சர்ச்சை | சற்றுமுன்...




இந்திய எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம்

July 28th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், சட்டம் - நீதி, சர்ச்சை, பாக்கிஸ்தான் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

இந்திய எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம்

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா அருகே இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 15 பேர் இன்று நுழைந்தனர். மேலும், அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று மாலை 3.30 மணியளவில் குப்வாரா அருகே அவர்கள் எல்லைக் கோட்டை தாண்டி இந்தியப் பகுதிக்குள் நுழைந்தனர். அங்கு நௌகான் செக்டரில் உள்ள கண்காணிப்பு முகாமை இந்திய ராணுவத்தினர் காலி செய்ய வேண்டும் என்று கோரினர். மேலும், திடீரென இந்திய வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 22வது ராஜ்புத் படைப்பிரிவைச் சேர்ந்த ஒரு வீரர் உயிரிழந்தார்.

இதையடுத்து, இந்திய வீரர்களும் திருப்பிச் சுட்டனர். இந்த மோதல் சில மணிநேரம் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பகுதிக்குள் 15 பேர் கொண்ட குழுவாக பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்திருப்பது, அரசியல் மற்றும் ராணுவ வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


ஆதரவை வாபஸ் பெற்றது இடதுசாரி …

July 8th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, அரசியல், இந்தியா, சர்ச்சை | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனை காரணமாக மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக இடதுசாரி இன்று முறைப்படி அறிவித்தது. டெல்லியில் இன்று திரளான செய்தியாளர்கள் கூட்டத்தில் இதனை அறிவித்த மார்க்சிஸ்த் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், ஆதரவை வாபஸ் பெறும் கடிதத்தை நாளை ஜனாதிபதியை நேரில் சந்தித்து முறைப்படி அளிக்க இருப்பதாகவும், இதற்காக ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் நேரம் ஒதுக்குமாறு கேட்டுள்ளதாகவும் கூறினார்.

ஜப்பான் செல்லும் வழியில் நேற்று விமானத்தில் பேட்டி அளித்த பிரதமர் மன்மோகன் சிங், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பாதுகாப்பு அம்சங்களை இறுதி செய்வதற்காக சர்வதேச அணுசக்தி முகமையை அரசு விரைவில் அணுக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

அவரது இந்த பேட்டி இடதுசாரிகளை மிகுந்த கோபத்திற்குள்ளாக்கியது.அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஐமுகூ - இடதுசாரிகளின் ஒருங்கிணைப்புகூட்டத்தை கூட்டி விவாதிக்கலாம் என இடதுசாரிகளுக்கு பிரணாப் முகர்ஜி நேற்று கடிதம் அளித்திருந்த நிலையில், பிரதமரின் மேற்கூறிய பேட்டி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை அர்த்தமில்லாமல் ஆக்கிவிட்டதாக கருதியே இடதுசாரிகள் இன்று ஆதரவை விலக்கிக் கொள்ளும் முடிவை மேற்கொண்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசின் ஸ்திரத்தன்மை பாதிக்காது - மன்மோகன்

இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்றதால் தமது அரசின் ஸ்திரத்தன்மை பாதிக்காது என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

   Source: வெள்ளிநிலா நீயுஸ்


லஞ்சத்தின் பிடியில் காவல்துறை!

July 2nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, அறிவிப்பு, சர்ச்சை, தமிழ்நாடு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

லஞ்சத்தின் பிடியில் காவல்துறை!

ஸ்காட்லாந்து போலீஸýக்கு இணையாகப் பேசப்படும் தமிழக காவல் துறையினர் சமீப காலமாக லஞ்சம் வாங்க முயன்றதாக கைதாகி வரும் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன.

சாலை விதிகளை மீறி செல்லும் நபர்களை மடக்கும் போக்குவரத்து துறையின் அமலாக்கப் பிரிவு போலீஸôர் ஒரு கட்டத்தில் அந்த நபரிடம் வழக்கு பதிவு செய்வதா? அல்லது பணம் தந்துவிட்டு போகிறாயா? என்று பேரம் பேசுகின்றனர்.

தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தில் பாக்கெட்டில் இருக்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு தலைமறைவாகிவிடும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட முடியாது.

கடந்த மே மாதம் கிண்டி போக்குவரத்து விசாரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், பறிமுதல் செய்த வாகனத்தை விடுவிக்க லஞ்சம் கேட்டதாக ஊழல் தடுப்பு பிரிவு போலீஸôரால் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார்.

மாமூல் கேட்டதாக.. செல்போன் கடை உரிமையாளர் பஷீர் அகமதுவிடம் ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டியதாக சிபிசிஐடி விடியோ தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் கடந்த சில நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

குண்டர் சட்டத்தில் அடைக்காமல் இருக்க… குண்டர் சட்டத்தில் அடைக்காமல் இருக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்ட குமரன் நகர் இன்ஸ்பெக்டர் பாலாஜியும், தலைமைக் காவலர் பால் துரையும் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

மூன்று மாதத்தில் 4 போலீஸôர் கைது: கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையில் சுமார் 9 லஞ்ச வழக்குகளில் காவல் துறை உள்பட பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த 9 பேர் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸôரால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு தலைமைக் காவலர் அடங்குவர்.

ஓராண்டு தண்டனை பெற்ற போலீஸôர்: லஞ்சம் வாங்கியதான வழக்கில் கைதான துரைப்பாக்கம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்யராஜ், தலைமைக் காவலர் சம்மனசு நாதன் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு செங்கல்பட்டு முதன்மை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ஓராண்டு தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் கடந்த மே 28-ல் விதித்துள்ளது.

எங்கே புகார் செய்யலாம்: அரசு துறைகளைச் சேர்ந்தவர்கள் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க வேண்டிய முகவரி:

டி.எஸ்.பி., ஊழல் தடுப்பு பிரிவு, சென்னை-2, எண் 18, முதல் கேனல் தெரு, காந்தி நகர், சென்னை-20. தொலைபேசி எண்: 044- 2445 5089.
 
 


வலுக்கும் கேபிள் யுத்தம்: தவிப்பில் மதுரை மக்கள்

June 12th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, *பொது, சர்ச்சை | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

