ஆப்கானிஸ்தான் | சற்றுமுன்...




ஆப்கனில் தீவிரவாதிகள் இந்திய கட்டுமான ஊழியர்கள் மீது தாக்கு: இருவர் பலி

April 12th, 2008 பகுப்புகள்: ஆப்கானிஸ்தான், தீவிரவாதம் | தொகுப்பாளர்: மணியன் | ஒரு மறுமொழி » |

சனியன்று தாலிபன் தீவிரவாதிகள் என கருதப்படுபவர்களால் கட்டுமானப் பணிக்காக சென்றிருந்த இந்திய எல்லைப்புற சாலைகள் நிறுவனத்தின் (Border Roads Organisation) ஊழியர்கள் தாக்கப்பட்டதில் இரு பொறியாளர்கள் இறந்தனர்; ஐவர் காயமடைந்தனர்.

இன்று காலை 9 மணியளவில் நிம்ரோZ மாகானத்தில் மினார் பகுதியில் இவர்கள் மீது தற்கொலைப்படையினரின் வண்டி மோதியதில் சி கோவிந்தசாமி மற்றும், எம் பி சிங் என்ற இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பிஸ்ராம் ஓரான்,விக்ரம் சிங், முகமது நசீன் கான், அனில்குமார் தம்பி, மாயாராம் ஆகியோர் காயமடைந்தவர்கள் என வெளியுறவுத் துறையின் தொடர்பாளர் நவ்தேஜ் சர்மா கூறினார். காயமடைந்தவர்கள் மருத்துவ முகாமிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்; காயமடைந்தவர்கலையும் இரந்தவர்களின் உடல்களையும் உடனே திரும்பக் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

சுமார் 400 BRO ஊழியர்கள் சரஞ்சிற்கும் டெலாராமிற்குமிடையேயான 218 கிமீ சாலை அமைப்புப்பணிகளில் இந்தியாவின் உதவிதிட்டங்களின் கீழ் பணிபுரிந்து வருகிறார்கள். தாலிபான் ஆப்கனின் புனரமைப்பு திட்டங்களுக்கு இந்தியா அளித்து வரும் உதவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. திசம்பர் 2005இலேயே இந்திய ஓட்டுநர் குட்டியை பிடித்துவைத்துக் கொண்டு இந்தியர்கள் வெளியேற கெடு விதித்துக் கொன்றனர்.அதன் பிறகு மூன்று இந்தியர்கள் பலியாகி உள்ளனர். இந்தியா இப்பணியில் ஈடுபட்டவர்களின் பாதுகாப்பிற்காக 300 பேர் அடங்கிய ITBP படையினரை அனுப்பியுள்ளது. கடந்த ஜனவரியில் அவர்கள் மீதும் தற்கொலைப்படை தாக்கி இரு படைவீரர்கள் இறந்தனர்.

இந்திய வெளியுறவுத்துறையின் சர்மா இந்த வன்முறைகளை கடுமையாக கண்டிப்பதுடன் ஆப்கன் மக்களின் நல்வாழ்விற்கும் புனரமைப்பிற்கும் துணையாக இருக்க இந்தியாவின் பிடிப்பை இந்நிகழ்வுகள் தளர்த்தாது என்று கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசின் இரங்கல்களை தெரிவித்துக் கொண்டு அவர்களுக்கு காப்பீடு மற்றும் உதவிப்பணம் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் கூறினார்.

Two BRO men killed in terror attack in Afghanistan


ஆப்கனுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரி கடத்தல்

February 12th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆப்கானிஸ்தான், உலகம், பாக்கிஸ்தான் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதர் தாரிக் அசிசுதீன், மர்ம நபர்களால் இன்று கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் நேற்று பாகிஸ்தானுக்கு வந்து விட்டு மீண்டும் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். ஆப்கான் எல்லையையொட்டிய வட மேற்கு பாகிஸ்தானில் உள்ள பழங்குடியினத்தவர்கள் வசிக்கும் (Khyber tribal agency) பகுதியில் அவர் மாயமானதாக கூறப்படுகிறது.

அவரை தலிபான் தீவிரவாதிகள் கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசு எந்தவித தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.

நன்றி: தமிழ் எம்.எஸ்.என் & யாஹூ

மேலும் விவரங்களுக்கு:

1. BBC NEWS | South Asia | Pakistan nuclear staff go missing

2. NDTV.com: Taliban want Dadullah in lieu of Pak envoy

3. Top Taliban Commander Is Captured In Pakistan - washingtonpost.com: Leader in Afghan South Claimed Bin Laden Ties


ஆப்கனில் முதல் பெண்கள் சிறைச்சாலை

January 25th, 2008 பகுப்புகள்: ஆப்கானிஸ்தான், குற்றம், பெண்கள் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஆப்கனில் முதல் பெண்கள் சிறைச்சாலை

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கென பிரத்யேகமாக முதலாவது சிறைச்சாலை இத்தாலி அரசின் உதவியுடன் கட்டப்பட்டுள்ளது.

http://www.gulfnews.com/region/Middle_East/10184437.html


ஆப்கான் மாணவருக்கு இறை நிந்தனைக்காக மரண தண்டனை

January 23rd, 2008 பகுப்புகள்: ஆசியா, ஆப்கானிஸ்தான் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

Afghan Student - Reuters: USA Todayஇறை நிந்தனை குற்றத்துக்காக இதழியல் படிப்பு மாணவர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை குறித்து தாம் கவலையடைந்துள்ளதாக ஆப்கன் நாட்டின் தகவல்துறை அமைச்சர் கரிம் கோரம் கூறியுள்ளார்.

ஆப்கானின் வடக்கேயுள்ள மசாரே ஷெரிப் நகரில் படித்துக் கொண்டிருந்த பர்வேஸ் கம்பக்ஷ் தன்னுடன் பல்கலைக் கழகத்தில் படித்து வந்த மாணவர்களிடம் ஒரு கட்டுரையை வினியோகித்தற்காக மூன்று மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

பெண்கள் குறித்த இஸ்லாமிய அணுகுமுறை பற்றி அந்த கட்டுரை விமர்சித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்தக் கட்டுரையை கம்பக்ஷ் எழுதவில்லை என்று ஆப்கானிய தகவல்துறை அமைச்சர் கூறியுள்ளார். உயர் நீதிமன்றம் இது தொடர்பான மேல் முறையீட்டை விசாரிக்கும் போது, உரிய தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

நன்றி: தமிழ் பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. Afghan sentenced to death after sharing Web printouts | Tech news blog - CNET News.com

2. The Associated Press: Afghan Journalist Sentenced to Death

3. Mental Note: Do Not Print Stuff From The Internet In Afghanistan


2007 ஆப்கனின் மிக மோசமான ஆண்டு

January 3rd, 2008 பகுப்புகள்: ஆப்கானிஸ்தான் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

2007 ஆப்கனின் மிக மோசமான ஆண்டு

ஆப்கானிஸ்தான் 2007 ஆம் ஆண்டு வன்முறைகள் மிகவும் மோசமாக நடைபெற்ற ஆண்டாக கருதப்படுகிறது. 110க்கும் மேற்பட்ட அமெரிக்க படையினர் உள்ளிட்ட 6500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பிரிட்டன் 40 படையினரையும், கனடா 30 படையினரையும் இழந்துள்ளது.

2007 worst year of violence in Afghanistan

http://archive.gulfnews.com/articles/08/01/02/10178705.html