குற்றம் | சற்றுமுன்...




வெடிகுண்டு மிரட்டல்: இ - மெயில் அனுப்பிய கணக்காளர் கைது

August 2nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், இணையம், கணினி, குற்றம், சட்டம் - நீதி, தொழில்நுட்பம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

வெடிகுண்டு மிரட்டல்: இ - மெயில் அனுப்பிய கணக்காளர் கைது

மும்பை, ஆக. 1: வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ - மெயில் அனுப்பிய பஞ்சாப் கணக்காளர் ஒருவரை மும்பை போலீஸôர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கணக்காளர் தீபக் பாண்டே பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்தவர்.

ஆமதாபாத் தொடர் குண்டு வெடிப்பை அடுத்து தொடர்ந்து பல இடங்களில் குண்டு வெடிக்கும் என்று தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு இ - மெயில் மிரட்டல் வந்தது. இது குறித்து மும்பை போலீஸôர் விசாரித்தனர். இ - மெயில் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று போலீஸôர் கண்டுபிடித்தபோது லூதியானாவைச் சேர்ந்த தீபக் என்பவர் அனுப்பியது தெரியவந்தது. வதந்தியைப் பரப்புவதற்காக இவர் இ - மெயில் மிரட்டல் விடுத்தாரா அல்லது உண்மையிலேயே இவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்பது விசாரணையில் தெரிய வரும் என்று மும்பை குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் தேபன் பார்த்தி கூறினார்.
 
 


பெங்களூரில் குண்டுவெடிப்பு : 3 பேர் பலி

July 25th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், குண்டுவெடிப்பு, குற்றம், சட்டம் - நீதி | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

பெங்களூரில் குண்டுவெடிப்பு : 3 பேர் பலி

பெங்களூரில் அடுத்தடுத்து எட்டு இடங்களில் குண்டுவெடிப்பு வெள்ளிக்கிழமை நிகழ்ந்துள்ளது. இதில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

பலியானவர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆறு இடங்களில் குண்டு வெடித்ததாக தட்ஸ் தமிழ்.காம் செய்தி வெளியிட்டுள்ளது. கலைஞர் தொலைக்காட்சியின் முக்கியச் செய்தியில் எட்டு இடங்களில் குண்டு வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2008/07/25/india-serial-blasts-rock-bangalore-three-killed.html

http://timesofindia.indiatimes.com/Six_blasts_rock_Bangalore_one_killed/articleshow/3279730.cms


மனைவியை கொன்ற வழக்கில் பெங்களூர் சாமியாருக்கு ஆயுள் முழுவதும் சிறை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

July 23rd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, குற்றம், சட்டம் - நீதி, சற்றுமுன், தீர்ப்பு, நீதிமன்றம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

மனைவியை கொன்ற வழக்கில் பெங்களூர் சாமியாருக்கு ஆயுள் முழுவதும் சிறை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

பெங்களூரை சேர்ந்த சாமியார் சரதானந்தா. இவரது மனைவி சாகேரா. சாகேராவின் சொத்துகளை அடைவதற்காக அவருக்கு அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாமியார் சரதானந்தா கொடுத்தார். பின்னர் அவரை வீட்டுக்குள்ளேயே புதைத்து விட்டார். இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இரண்டு நீதிபதிகள் பெஞ்சு முன்பு நடந்தது.

அதில் தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவர், `மிகவும் அரிதான இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும்’ என்றார். மற்றொரு நீதிபதி, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இரண்டு தீர்ப்புகளும் முரணாக இருந்ததால் வழக்கை மூன்று நீதிபதிகள் பெஞ்சுக்கு தலைமை நீதிபதி மாற்றினார்.

இதையடுத்து நீதிபதிகள் அகர்வால், சிங்வி, அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்சு விசாரித்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, “சொத்துக்காக மனைவியை கொலை செய்த சாமியார் சரதானந்தாவை ஆயுள் காலம் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும்” என மூன்று நீதிபதிகளும் ஒன்றாக உத்தரவிட்டனர்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=427197&disdate=7/23/2008


சென்னை : உருட்டு கட்டைகளுடன் பொதுமக்கள் ரோந்து: குடியிருப்பு காவலாளி வேடத்தில் போலீஸôர்

July 20th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அறிவிப்பு, குற்றம், கைது, கொலை, சட்டம் - நீதி, தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

உருட்டு கட்டைகளுடன் பொதுமக்கள் ரோந்து: குடியிருப்பு காவலாளி வேடத்தில் போலீஸôர்

சென்னை வடபழனி அருகே உள்ள புதூர் மற்றும் ஒட்டகபாளையத்தில் பொதுமக்கள் இரவில் விடிய விடிய உருட்டு கட்டைகளுடன் ரோந்து சுற்றி வருகின்றனர்.