வலுக்கும் கேபிள் யுத்தம்: தவிப்பில் மதுரை மக்கள்

சுமங்கலி கேபிள் விஷனுக்கும் (எஸ்சிவி), ராயல் கேபிள் விஷனுக்கும் (ஆர்சிவி) இடையே ஏற்பட்டுள்ள போட்டியால், பணம் செலுத்தியும் விரும்பிய சேனல்களைப் பார்க்க முடியவில்லை என்கிற அதிருப்தி மதுரை மக்களிடையே, அதிலும் குறிப்பாகப் பெண்கள் மத்தியில் பரவி வருகிறது.
தற்போது மு.க. அழகிரியால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள ராயல் கேபிள் விஷன் (ஆர்.சி.வி.) சார்பில் வழங்கப்பட்டு வரும் சேனல்களில் சன் குழுமம் வழங்கும் சேனல்கள் இடம்பெறாதது, பொதுமக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பரிதாப நிலையில் ஆபரேட்டர்கள்: ஆர்சிவி சார்பில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற கேபிள் ஆபரேட்டர்களுக்கான கூட்டத்தில் மு.க. அழகிரியே பங்கேற்றார். இதனால், தற்போது எஸ்.சி.வி.யில் உள்ள 437 கேபிள் ஆபரேட்டர்களில் பலர் ஆர்சிவிக்கு ஆதரவான நிலையை எடுக்க நிர்ப்பந்தப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.
பெண்கள் மத்தியில் அதிருப்தி: மக்கள் மத்தியில், அதிலும் குறிப்பாகப் பெண்கள் மத்தியில் மிகப் பெரிய அதிருப்தியையும், கோபத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது சுமங்கலி கேபிள் விஷனுக்கும், ராயல் கேபிள் விஷனுக்கும் இடையே நடக்கும் கேபிள் யுத்தம்.
சன் குழுமத்தின் கேபிள்கள் அனைத்தையும் இருட்டடிப்பு செய்து, மக்களைக் கலைஞர் தொலைக்காட்சியை மட்டும் பார்க்கச் செய்ய வேண்டும் என்கிற மு.க. அழகிரியின் முயற்சி, திமுக அரசுக்கும் கட்சிக்கும் மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
“”இந்த எதிர்ப்பெல்லாம் மூன்று நான்கு நாட்களில் அடங்கிவிடும். சன் டி.வி. தெரியவில்லை என்பதால் யாரும் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்திவிடப் போவதில்லை. வேறு வழியில்லாமல் அனைவரும் கலைஞர் தொலைக்காட்சிக்கு மாறிவிடுவார்கள்” என்கிற மு.க. அழகிரி சார்பு வாதத்தை கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. தொடர்ந்து சன் டி.வி.யில் வெளிவரும் சீரியல்களை ஒளிபரப்பாமல் இருந்தால், அந்த வாடிக்கையாளர்கள் சன் குழுமத்தின் டிடிஎச் சேவைக்கு மாறிவிடுவார்கள் என்று பயப்படுகிறார்கள் அந்த ஆபரேட்டர்கள்.
“”வாடிக்கையாளர்கள் எங்களிடம் தாங்கள் தந்த முன் பணத்தைத் திருப்பித் தரும்படி எங்கள் அலுவலகத்தை முற்றுகை இடமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? சன் குழுமம் அவர்களுக்கு டிடிஎச் சேவை அளித்துவிடும். அப்போது ராயல் கேபிள் விஷன்காரர்கள் என்ன செய்வார்கள்? தேவையில்லாமல் மு.க. அழகிரி இந்த விஷயத்தில் தலையிட்டு, எங்கள் வயிற்றில் அடிக்கப் போகிறார், அதுதான் நடக்கப் போகிறது” என்று புலம்பித் தீர்த்துவிட்டார் ஒரு கேபிள் டி.வி. ஆபரேட்டர்.
டிஷ் ஆன்டனாவுக்கு மாறும் மக்கள்: சன் டிவி, கே டிவி, சன் நியூஸ் உள்ளிட்ட சன் நெட்வொர்க்கில் 20 சேனல்களும், சோனி பேக்கேஜின் 6 சேனல்களின் தென் மாநில விநியோக உரிமையையும் எஸ்சிவி எடுத்துள்ளது. தற்போது மு.க. அழகிரியால் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆர்சிவி மூலம் சன் நெட்வொர்க் சேனல்கள், சோனி பேக்கேஜ் சேனல்கள் ஒளிபரப்பாகவில்லை என்பதுதான் தற்போதைய அதிருப்திக்குக் காரணம்.
கேபிள் மூலம் சன் டிவி உள்ளிட்டவற்றைப் பார்க்க முடியாததால் டிஷ் ஆன்டனா இணைப்பை பலர் பெற்று வருகின்றனர். கடந்த 2 தினங்களில் மட்டும் மதுரையில் டிஷ் ஆன்டனா விற்பனை அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

பொதுமக்கள் கருத்து
வழக்கறிஞர் முத்துக்குமார்
பொதுமக்கள் பகடைக் காய்களாக ஆக்கப்பட்டுள்ளனர். ஒரு தனிப்பட்ட நபர் விரும்பிய சேனலைப் பார்க்க முடியவில்லை என்றால் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடலாம். நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

 

குடும்பத் தலைவி ஞானேஸ்வரி
சன் நெட்வொர்க் சேனல்களை வழங்குவதாகக் கூறித்தான் கேபிள் ஆபரேட்டர்கள் கட்டணம் வசூல் செய்கின்றனர். அப்படியிருக்கும்போது அந்த சேனல்கள் கிடைக்கவில்லை என்றால் கேபிள் ஆபரேட்டர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

 

ஜவுளி வியாபாரி பிரகாசம்
இத்தனை சேனல்கள் காண்பிக்கப்படும் என்ற ஒப்பந்தப்படிதான் கேபிள் ஆபரேட்டர்கள் கட்டணம் வசூல் செய்கின்றனர். விரும்பிய சேனல்களைப் பார்க்க முடியாவிட்டால் அடுத்தமாதம் கட்டணம் செலுத்துவது குறித்து யோசிக்க வேண்டும்.

