இலங்கை | சற்றுமுன்...




ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை மீண்டும் சாம்பியன்

July 7th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், இந்தியா, இலங்கை, கிரிக்கெட், விளையாட்டு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை மீண்டும் `சாம்பியன்’
இந்திய கனவை தகர்த்தார், மென்டிஸ்

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது. சுழற்பந்து வீச்சாளர் மென்டிஸ், இந்தியாவின் கனவை சிதறடித்தார்.

இறுதிப்போட்டி

6 நாடுகள் பங்கேற்ற 9-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடந்தது. இதில் கராச்சியில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக பிரவின்குமாருக்கு பதிலாக உத்தப்பா சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் முந்தைய ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த சமிந்தா வாஸ், அஜந்தா மென்டிஸ் மீண்டும் திரும்பினர்.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோனி முதலில் இலங்கையை பேட் செய்ய பணித்தார். இதையடுத்து ஜெயசூர்யாவும், சங்கக்கராவும் இலங்கை அணியின் இன்னிங்சை தொடங்கினார்கள். 2-வது ஓவரில் இலங்கை அணிக்கு அதிர்ச்சி ஆரம்பமானது. சங்கக்கரா (4 ரன்) ரெய்னாவால் ரன்-அவுட் செய்யப்பட்டார். இதன் பிறகு ஒரு பக்கம் ஜெயசூர்யா சரவெடியாய் வெடித்துக் கொண்டிருக்க, மறுபுறம் விக்கெட்டுகள் சரிந்தன. கேப்டன் ஜெயவர்த்தனே 11 ரன்னிலும் (19 பந்து, ஒரு பவுண்டரி), கபுகேதரா 5 ரன்னிலும் (11 பந்து), சமர சில்வா ரன் ஏதுமின்றியும் (0), இஷாந்த் ஷர்மா பந்து வீச்சுக்கு இரையானார்கள். 12-வது ஓவரில் 66 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தத்தளித்தது.

ஜெயசூர்யா சதம்

இந்த சூழலில் ஜெயசூர்யாவுடன், தில்ஷன் ஜோடி சேர்ந்தார். விக்கெட் சரிவை பற்றி துளியும் கவலைப்படாமல் ஜெயசூர்யா தனது வழக்கமான பாணியில் வெளுத்து வாங்கினார். அவர் 56 ரன்களில் இருந்த போது மிட்-ஆன் திசையில் நின்ற ஆர்.பி.சிங் கடினமான ஒரு கேட்ச்சை கோட்டை விட்டார். அதன் பலனை ஆர்.பி.சிங் உடனே அனுபவிக்க நேர்ந்தது. அவர் வீசிய ஒரு ஓவரில் 3 சிக்சரும், 2 பவுண்டரியும் ஜெயசூர்யா விளாசி, திகைக்க வைத்தார். ஜெயசூர்யா அதிரடியால், இலங்கை அணியின் ரன்-ரேட் 6 ரன்களுக்கு மேலாகவே சென்று கொண்டிருந்தது. ஸ்கோர் 300 ரன்களை தாண்டலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அபாரமாக ஆடிய ஜெயசூர்யா 79 பந்துகளில் தனது 27-வது சதத்தை தொட்டார். இந்தியாவுக்கு எதிராக அவர் கண்ட 6-வது சதமாகும்.

சதத்திற்கு பிறகு ஜெயசூர்யா மிகவும் களைத்து போனார். தவிர, ஓஜாவும், ஷேவாக்கும் சுழற்பந்து வீச்சில் அவர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் மிடில் பகுதியில் ரன் வேகம் வெகுவாக குறைந்தது. ஜெயசூர்யாவும், தில்ஷனும் ஒன்று, இரண்டு ரன்கள் வீதமே எடுத்தனர்.

ஸ்கோர் 197 ரன்களாக உயர்ந்த போது, முக்கியமான கட்டத்தில் இந்த ஜோடி பிரிந்தது. ஜெயசூர்யா 125 ரன்களில் (114 பந்து) குவித்த நிலையில், ஷேவாக் பந்து வீச்சில் இஷாந்த் ஷர்மாவிடம் கேட்ச் ஆனார். அவரது ரன்னில் 9 பவுண்டரியும், 5 சிக்சரும் அடங்கும். அணியை சரிவில் இருந்து மீட்ட இந்த இணை 5-வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்தது சிறப்பம்சமாகும். சிறிது நேரத்தில் தில்ஷனும் (56 ரன், 74 பந்து, 3 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.

