் பயிர்கள் நாசமானதால் கேரள விவசாயி ஒருவரும், ஆந்திர விவசாயி ஒருவரும் தற்கொலை செய்துக் கொண்டனர்.

நந்துரா பிங்லே கிராமத்தைச் சேர்ந்த கோட்டே (30), பாட்குலி கிராமத்தைச் சேர்ந்த தேஷ்முக் (32) ஆகியோர் உள்ளூர் வங்கியில் கடன் பெற்றிருந்தனர். இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாததால் அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

கேரளத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாயின. இதில் பாதிக்கப்பட்ட ஆலப்புழை மாவட்ட விவசாயி புஸ்கரன் என்பவர் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துக் கொண்டார். இதே பிரச்னை காரணமாக ஆந்திரத்தின் கிருஷ்ணா மாவட்ட விவசாயி அச்சுதராமையா என்பவரும் தற்கொலை செய்துக் கொண்டார்.

நன்றி: தினமணி

மேலும் விவரங்களுக்கு:

1. 74 farmers suicides in Vidarbha after Chidambaram's farm loan waiver

2. » 14 farm suicides in three days in Vidarbha

3. The Telegraph - Calcutta (Kolkata) | Nation | Waiver can’t stop Vidarbha suicides


எம்.ஜி.எம் கேளிக்கை பூங்காவில் கணினி ஊழியர் மரணம்

March 25th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி, சமூகம், சர்ச்சை, தமிழ்நாடு, பொழுதுபோக்கு, மரணம், விபத்து | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

சென்னை அருகே உள்ள எம்.ஜி.எம். டிஸ்ஸிவேர்ல்ட் பொழுது போக்கு பூங்காவில் சாப்ட்வேர் என்ஜீனியர் மரணமடைந்தார். நீச்சல்குளத்தில் தத்தளித்த அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல எம்.ஜி.எம். நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எம்.ஜி.எம். நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு காரணமாகவே தனது மகன் பலியாகியுள்ளதாக சுரேஷ்குமாரின் தந்தை திணேஷ்குமார் சிங் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மகன் நல்ல உயரம். அந்த நீச்சல்குளத்தில் 4 அடி அளவுக்கே தண்