 

கல்லூரி மாணவி ரூபிணி
தொழில் போட்டி இருக்கலாம். ஆனால் பொதுமக்கள் பாதிக்காதவகையில் மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவரவருக்குப் பிடித்ததைப் பார்க்க முடியவில்லை என்றால் அது என்ன ஜனநாயகம்? கட்டணம் பெற்றுக்கொண்டு சேனல்கள் ஒளிபரப்பப்படுவதில் பிரச்னை ஏற்பட்டால் ஆபரேட்டர்கள் தான் அதற்கு முழுப்பொறுப்பு.

 

சாலையோரக் கடை வியாபாரி பழனி
கடந்த 2 தினங்களாக சன் டிவியில் சேனல்கள் தெளிவாகவே ஒளிபரப்பு செய்யப்படவில்லை. யார் கேபிள் இணைப்பு கொடுத்தாலும் இந்த சேனல்கள் தெரியும்விதமாக இருக்க வேண்டும்.

 

பள்ளி ஊழியர் லட்சுமி
சன் டிவியில் சீரியல்களை விரும்பிப் பார்க்கிறோம். அதைப் பார்க்காவிட்டால் கேபிள் இணைப்பே தேவையில்லை என்றே தோன்றுகிறது. சன் டிவி இணைப்புத் தராவிட்டால் பணம் தரமாட்டோம் என கூறியுள்ளோம்.

 


விமானமோட்டிக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் சண்டை வலுக்கிறது

April 11th, 2008 பகுப்புகள்: சர்ச்சை, விமானம் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

கோழிக்கோட்டில் ஏஇ இந்தியா விமானம் தாமதமானதை அடுத்து அதன் விமான தலைவர் ரஜத் ரானாவிற்கும் மாநிலங்களவை உறுப்பினர் அப்துல் வகாபிற்கும் இடையே எழுந்த பிரச்சினை பூதாகாரமாக வளர்கிறது. விமான ஓட்டிகளின் சங்கம் வகாப் மன்னிப்பு கோரவில்லையெனில் உலக அளவில் எடுத்துச் சென்று அவரை கறுப்புப் பட்டியலில் சேர்க்க முயலப் போவதாக கூறியுள்ளது.  அவ்வாறு செய்யப்பட்டால் அவரால் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் செல்ல முடியாது.

அதே நேரம் எம் பி யின் ஆதரவாளர்கள் காப்டன் ரஜத் ரானாவின் பணிக்கு உலை வைக்கப் பார்க்கிறார்கள். அவர் தற்சமயம் துபாயில் தனது குடும்பத்தினருடன் உள்ளார். அவர திரும்பியபிறகே அவரது கருத்தை அறிய முடியும் விமானத்துறை அமைச்சர் பிரபுல் பாடேல் நடந்த சம்பவத்தின் முழு விவரம் அறிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ஒரு சிறுவிதயம் பெரிதாக்கப் பட்டிருக்கிறது என்று அமைச்சர் கூறினார்.

