அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சங்கம் நாளை உதயம்! நோயாளிகளுக்கு இனிமேலாவது விடிவு பிறக்குமா?
திருப்பூர் அரசு மருத் துவமனையில் நோயாளி கள் நலச் சங்கம் செயல் பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ள தையடுத்து, துவக்க விழா நாளை நடக்கிறது. இதன் மூலம் அடிப்படை வசதி, மருத்துவ வசதி கள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனை யில் தினமும் மூவாயிரம் நோயாளிகள் சிகிச்சைகளுக் காக வந்து செல்கின்றனர். கோவை மாவட்டத்திற்கு தலைமை அரசு மருத்துவ மனையாக இருந்த போதி லும், இங்கு நோயாளி களுக்கு சிறந்த முறையில் தரமான சிகிச்சை கிடைப்ப தில்லை.
சுகாதார சீர்கேடு அதிகரித் துள்ள நிலையில், கழிப்பிட வசதிகள் இல்லாமல் உள்ளன. தற்போது நாடு முழுவதி லும் உள்ள அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் “நோயாளி கள் நலச் சங்கம்’ திட்டம் துவங்கப்பட்டு வருகிறது.
மக்கள் நலன் கருதி மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இணைந்து இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. மத்திய சுகாதாரத் துறை மூலமாக அளிக்கப்படும் நிதி யில் இத்திட்டம் செயல் படுத்தப்படுகிறது. தமிழகத்தில் நோயாளிகள் நலச் சங்கம் துவங்கும் தலைமை மருத்துவமனைக ளுக்கு ரூ. ஐந்து லட்சம், அரசு மருத்துவமனைகளுக்கு ரூ. ஒன்றரை லட்சம், தாலுகா அரசு மருத்துவமனைகளுக்கு ரூ. மூன்று லட்சம் என அரசு நிதியளிக்கிறது. இந்த சங்கத்தில் உள் ளாட்சி உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், அரசு சாரா அமைப்புகள், நன்கொடை யாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் இணைந்து மருத்துவமனை மற்றும் நோயாளிகளின் முன்னேற்றத்திற்கு உதவும் அமைப்பாகும்.
அரசு மற்றும் நன்கொடை யாளர்கள் அளிக்கும் நிதியில் மருத்துவமனையில் சிகிச்சை கருவிகள் வாங்குவதற்கும், வளாகத்தை துõய்மையாக வைத்திருக்கவும், மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும் உதவும். திருப்பூர் சுகாதார மாவட் டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்தி லும் பல்லடம், சூலுõர் உட் பட வட்டாரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளி லும் நோயாளிகள் நலச் சங்கம் துவங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை திருப்பூரில் அமைந்துள்ளதால், இங்கு நோயாளிகள் நலச் சங்கம் துவங்க கலெக்டர் அனுமதி பெற வேண்டும் என்பதால் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது மாவட்ட நிர் வாக அனுமதி பெறப்பட்டு உறுப்பினர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் சேர்க் கும் பணிகள் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வந்தது. தற்போது கலெக்டர் அனுமதி யுடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில், நாளை (11ம் தேதி) மாலை நடக்கும் விழாவில் நோயாளிகள் நலச் சங்கம் துவக்கி வைக்கப் படுகிறது. இவ்விழாவில் கோவை மாவட்ட கலெக்டர் நீரஜ் மித்தல், எம்.பி., சுப்பராயன், எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, அரசு மருத்துவமனை இணை இயக்குனர் டாக்டர். இளமதி, கண்காணிப்பாளர் டாக்டர். நடராஜன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். தற்போது நோயாளிகள் சங்கத்தில் 45 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
www.dinamalar.com