சைக்கோ மனிதன் பீதியால், அவர்கள் உருட்டு கட்டைகளுடன் வலம் வருவதாகப் போலீஸôர் தெரிவித்தனர்.

அதேநேரத்தில், அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிகளாகவும் போலீஸôர் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை வடபழனி, கே.கே.நகர் பகுதிகளில் தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிகள், குப்பை பொறுக்கும் நபர்கள் கொலை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தல், தீ வைத்து எரித்தல் என சுமார் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால் வடபழனி மற்றும் கே.கே.நகர், அசோக் நகர் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே ஒருவித பீதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புதூர் மற்றும் ஒட்டகபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், இரவு நேரங்களில் உருட்டு கட்டைகளுடன் வலம் வருகின்றனர். அவ்வழியே செல்பவர்களும் மிகுந்த அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

காவலாளி வேடத்தில்…: காவலாளிகள் குறி வைத்து கொல்லப்பட்டு வருவதால், போலீஸôரே நேராக அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிகளாக மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாதிரி சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீஸôர் காவலாளிகளாக இரவு ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் குப்பை பொறுக்கும் நபர்களாகவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போலவும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகப் போலீஸôர் தெரிவிக்கின்றனர்.

அசோக்நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கியிருந்த நேபாள இளைஞர்கள் 3 பேரை பிடித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.


காடுவெட்டி குரு அதிகாலையில் கைது

July 5th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அரசியல், குற்றம், கைது, சட்டம் - நீதி | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

காடுவெட்டி குரு அதிகாலையில் கைது

வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி கிராமத்துக்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் சென்று குருவை கைது செய்தனர்.
காடுவெட்டியைச் சேர்ந்த குரு வன்னியர் சங்க மாநிலத் தலைவராக உள்ளார். கடந்த ஏப்ரல் 28-ம் தேதி, அதிமுக பாசறையைத் தொடங்கவுள்ளதாகக் கூறிய காடுவெட்டியைச் சேர்ந்த ஜெ. குணசேகரன் (33) என்பவரை குருவின் ஆதரவாளர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில், குரு உள்பட 4 பேர் மீது மீன்சுருட்டி போலீஸôர் மே 1-ம் தேதி வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
குரு கைது செய்யப்பட்டதையொட்டி வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க கடலூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.


த. கிருட்டினன் கொலை வழக்கு: அழகிரி நிரபராதி

May 8th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, குற்றம், தீர்ப்பு, நீதிமன்றம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | ஒரு மறுமொழி » |

முன்னாள் அமைச்சர் த. கிருட்டினன் கொலை செய்யப்பட்ட வழக்கிலிருந்து தகுந்த ஆதாரங்களில்லாததால் மு.க. அழகிரியும் மேலும் 12பேரும் நிரபராதிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Karunanidhi’s son acquitted in murder case - IBNLive


சென்னை கபாலி கோவிலில் திருட்டு

April 17th, 2008 பகுப்புகள்: குற்றம், சென்னை | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

சென்னை மயிலையில் அமைந்துள்ள கபாலீச்வரர் கோவிலில் உண்டியல் ஒன்று உடைக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் களவாடப்பட்டுள்ளன.

வியாழன் அதிகாலை வந்த கோவில் ஊழியர்கள் கோவிலைத் திறந்தபோது இதனைக் கண்டு புகார் பதிந்தனர்.

உண்டியல் அதன் இடத்திலிருந்து பெயர்க்கப்பட்டு கோவிலின் ஒரு மூலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உடைக்கப்பட்டுள்ளது. மூன்று பாதுகாவல் ஊழியர்கள் கோவிலுக்குள் இருந்தும் CCTV காமிராக்கள் கண்காணித்தும் இத்திருட்டு நடந்துள்ளது அதிகாரிகளுக்கு வியப்பாக உள்ளது.

Theft in Chennai’s Kapaleeswarar temple


செந்தழல் - மூர்த்தி விவகாரம் போலீஸ் விசாரணை

April 9th, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, குற்றம், தகவல் தொழில்நுட்பம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | 6 மறுமொழிகள் » |

வலையுலகில் செந்தழல் ரவிக்கும் போலி என அறியப்படுகிற மூர்த்தி எனும் நபருக்குமிடையே இருந்த பிரச்சனை தற்போது போலிஸ்வரை சென்றுள்ளது.

ஆர்குட்டில் செந்தழல் ரவி கன்னடர்களுக்கு எதிராக செய்தி அனுப்புவதுபோல போலி செய்திகள் அனுப்பப்பட்டதாகவும அதனால் செந்தழல் ரவிக்கு மிரட்டல்கள் வந்தததகவும் அவர் பெங்களூரை விட்டு சென்னனக்கு வர நேர்ந்ததாகவும் தினமலரில் செய்தி வெளியாகியுள்ளது. (இதை செந்தழலே எனக்குத் தெரிவித்தார்).

