இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூருவில், தற்போது ஆண்டுக்கு சராசரியாக 2,000 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். மாறிவரும் வாழ்க்கைச் சூழல், நகரமயமாக்கல் காரணங்களால் பெங்களூருவில் தற்கொலை எண்ணிக்கை உயர்ந்து வருவதாக தனியார் மருத்துவமனை நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் ஹெப்பார் கூறியுள்ளார்.
அதிக தற்கொலை சம்பவங்கள் நிகழும் நகரங்களின் பட்டியலில் இந்திய அளவில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.
பெங்களூரு நகர குற்றவியல் பிரிவு விகிதாச்சாரப்படி கடந்த 2004 முதல் 2008ம் ஆண்டு வரை 7,840க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 15 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். இதில் ஆண்களின் 4,845, பெண்கள் 2,995 பேர்.
முழுவதும் வாசிக்க: எம்.எஸ்.என்.