 

273 ரன்கள் சேர்ப்பு

இதன் பிறகு ஆட்டம் இந்தியாவின் கட்டுக்குள் வந்தது. 20-40-வது ஓவர் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை. இறுதி கட்டத்தில் வாஸ் (19 ரன்), குலசேகரா (29 ரன், 29 பந்து, 3 பவுண்டரி) ஆட்டம் மட்டும் குறிப்பிடும்படி இருந்தது. முடிவில் இலங்கை அணி 49.5 ஓவர்களில் 273 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இந்திய தரப்பில் ஆர்.பி.சிங், இஷாந்த் ஷர்மா தலா 3 விக்கெட்டுகளும், இர்பான் பதான் 2 விக்கெட்டுகளும், ஷேவாக் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

ஷேவாக் அரை சதம்

அடுத்து 274 ரன்கள் எடுத்தால் ஆசிய கோப்பை என்ற இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய ஷேவாக், பந்துகளை தொடர்ச்சியாக பவுண்டரிக்கு ஓட விட்டு மிரட்டினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கம்பீர் 6 ரன்களில் ஏமாற்றி நிலையில், அடுத்து சுரேஷ் ரெய்னா ஆட வந்தார். மின்னல் வேகத்தில் ஆடிய ஷேவாக் 26 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். இதன் மூலம் ஆசிய கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் அரை சதம் அடித்தவர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

ஆனால், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மென்டிஸ் பந்து வீச தொடங்கியதும் ஆட்டத்தின் போக்கு மாறியது. அவரது பந்தில் ஷேவாக் (60 ரன், 36 பந்து, 12 பவுண்டரி), ஸ்டம்பிங் ஆனார். அடுத்து வந்த யுவராஜ்சிங் (0) அதே ஓவரில் போல்டு ஆக இந்தியா அதிர்ந்தது. இதன் பிறகு ரெய்னா (16 ரன்), ரோகித்ஷர்மா (3 ரன்) ஆகியோரையும் மென்டிஸ் காலி செய்ய இந்தியா பெரும் சரிவுக்குள்ளானது. கேப்டன் டோனி-உத்தப்பா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு சிறிது நேரம் போராடினாலும், இந்தியாவை அவர்களால் நிமித்த முடியவில்லை. உத்தப்பா 20 ரன்களில் (41 பந்து) எல்.பி.டபிள்ï. ஆனார்.

இலங்கை சாம்பியன்

அடுத்து மீண்டும் பந்து வீச வந்த மென்டிஸ் மேலும் 2 விக்கெட்டுகளை சரித்து இந்தியாவை முழுமையாக தோல்வி பாதைக்கு தள்ளினார். கடைசி வரை போராடிய டோனி 49 ரன்களில் (74 பந்து, 4 பவுண்டரி) வெளியேற இந்திய அணி 39.3 ஓவர்களில் 173 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதனால் 100 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டது.

இலங்கை தரப்பில் மென்டிஸ் 13 ரன்கள் விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். ஆசிய கிரிக்கெட் வரலாற்றில் ஓர் வீரர் 6 விக்கெட்டுகள் வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். 23 வயதான மென்டிஸ் இதுவரை 8 ஒரு நாள் போட்டிகளில் தான் ஆடியிருக்கிறார். அவர் தான் எங்களுக்கு துருப்பு சீட்டாக இருப்பார் என்று இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே சொல்லியிருந்தார். அதனை அவர் நிரூபித்தும் காட்டி விட்டார். லீக்கில் அடைந்த தோல்விக்கும் இந்தியாவை பழிதீர்த்து கொண்டனர். முன்னதாக இலங்கை அணி 1986, 1997, 2004 ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மென்டிஸ் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் தட்டிச் சென்றார். அவர் தொடரில் மொத்தம் 17 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்தியா பரிதாபம்

இந்தியா ஏற்கனவே 4 முறை ஆசிய கோப்பையை வென்றிருந்தாலும், 1995-ம் ஆண்டுக்கு பிறகு ஆசிய கோப்பையை முகர்ந்ததில்லை. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக இலங்கைக்கு எதிராக மோதிய இறுதிப்போட்டிகளில் வெற்றி பெற்றதில்லை. அந்த சோகம் இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. கடந்த 2004-ம் ஆண்டு ஆசிய இறுதிப்போட்டியிலும் இந்திய அணி, இலங்கையிடம் தான் தோற்றது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் போர்டு