Wahab lobby takes on pilot


தலித்துகளுக்கு பிளாஸ்டிக் கப்புகளில் டீ - கடைக்காரர்களுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

March 28th, 2008 பகுப்புகள்: சர்ச்சை, தீண்டாமை | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

தலித்துகளுக்கு பிளாஸ்டிக் கப்புகளில் டீகடைக்காரர்களுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

விருதுநகர் மாவட்டம் இருஞ்சிறையில் தலித்துகளுக்கு பிளாஸ்டிக் கப்புகளில் டீ வழங்கிய கடைக்காரர்கள், துணி துவைக்க மற்றும் முடி வெட்ட மறுத்தவர்களை எதிர்தரப்பினராக சேர்த்து நோட்டீஸ் வழங்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.இருஞ்சிறையை சேர்ந்தவர் குருசாமி. இவர் ஐகோர்ட் கிளையில் ஏற்கனவே தாக்கல் செய்த பொது நல வழக்கில், “இருஞ்சிறையில் தலித்துகளுக்கு எதிரான சமுதாய புறக்கணிப்பை தடுக்க வேண்டும்’ என கோரியிருந்தார். இதனை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. டி.ஆர்.ஒ., விசாரித்து 25.12.2007ல் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த அறிக்கையில், “சமுதாய புறக்கணிப்பு இருப்பதாக’ குறிப்பிட்டார். பிறகு 15.2.2008ல் மனித உரிமை மற்றும் சமூக நீதிக்கான கூடுதல் டி.ஜி.பி., விசாரித்து தாக்கல் செய்த அறிக்கையில், “சமுதாய புறக்கணிப்பு இல்லை’ என குறிப்பிட்டார். இதனால் கலெக்டர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.27.2.2008ல் விசாரணை நடத்திய கலெக்டரிடம் சமுதாய புறக்கணிப்பு குறித்து 30 பேர் மனு கொடுத்தனர். அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இந்நிலையில் குருசாமி ஐகோர்ட் கிளையில் இவ்வழக்கில் கூடுதலாக ஒரு மனு செய்தார். அம்மனுவில் அவர் கூறியதாவது: கலெக்டர் வந்து சென்ற பிறகு தலித்துகளுக்கு கடைகளில் பொருட்களை விற்கின்றனர். பொது பாதையில் நடமாட அனுமதிக்கப்படுகின்றனர். டீக்கடைகளில் இரட்டை டம்ளர் இன்றும் அமலில் உள்ளது. நீலமேகம், பாண்டி, முருகன், கணேசன், புவனேஸ்வரன், சின்னதம்பி ஆகியோர் கடைகளில் தலித்துகளுக்கு மட்டும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப்புகளில் டீ வழங்குகின்றனர். மேலும் பெரியசாமி, சன்னாசி ஆகியோர் தலித்துகளின் துணிகளை துவைக்க மறுக்கின்றனர். சேதுராமன், மாரிமுத்து ஆகியோர் தலித்துகளுக்கு முடி வெட்ட மறுக்கின்றனர். இருஞ்சிறையில் தலித்துகளுக்கு 150 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இந்த வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச தனி மோட்டார் பம்பு மற்றும் கிணறு இல்லை. பிற ஜாதியினரை நம்ப வேண்டியிருக்கிறது. பாசனத்திற்கு தண்ணீர் வரும் செங்கமலம் குளத்தின் மதகுகளையும் சிலர் சேதப்படுத்தி விட்டனர். இவ்வழக்கு தாக்கல் செய்ததற்காக என்னை பழிவாங்கும் நிலை உள்ளது. இவ்வாறு கூறினார்.இம்மனு நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, பி.முருகேசன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் அழகுமணி, ஸ்டாலின்மணி ஆஜராயினர். இவ்வழக்கில் டீக்கடைக்காரர்கள், முடி வெட்ட, துணி வைக்க மறுத்தவர்களையும் எதிர்தரப்பினராக சேர்த்து நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை ஒரு வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.


நான் செஞ்சுகிட்டேன்! நீங்க எப்போ’: பா.ம.க., சர்ச்சையால் விளம்பரம் அகற்றம்

March 26th, 2008 பகுப்புகள்: சர்ச்சை, தமிழக அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

“நான் செஞ்சுகிட்டேன்! நீங்க எப்போ’: பா.ம.க., சர்ச்சையால் விளம்பரம் அகற்றம்

 
 

