லஞ்சத்தின் பிடியில் காவல்துறை!
ஸ்காட்லாந்து போலீஸýக்கு இணையாகப் பேசப்படும் தமிழக காவல் துறையினர் சமீப காலமாக லஞ்சம் வாங்க முயன்றதாக கைதாகி வரும் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன.
சாலை விதிகளை மீறி செல்லும் நபர்களை மடக்கும் போக்குவரத்து துறையின் அமலாக்கப் பிரிவு போலீஸôர் ஒரு கட்டத்தில் அந்த நபரிடம் வழக்கு பதிவு செய்வதா? அல்லது பணம் தந்துவிட்டு போகிறாயா? என்று பேரம் பேசுகின்றனர்.
தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தில் பாக்கெட்டில் இருக்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு தலைமறைவாகிவிடும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட முடியாது.
கடந்த மே மாதம் கிண்டி போக்குவரத்து விசாரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், பறிமுதல் செய்த வாகனத்தை விடுவிக்க லஞ்சம் கேட்டதாக ஊழல் தடுப்பு பிரிவு போலீஸôரால் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார்.
மாமூல் கேட்டதாக.. செல்போன் கடை உரிமையாளர் பஷீர் அகமதுவிடம் ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டியதாக சிபிசிஐடி விடியோ தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் கடந்த சில நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
குண்டர் சட்டத்தில் அடைக்காமல் இருக்க… குண்டர் சட்டத்தில் அடைக்காமல் இருக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்ட குமரன் நகர் இன்ஸ்பெக்டர் பாலாஜியும், தலைமைக் காவலர் பால் துரையும் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
மூன்று மாதத்தில் 4 போலீஸôர் கைது: கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையில் சுமார் 9 லஞ்ச வழக்குகளில் காவல் துறை உள்பட பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த 9 பேர் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸôரால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு தலைமைக் காவலர் அடங்குவர்.
ஓராண்டு தண்டனை பெற்ற போலீஸôர்: லஞ்சம் வாங்கியதான வழக்கில் கைதான துரைப்பாக்கம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்யராஜ், தலைமைக் காவலர் சம்மனசு நாதன் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு செங்கல்பட்டு முதன்மை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ஓராண்டு தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் கடந்த மே 28-ல் விதித்துள்ளது.
எங்கே புகார் செய்யலாம்: அரசு துறைகளைச் சேர்ந்தவர்கள் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க வேண்டிய முகவரி:
டி.எஸ்.பி., ஊழல் தடுப்பு பிரிவு, சென்னை-2, எண் 18, முதல் கேனல் தெரு, காந்தி நகர், சென்னை-20. தொலைபேசி எண்: 044- 2445 5089.