இலங்கை

ஜெயசூர்யா (சி) இஷாந்த் (பி) ஷேவாக் 125

சங்கக்கரா (ரன்-அவுட்) 4

ஜெயவர்த்தனே (சி) ரோகித் (பி) இஷாந்த் 11

கபுகேதரா (சி) ரெய்னா (பி) இஷாந்த் 5

சமர சில்வா (பி) இஷாந்த் 0

தில்ஷன் (சி) டோனி (பி) இர்பான் பதான் 56

வாஸ் (பி) ஆர்.பி.சிங் 19

குலசேகரா (நாட்-அவுட்) 29

துஷாரா எல்.பி.டபிள்ï. (பி) ஆர்.பி.சிங் 5

மென்டிஸ் (பி) ஆர்.பி.சிங் 8

முரளிதரன் (சி) டோனி (பி) இர்பான் பதான் 2

எக்ஸ்டிரா 9

மொத்தம் (49.5 ஓவர்களில் ஆல்-அவுட்) 273

விக்கெட் வீழ்ச்சி: 1-11, 2-34, 3-66, 4-66, 5-197, 6-213, 7-236, 8-256, 9-264

பந்து வீச்சு விவரம்

ஆர்.பி.சிங் 9-1-67-3

இஷாந்த் ஷர்மா 10-1-52-3

இர்பான் பதான் 9.5-0-67-2

ஓஜா 10-1-38-0

ஷேவாக் 8-0-30-1

ரோகித் ஷர்மா 3-0-11-0

இந்தியா

கம்பீர் (சி) தில்ஷன் (பி) வாஸ் 6

ஷேவாக் (ஸ்டம்பிங்) சங்கக்கரா (பி) மென்டிஸ் 60

ரெய்னா (பி) மென்டிஸ் 16

யுவராஜ்சிங் (பி) மென்டிஸ் 0

டோனி (சி) சங்கக்கரா (பி) வாஸ் 49

ரோகித் ஷர்மா எல்.பி.டபிள்ï (பி) மென்டிஸ் 3

உத்தப்பா எல்.பி.டபிள்ï (பி) முரளிதரன் 20

இர்பான் பதான் (சி) ஜெயவர்த்தனே (பி) மென்டிஸ் 2

ஆர்.பி.சிங் (பி) மென்டிஸ் 0

ஓஜா (நாட்-அவுட்) 6

இஷாந்த் ஷர்மா (பி) குலசேகரா 8

எக்ஸ்டிரா 3

மொத்தம் (39.3 ஓவர்களில் ஆல்-அவுட்) 173

விக்கெட் வீழ்ச்சி: 1-36, 2-76, 3-76, 4-93, 5-97, 6-135, 7-154, 8-154, 9-160

பந்து வீச்சு விவரம்

வாஸ் 9-0-55-2

குலசேகரா 6.3-0-26-1

துஷாரா 8-0-51-0

மென்டிஸ் 8-1-13-6

முரளிதரன் 8-0-26-1


இலங்கை ராணுவத்துக்கு இந்தியா பெரிய அளவில் உதவுகிறது: இலங்கை ராணுவத் தளபதி

July 1st, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், இராணுவம், இலங்கை | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

இலங்கை ராணுவத்துக்கு இந்தியா பெரிய அளவில் உதவுகிறது: இலங்கை ராணுவத் தளபதி

இலங்கை ராணுவத்துக்கு இந்தியா பெரிய அளவில் உதவுகிறது என்று இலங்கை ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா கூறினார்.

தார்மீக அடிப்படையிலும் அரசியல் ரீதியாகவும் இலங்கைக்கு இந்தியா ஆதரவு தருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இலங்கை ராணுவ அதிகாரிகள் 800 பேர் இந்தியாவில் இலவசமாக பயிற்சி பெறுகின்றனர். இந்தியா தரும் ஆதரவு மிகப் பெரியது என்று, கொழும்பில் உள்ள வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களிடம் அவர் பேசினார்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், கொழும்புக்கு சமீபத்தில் வந்தார். சீனா, பாகிஸ்தானிடம் ஆயுதம் கேட்டு இலங்கை அணுகாமல் தடுக்க, இந்தியாவே ஆயுதம் வழங்கும் என்று இலங்கையிடம் அவர் கூறினாரா என்று நிருபர்கள் கேட்டதற்கு, அதுபோல அவர் எதுவும் கூறவில்லை என்றார் பொன்சேகா.