ராமநாதபுரம் :ஆண்களுக்கான நவீன வாசக்டமி முகாம் பிரசார ரதத்தில், “நான் செஞ்சுகிட்டேன்! நீங்க எப்போ’ என்ற விளம்பர படத்தால் பா.ம.க.,வினர் மற்றும் சுகாதார துறை அலுவலர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரசார படம் உடனடியாக அகற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன வாசக்டமி முகாம் நடந்து வருகிறது. பிரசார ரதம் மூலம் கிராமங்களில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயி போல் தோற்றமளித்தவரின் போட்டோவை வாசக்டமி விளம்பரத்துக்கு பயன்படுத்தி “நான் செஞ்சுக்கிட்டேன் நீங்க எப்போ’ என கேள்வி கேட்பது போல் பிளக்ஸ் விளம்பர போர்டு வைத்திருந்தனர். இந்த விளம்பர மாடலில் இருந்த படத்துக்கு பா.ம.க., நிர்வாகிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். ராமநாதபுரம் புதிய பஸ்நிலையம் அருகே வந்த பிரசார வாகனத்தை நிறுத்தி, “எங்கள் தலைவர் படத்தை பிரசாரத்துக்கு எப்படி பயன்படுத்தலாம்’ என, கேள்வி கேட்டனர்.

இதனால், கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பா.ம.க., முக்கிய நிர்வாகிகள், கலெக்டர் கிர்லோஷ்குமாரை தொடர்பு கொண்டு பிரசார வாகன விளம்பரப் படத்தில் உள்ள மாடல், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் படம் போல் உள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து, கலெக்டர் உத்தரவுப்படி விளம்பர போர்டு உடனடியாக அகற்றப்பட்டது. பிரசார வாகனத்திலிருந்த படத்தை, பா.ம.க., நிர்வாகிகள் போட்டோ எடுத்து கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ளனர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பொங்கல் தினத்தில் விவசாயி போல் தோன்றிய படம் பொறித்த வாழ்த்து மடலை கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamalar.com/2008MAR26/events_dist2.asp
 


எம்.ஜி.எம் கேளிக்கை பூங்காவில் கணினி ஊழியர் மரணம்

March 25th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி, சமூகம், சர்ச்சை, தமிழ்நாடு, பொழுதுபோக்கு, மரணம், விபத்து | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

சென்னை அருகே உள்ள எம்.ஜி.எம். டிஸ்ஸிவேர்ல்ட் பொழுது போக்கு பூங்காவில் சாப்ட்வேர் என்ஜீனியர் மரணமடைந்தார். நீச்சல்குளத்தில் தத்தளித்த அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல எம்.ஜி.எம். நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எம்.ஜி.எம். நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு காரணமாகவே தனது மகன் பலியாகியுள்ளதாக சுரேஷ்குமாரின் தந்தை திணேஷ்குமார் சிங் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மகன் நல்ல உயரம். அந்த நீச்சல்குளத்தில் 4 அடி அளவுக்கே தண்ணீர் இருந்துள்ளது. எனவே நீரில் மூச்சுத் திணறியதாக கூறுவதை நம்ப முடியாது.

மூச்சுத் திணறி எனது மகன் இறந்திருக்க முடியாது. வேறு ஏதோ நடந்திருக்கிறது.

நீச்சல் குளம் முறையாக பராமரிக்கப்படவில்லை. நீச்சல்குளத்தில் எனது மகன் போராடியபோது அவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப எம்.ஜி.எம். நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றார் அவர்.

கடந்த ஆண்டு எம்.ஜி.எம். பெரும் சர்ச்சையில் சிக்கியது. சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி மீது ராட்சத ராட்டினத்தின் ஒரு பகுதி விழுந்து அவர் படுகாயமுற்றார். இன்னும் கூட அவர் கோமா நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதற்கு சில மாதங்களுக்கு முன்பு எம்.ஜி.எம்மில் வேலை பார்த்து வந்த ஸ்ரீலட்சுமி என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். இப்போது சுரேஷ்குமார் என்ற சாப்ட்வேர் என்ஜீனியர் பரிதாபமாக இறந்துள்ளார்.