இது குறித்து விசாரிக்க இணையக் குற்றவியல் ககவல் துறைக்கு சென்னை கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டுள்ளார்.

தினமலர்


போலி பாஸ்போர்ட்: இருவர் கைது

March 28th, 2008 பகுப்புகள்: குற்றம், கைது, சட்டம் - நீதி | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

போலி பாஸ்போர்ட்: இருவர் கைது

பாஸ்போர்ட்டில் ஆள் மாறாட்டம், புகைப்பட மாற்றம் செய்து மலேசியாவில் இருந்து சென்னை வந்த இருவரை விமான நிலைய போலீ சார் கைது செய்துள்ளனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தைச் சேர்ந்தவர் பாந்தையன். இவரது மகன் சந்திரசேகர் (29). மலேசியாவில் பணிபுரிந்து வந்த இவர், பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்தை மாற்றி போலி யாக பாஸ்போர்ட் தயாரித்தார். சிவகங்கையைச் சேர்ந்தவர் சிலையப்பன். இவரது மகன் பாண்டிச்செல்வம்(30). இவரும் மலேசியாவில் இருந்து திரும்பு வதற்காக அடுத்தவர் பாஸ் போர்ட்டில் ஆள் மாறாட்டம் செய்து போலியாக பாஸ் போர்ட் தயாரித்தார். இந்த போலி பாஸ்போர்டு களை பயன்படுத்தி இருவரும் நேற்று காலை கோலாலம் பூரில் இருந்து வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தனர். சோதனையில் இருவரும் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்தது தெரிய வந்ததால், விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக் கப்பட்டனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியருக்கு மூன்று மாத சிறை தண்டனை

March 27th, 2008 பகுப்புகள்: ஊடகம், குற்றம், சட்டம் - நீதி, தீர்ப்பு, தொலைக்காட்சி, நீதிமன்றம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியருக்கு மூன்று மாத சிறை தண்டனை

பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதன் வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு ஊத்துக்கோட்டை பள்ளியில் பொதுத் தேர்வின் போது காப்பியடிக்க உதவியதாக பள்ளித் தலைமையாசிரியர் சேதுராமன் குறித்து செய்தி வெளியிட்டது. இதனை அவதூறு வழக்காக சேதுராமன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி  மற்றும் வெளியீட்டாளர் இலட்சுமிபதி ஆகியோருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு வெளியிட்டது.

தகவல் : மக்கள் தொலைக்காட்சி 


அரசுப் பேருந்தில் செவிலியர் மானபங்கம்?

March 25th, 2008 பகுப்புகள்: குற்றம், சட்டம் - நீதி | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

அரசுப் பேருந்தில் செவிலியர் மானபங்கம்?

கரூர் அருகே அரசுப் பேருந்தில் சென்ற கிராம செவிலியர், 4 பேர் கொண்ட கும்பலால் மானபங்கம் செய்யப்பட்டார். கணவர் முன்னிலையிலேயே இந்தக் கொடூரச் சம்பவம் நடந்தது.

இக்கும்பலை காவல் நிலையத்தில் ஒப்படைக்காமல், பாதிக்கப்பட்ட பெண்ணை பஸ்ஸிலிருந்து தள்ளிவிட்ட நடத்துநருக்கு எதிராகப் பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் போலீஸôர் மெத்தனமாகச் செயல்படுகின்றனர் எனவும் புகார்கள் எழுந்துள்ளன.

விருதுநகர் மாவட்டம், மேலஆராம்பாளையத்தைச் சேர்ந்தவர் காந்திராஜன். இவரது மனைவி வள்ளியம்மாள் (38). இவர், கரூர் மாவட்டம், கட்டளை துணை சுகாதார நிலையத்தில், கிராம சுகாதாரச் செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080325142735&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=0


பாஸ்போர்ட்டில் ஆள்மாறாட்டம்: நைஜீரிய பெண் கைது

March 20th, 2008 பகுப்புகள்: குற்றம், கைது, சட்டம் - நீதி, பெண்கள் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

பாஸ்போர்ட்டில் ஆள்மாறாட்டம்: நைஜீரிய பெண் கைது

சென்னை: பாஸ்போர்ட்டில் புகைப்படத்தை மாற்றி மோசடி செய்ததற்காக நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை விமான நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா அடி டூ. தற்போது தென்னாப்ரிக்காவில் உள்ள ஜோகனஸ்பர்க்கில் வசித்து வருகிறார். இந்தியா வந்த அவர், நேற்று காலை மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர், சென்னையில் இருந்து டொராண்டோ செல்வதற்காக சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு புறப்பாடு முனையத்திற்கு சென்றார். அங்கு அவரிடம் குடியுரிமைச் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில், கிறிஸ்டினாவின் பாஸ்போர்ட்டில் புகைப்படத்தை மாற்றி மோசடி செய்துள்ளது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அவர் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.