எங்களுக்குத் தேவையான ஆயுதங்கள் உள்ளன என்று இந்தியாவுக்குத் தெரியும் என்றார் அவர்.

இலங்கைக்கு இந்தியா ஆயுதம் வழங்கினால், தென் இந்தியாவில் அரசியல் ரீதியாக எதிர்ப்பு இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். எனவே இந்திய அரசை தொந்தரவு செய்ய நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவிடம் இருந்து ஆயுதம் வாங்க முடியவில்லையே என்று நாங்கள் வருத்தப்படவில்லை என்று கூறிய பொன்சேகா, வழக்கமான முறையில் இலங்கை ராணுவத்துடன் நேருக்கு நேராக போரிடுவதில் விடுதலைப் புலிகள் ஏற்கெனவே தோற்றுவிட்டனர். 2006 ம் ஆண்டிலிருந்து இதுவரை 9000 விடுதலைப் புலிகள் போரில் கொல்லப்பட்டனர் என்றார்.

இன்னும் ஓராண்டில் அவர்கள் ராணுவ அளவில் முழுவதுமாக தோல்வியை சந்திப்பர். காடுகளில் போரிடுவதில் இலங்கை ராணுவத்தினர் உலகிலேயே சிறந்து விளங்குகின்றனர் என்றார் பொன்சேகா


தமிழக மீனவர்கள்: முதல்வர் கலைஞர் பிரதமருக்கு அவசரக் கடிதம்

March 8th, 2008 பகுப்புகள்: இலங்கை | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குவதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராமேஸ்வரம் மீனவர் கிறிஸ்டி சுட்டுக் கொல்லப்பட்டது, குமரி மாவட்ட மீனவர்கள் கடத்தப்பட்டது ஆகியவற்றை சுட்டிக் காட்டி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், இந்திய கடல் எல்லைப் பகுதியில், கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையின் கண்காணிப்பை தீவிரப்படுத்த உரிய உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும். ரோந்துப் பணியும் கூடுதலாக்கப்பட வேண்டும்.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 30ம் தேதியும் நான் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில் கடலோரக் காவல் படை மற்றும் கடற்படையின் வான் கண்காணிப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும், அதி நவீன விமானங்கள், கப்பல்கள், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் கோரியிருந்ேதன்.

ஆனால் இலங்கைக் கடற்படையின் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று கூட ஒரு மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 62 மீனவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற தொடர் தாக்குதல்கள், தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், நிம்மதியின்மையையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைக் கடற்படையின் இதுபோன்ற அட்டகாச செயல்களை தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம், அவசரம் ஏற்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதி முழுவதையும், அது எந்தப் பிராந்தியத்தின் கீழ் வருகிறது என்பதைப் பொருட்படுத்தாமல் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.

தூத்துக்குடியில் ஹெலிகாப்டருடன் கூடிய கண்காணிப்பு நிலையத்தை ஏற்படுத்த வேண்டும். இதன் கட்டுப்பாட்டை கிழக்குப் பிராந்தியத்தின் வசம் ஒப்படைக்கலாம்.

மேலும் கன்னியாகுமரியில், கடலோரக் காவல் படையின் நிலையத்தை அமைத்து, அதி நவீன ரோந்து வாகனங்கள் மற்றும் படகுகளை இடைமறித்து சோதிக்கும், விசாரிக்கும் வசதியுடன் கூடிய படகுகளையும் பணியில் ஈடுபடுத்த வேண்டும். மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகளை உடனடியாக செய்ய வேண்டும்.

மத்திய பாதுகாப்புத் துறையும் இந்த விஷயத்தில் தீவிர கவனம் எடுத்து, சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி தமிழக மீனவர்கள் செல்லாமல் பார்த்துக் கொள்ளவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சர்வதேச எல்லையைத் தாண்டி செல்ல வேண்டாம் என்று பலமுறை அரசு கூறினாலும் கூட, மீன்வளம் உள்ள பகுதிக்கே மீனவர்கள் செல்லும் நிலைமை உள்ளது.