முழுவதும் வாசிக்க: தட்ஸ்தமிழ் - Software Engineer dies mysteriously at MGM

முந்தைய சற்றுமுன்:

1. சென்னை தீம் பார்க் விபத்து: 7 பேர் கைது

2. இராட்டினத்திலிருந்து மாணவி விழுந்த வழக்கு: பூங்கா உரிமையாளர் தலைமறைவு.

3. புத்தாண்டு கொண்டாட்டங்கள்: விபத்தும் விபரீதங்களும்


அங்காடி தெருவிலிருந்து ஜெயமோகன் விலகினார்

March 20th, 2008 பகுப்புகள்: கலை-இலக்கியம், சர்ச்சை, தமிழ்நாடு, திரைப்படம், திரையுலகம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | 8 மறுமொழிகள் » |

எம்.ஜி.ஆர்-சிவாஜி ஆகிய இமயங்களை விமர்சித்த எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. அத்துடன், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவர் வசனம் எழுதும் படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று கூறியிருந்தது.

இதையடுத்து தான் இயக்கி வரும் அங்காடி தெரு படத்திலிருந்து ஜெயமோகனை விலகி கொள்ள சொல்லிவிட்டாராம் வசந்தபாலன். ஆனால், ஜெயமோகன் வசனம் எழுதிய நான் கடவுள் படம் சம்பந்தப்பட்டவர்கள் என்ன முடிவை எடுத்திருக்கிறார்கள் என்பது இன்னும் வெளியிடப்படவில்லை.

நன்றி: தமிழ் சினிமா


மாணவியிடம் ஆசிரியர் விஷமம் - பள்ளியை சூறையாடிய பெற்றோர்கள்

March 20th, 2008 பகுப்புகள்: கலவரம், கல்வி, கிளர்ச்சி, சமூகம், சர்ச்சை, போராட்டம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

சென்னை ஆதம்பாக்கத்தில் 8வது வகுப்பு மாணவிக்கு 3 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியரின் செயலால் கொதிப்படைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்து பள்ளியை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆதம்பாக்கத்தில் மான்போர்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இங்கு ஆங்கிலம் மற்றும் யோகா ஆசிரியராக மரிய ஜோசப் மைக்கேல் என்பவர் பணியாற்றுகிறார். இவர் 8வது வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியிடம் கடந்த 3 மாதங்களாக பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். அவரிடம் சிக்கி அந்த பெரும் அவதிப்பட்டு வந்தார். இதை வெளியே சொல்லக் கூடாது, வெளியே சொன்னால் இறுதித் தேர்வில் பெயில் ஆக்கி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார் மைக்கேல்.

இந்த நிலையில் இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த மாணவி தனது தாயார் மும்தாஜிடம் ஆசிரியரின் செயலைக் கூறவே அவர் அதிர்ச்சி அடைந்து பள்ளித் தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜிடம் புகார் கூறினார். ஆனால் தலைமை ஆசிரியர் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து கொதிப்படைந்த மும்தாஜ், தவ்ஹீத் ஜமாத் அமைப்பிடம் கூறவே அந்த அமைப்பினரும், பொதுமக்களும்……….

http://thatstamil.oneindia.in/news/2008/03/20/tn-parents-go-on-rampage-as-teacher-molest-girl.html


சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனை ஏப்ரல் 30ம் தேதிக்கு தள்ளி வைப்பு

March 19th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி, சர்ச்சை | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனை ஏப்ரல் 30ம் தேதிக்கு தள்ளி வைப்பு

புதுடில்லி : சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனை ஏப்ரல் 30ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 1992ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் இந்தியாவை சேர்ந்த சரப்ஜித் சிங் கைது செய்யப்பட்டார். இவர் மீது ‌சதி மற்றும் குண்டு வைத்தது உள்ளிட்ட குற்றங்கள் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஏப்ரல் 1ம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மத்திய அரசு பாகிஸ்தான் அரசிற்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளது. இந்நிலையில் சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனை ஏப்ரல் 30ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.