சனியன்று தாலிபன் தீவிரவாதிகள் என கருதப்படுபவர்களால் கட்டுமானப் பணிக்காக சென்றிருந்த இந்திய எல்லைப்புற சாலைகள் நிறுவனத்தின் (Border Roads Organisation) ஊழியர்கள் தாக்கப்பட்டதில் இரு பொறியாளர்கள் இறந்தனர்; ஐவர் காயமடைந்தனர்.
இன்று காலை 9 மணியளவில் நிம்ரோZ மாகானத்தில் மினார் பகுதியில் இவர்கள் மீது தற்கொலைப்படையினரின் வண்டி மோதியதில் சி கோவிந்தசாமி மற்றும், எம் பி சிங் என்ற இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பிஸ்ராம் ஓரான்,விக்ரம் சிங், முகமது நசீன் கான், அனில்குமார் தம்பி, மாயாராம் ஆகியோர் காயமடைந்தவர்கள் என வெளியுறவுத் துறையின் தொடர்பாளர் நவ்தேஜ் சர்மா கூறினார். காயமடைந்தவர்கள் மருத்துவ முகாமிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்; காயமடைந்தவர்கலையும் இரந்தவர்களின் உடல்களையும் உடனே திரும்பக் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
சுமார் 400 BRO ஊழியர்கள் சரஞ்சிற்கும் டெலாராமிற்குமிடையேயான 218 கிமீ சாலை அமைப்புப்பணிகளில் இந்தியாவின் உதவிதிட்டங்களின் கீழ் பணிபுரிந்து வருகிறார்கள். தாலிபான் ஆப்கனின் புனரமைப்பு திட்டங்களுக்கு இந்தியா அளித்து வரும் உதவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. திசம்பர் 2005இலேயே இந்திய ஓட்டுநர் குட்டியை பிடித்துவைத்துக் கொண்டு இந்தியர்கள் வெளியேற கெடு விதித்துக் கொன்றனர்.அதன் பிறகு மூன்று இந்தியர்கள் பலியாகி உள்ளனர். இந்தியா இப்பணியில் ஈடுபட்டவர்களின் பாதுகாப்பிற்காக 300 பேர் அடங்கிய ITBP படையினரை அனுப்பியுள்ளது. கடந்த ஜனவரியில் அவர்கள் மீதும் தற்கொலைப்படை தாக்கி இரு படைவீரர்கள் இறந்தனர்.
இந்திய வெளியுறவுத்துறையின் சர்மா இந்த வன்முறைகளை கடுமையாக கண்டிப்பதுடன் ஆப்கன் மக்களின் நல்வாழ்விற்கும் புனரமைப்பிற்கும் துணையாக இருக்க இந்தியாவின் பிடிப்பை இந்நிகழ்வுகள் தளர்த்தாது என்று கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசின் இரங்கல்களை தெரிவித்துக் கொண்டு அவர்களுக்கு காப்பீடு மற்றும் உதவிப்பணம் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் கூறினார்.