கச்சத்தீவு அருகில்தான் மீன்வளம் நிறைய உள்ளது. தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி தலமாகவும் அது விளங்கி வருகிறது.

எனவே சமயங்களில் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து விட்டால், அவர்களை சர்வதேச சட்டங்களின் கீழும், மனிதாபிமான முறையிலும் இலங்கை கடற்படை நடத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். மீனவர்களை சுடுவது, தாக்குவது போன்ற வன்முறைகளில் ஈடுபடக் கூடாது.

எனது இந்த யோசனைகளை தாங்கள் போர்க்கால அடிப்படையில் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும், இலங்கை கடல் எல்லைக்குள் வழி தவறி நுழையும் தமிழக மீனவர்களிடம் வன்முறையைக் காட்ட வேண்டாம் என இலங்கைக் கடற்படைக்கு அறிவுறுத்துமாறு மத்திய வெளியுறவுத்துறை மூலம் இலங்கை அரசுக்கு அறிவுரை கூற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இன்னொரு புதிய பிரச்சினையாக இலங்கையைச் சேர்ந்த இலங்கை வடக்கு பிரதேச பாதுகாப்பு கழகம் என்ற அமைப்பு தமிழக மீனவர்களை கடுமையாக எச்சரித்துள்ளது. இலங்கை கடல் எல்லைக்குள் நுழையக் கூடாது, நுழைந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அது எச்சரித்துள்ளது. இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையை இந்தியா வற்புறுத்த வேண்டும்.

இலங்கையின் செயல்களைக் கண்டித்து தமிழக மீனவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் நாளுக்கு நாள் சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.

நாளுக்கு நாள் இந்த நிலைமை மோசமடைந்து வருவதை மத்திய அரசு உணர வேண்டும். எனவே தமிழக கடலோரப் பகுதிகளில் கடற்படையும், கடலோரக் காவல் படையும் தீவிரக் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதை உணர்ந்து உரிய உத்தரவினை பிரதமர் பிறப்பிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் கருணாநிதி.

தட்ஸ்தமிழ் தளத்திலிருந்து…. 


பிரபாகரன் தப்ப இடி அமீன் தீர்வை சொல்கிறது இலங்கை

February 20th, 2008 பகுப்புகள்: அரசியல், இலங்கை, ஈழம் - இலங்கை | தொகுப்பாளர்: லக்கிலுக் | மறுமொழிகள் இல்லை » |

இடி அமீன் வழியில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இலங்கையைவிட்டு தப்பி வெளிநாட்டில் தஞ்சம் புகலாம் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை வாபஸ் பெற்றதிலிருந்து, தமிழர் பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது இலங்கை.

புலிகளின் மன் உறுதியை குலைக்கும் விதமாக, குண்டு வீச்சில் பிரபாகரன் இறந்துவிட்டதாகவும், காயமடைந்து விட்டதாகவும் வெவ்வேறு பொய்யான தகவல்களை இலங்கை அரசு பரப்பி வருகிறது.

இந்நிலையில், போரில் தோற்று பிரபாகரன் இலங்கையைவிட்டு தப்பிச்செல்ல ஏதோ தருணம் பார்த்துக் கொண்டிருப்பதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக, இடி அமீன் பாணியில் பிரபாகரன் வெளிநாட்டில் தஞ்சம் புக உதவும் தீர்வை தெரிவித்துள்ளதாக இலங்கை அரசு கூறியுள்ளது.

உகாண்டாவில் கடந்த 1971 ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றிய இடி அமீன், 1979 ம் ஆண்டு நிகழ்ந்த உகாண்டா - தான்சானியா போருக்குப் பின்னர் லிபியாவுக்கு தப்பிச் சென்றார்.பின்னர் அவர் 1981 ம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு சென்று, 2003 ம் ஆண்டு இறக்கும் வரை அங்கேயே தங்கி இருந்தார்.

இந்நிலையில் இதுபோன்றதொரு தீர்வை பிரபாகரனுக்கு தாங்களும் தெரிவிப்பதாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சக செயலர் பாலிதா கோஹனா கூறியுள்ளார்.

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், ” பிரபாகரன் கிளிநொச்சியைவிட்டு வெளியேறினால் , ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக இந்தியா நிச்சயம் அவரை பிடித்துவிடும்.மேலும் இந்தியாவும் அவ்வப்போது பிரபாகரனை நாடு கடத்த வேண்டும் என்று கடிதம் அனுப்பி வருகிறது ” என்று கூறினார்.

பிரபாகரன் வெளிநாட்டில் பத்திரமாக புகலிடம் அளிப்பதற்கான ஏற்பாடுகளை நார்வே மேற்கொண்டு வருகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ” அது நல்ல யோசனை இல்லையா ? இந்த இடி அமீன் தீர்வு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது ” என்று கூறினார்.

மேலும் ஆஸ்திரேலியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வதற்கான நடவடிக்கையை இலங்கை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

(மூலம் - வெப்துனியா)


விலைவாசி ஏற்றத்தால் பட்டினி : அகதி பேட்டி

February 16th, 2008 பகுப்புகள்: இலங்கை, ஈழம் - இலங்கை, சமூகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

விலைவாசி ஏற்றத்தால் பட்டினி : அகதி பேட்டி

மண்டபம் : இலங்கையில் விலைவாசி ஏற்றத்தால் தமிழர்கள் உணவின்றி பட்டினி கிடக்கின்றனர் என படகில் வந்த அகதி கூறினார். இலங்கை மன்னார்,யாழ்பாணம்,திரிகோணமலை பகுதியிலிருந்து நான்கு குடும்பத்தை சேர்ந்த 11 அகதிகள் பேச்சாளையிலிருந்து படகில் புறப்பட்டு நேற்று காலை பாம்பன் குந்துகால் கடல்பகுதியில் வந்திறங்கினர்.  இவர்களில் நாகேந்திர ஸ்ரீரங்கன்(24)கூறுகையில்,” இலங்கை அரசு மீன் பிடி தொழிலுக்கு மானியமாக அளித்தவந்த 50 லிட்டர் மண்ணெண்ணெய் தற்போது 25 லிட்டராக குறைத்து உள்ளது.இதனால் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல முடியவில்லை.மேலும் கிலோ அரிசி ரூ. 60, கிலோ சீனி ரூ.80,குழந்தைகளுக்கான பால் மாவு கிலோ ரூ. 300 க்கு விற்கப்படுகிறது. விலைவாசி ஏற்றத்தால் தமிழர்கள் பட்டினி கிடக்கின்றனர்’ என்றார். தனியாக வந்த அகதி:இலங்கை மன்னார் பகுதியிலிருந்து தவகரன்(31)என்ற அகதி படகில் ரூ. ஒரு லட்சத்து 20 ஆயிரம் கொடுத்து தனியாக பாம்பன் கடல் பகுதியில் வந்திறங்கினார்.இவர் கூறுகையில்,’ நான் பேக்கரியில் வேலை செய்து வந்தேன்.எங்கள் ஊரான கொடிகாமத்தில் தொடர்ந்து அப்பாவி பொதுமக்கள் சுடப்படுகின்றனர். விடுதலைப்புலிகள்,கருணா தலைமையிலான அமைப்பினர்,இலங்கை ராணுவம் என இவர்களில் யார் சுடுகின்றனர் என தெரியவில்லை.இதில் அப்பாவி பொது மக்கள் குண்டடிபட்டு இறக்கின்றனர்’ என்றார்.

http://www.dinamalar.com/2008FEB16/district/ramanathapuram.asp


புதுதில்லியில் ஈழத்தமிழர்களுக்கு ஆதவாக பேரணி ஆர்ப்பாட்டம் - புதுச்சேரியில் வழி அனுப்புவிழா

February 3rd, 2008 பகுப்புகள்: அரசியல், அரசியல், இந்தியா, இலங்கை, ஈழம் - இலங்கை, கிளர்ச்சி, சமூகம், சென்னை, தமிழக அரசியல், தமிழ்நாடு, நாடாளுமன்றம், போராட்டம், மத்திய அரசியல் | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | 2 மறுமொழிகள் » |

பெரியார் திராவிடர் கழகம் சார்பில் வரும் 06-02-2008 புதனன்று, காலை 11 மணியளவில், புதுதில்லியில் பாராளுமன்றம் முன்பு இந்திய அரசே! தமிழர்களைக் கொல்லும் இலங்கைக்கு இராணுவ உதவி செய்யாதே என வலியுறுத்தி மாபெரும் கண்டனப் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.    இதில், கலந்துக் கொள்வதற்காக புதுச்சேரிலிருந்து பெரியார் தி.க. அமைப்பின் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் 60 பேர், 03-02-2008 ஞாயிறன்று மதியம் 4.00 மணியளைவில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்டனர். சென்னையிலிருந்து தொடர்வண்டி மூலம் புதுதில்லி செல்கின்றனர். புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் அவர்களுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சி அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி அனுப்பினர்.  தமிழகத்திலிருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் இப்போரட்டத்தில் கலந்துக் கொள்ள உள்ளதாக அவ்வமைப்பின் புதுச்சேரி செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ கூறினார்.


துபாய் விமான நிலையத்தில் இலங்கை பணிப்பெண் தற்கொலை

January 24th, 2008 பகுப்புகள்: அமீரகம், இலங்கை, குவைத், தற்கொலை, பெண்கள், மரணம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

துபாய் விமான நிலையத்தில் இலங்கை பணிப்பெண் தற்கொலை

துபாய் விமான நிலையத்தில் இலங்கை பணிப்பெண் கலா சங்கரபிள்ளை ( வயது 30 ) பெண்கள் ஓய்வறையில் தற்கொலை செய்து கொண்டார்.

குவைத்தில் பணிபுரிந்து வந்த இவர் துபாய் வழியாக செல்லும் போது கொழும்பு விமானத்திற்காக பயணிகள் ஓய்வறையில் இருந்த போது தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவரால் கைவிடப்பட்ட இவருக்கு ஒரு ஆண், மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இவர் மூன்று வருடங்களுக்கு முன்னர் குவைத்திற்கு சென்றார்.  குடும்பத்தினர் இவரது வருகையை எதிர்பார்த்து காத்திருந்த வேலையில் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

http://www.khaleejtimes.com/DisplayArticleNew.asp?xfile=data/theuae/2008/January/theuae_January715.xml&section=theuae&col=


திருச்சி ஏர்போர்ட்டுக்கு ‘மிகின்’ இன்று வருகை

January 18th, 2008 பகுப்புகள்: இலங்கை, விமானம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

திருச்சி ஏர்போர்ட்டுக்கு ‘மிகின்’ இன்று வருகை

கொழும்புதிருச்சி இடையே இயக்கப்பட்டு கடந்த மாதம் நிறுத்தப்பட்ட தனியார் விமான சேவை இன்று முதல் துவங்குகிறது. இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து திருச்சிக்கு தனியார் விமான நிறுவனமான மிகின் லங்கா விமான நிறுவனம் கடந்த ஆண்டு விமான சேவையை துவக்கியது. ஆரம்பத்தில் கட்டண சலுகையுடன் இயக்கப்பட்டதால் விமான பயணிகள் மத்தியில் வரவேற்பு இருந்தது. குறைந்த எண்ணிக்கையில் விமானங்களை வைத்து சேவை செய்ததால் நாளடைவில் விமான இயக்கத்தில் தொய்வு ஏற்பட்டது. இதனால் 25 நாட்களாக விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

“கொழும்புதிருச்சி இடையே மிகின் லங்கா விமான நிறுவனம் மீண்டும் இன்று விமான சேவையை துவக்குகிறது. செவ்வாய், ஞாயிறு தவிர வாரத்தில் ஐந்து நாட்களும் விமான சேவையை இயக்க உள்ளனர்,” என்று திருச்சி விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.

www.dinamalar.com


விடுதலைப்புலிகளுக்கு எதிராக இந்தியா இலங்கை அரசிற்கு ஆதரவு: பிரணாப்

January 12th, 2008 பகுப்புகள்: இந்தியா, இராணுவம், இலங்கை, ஈழம் - இலங்கை, தீவிரவாதம், தொலைக்காட்சி, மத்திய அரசியல் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா இராணுவம் நடத்திவரும் தாகுதல்களுக்கு இந்தியாவின் ஆதரவு இருப்பதாகவும் எந்த நாடும் தங்கள் அரசியல்சட்டத்திற்குட்பட்டு தீவிரவாதிகளின் மீது நடவடிக்கை எடுக்கலாம் எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி டெவில்ஸ் அட்வகேட் என்னும் தொலைக்காட்ச