உடல்நலம் | சற்றுமுன்...




கூவம் கரையில் ஒரு சோமாலியா

August 8th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, *பொது, உடல்நலம், மருத்துவம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கூவம் கரையில் ஒரு “சோமாலியா’

ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பானுமதி தனது தாயின் மடியில்.

சென்னை, ஆக. 7: சென்னை கூவம் கரையில் ஒரு சோமாலியாவின் பரிதாபக் காட்சி மனதை கலங்க வைக்கிறது.

ஆட்டோமொபைல் உபகரணங்களுக்கு பெயர் போன புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் சாலை ஓரத்தில் எவ்வித அரவணைப்பின்றி பரபரப்பாக ஓடும் வாகனங்களை ஏக்கமும், தவிப்புமாகப் பார்க்கும் குழந்தை பானுமதிக்கு வயதோ மூன்றரை.

கை, கால்கள் தளர்ந்தும், சுருங்கி போன பானுமதியை பார்க்கும் பெற்றோர்களுக்கு சற்றே மனது நொருங்கிப் போய்விடும்.

நன்றாக ஓடி, ஆட வேண்டிய குழந்தை முறையான பராமரிப்பின்றியும், சத்தான சாப்பாடு இல்லாமல் ஊட்டசத்துக் குறைபாட்டால் முடங்கிப் போய் நகர முடியாமல் இருக்கிறாள்.

கூவத்தையொட்டி குடிசை வீடு அமைத்து தங்கியுள்ள அவரது தாய் வைரமும், தனது குழந்தையைச் சரியாகப் பராமரிப்பதில்லை. கணவரால் கைவிடப்பட்ட வைரம், குப்பை பொறுக்கியும், வீடுகளில் பணிப்பெண்ணாக வேலை செய்கிறார். சம்பாதிக்கும் 50 ரூபாய் போதவில்லை என்கிறார் வைரம். இதனால் பானுமதிக்கு சத்தான உணவை வாங்கிக் கொடுக்க முடியாத நிலை. சாலை ஓரத்தில் பானுமதியை பார்த்து இரக்கப்படும் பலர் கொடுக்கும் உணவுப் பொருளே அவளுக்கு அரு மருந்து.

ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகளை அரசு மருத்துவமனைக்கு கூட சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாதது வறுமையின் பரிதாப நிலை. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மிஞ்சிப் போனால் ஒரு கிலோ மீட்டர் தூரம் கூட கிடையாது.

பெற்ற தாய் இருந்தும், கவனிப்பின்றி தவிக்கும் பானுமதி என்ன தவறு செய்தார்?…பாவம்!


நுரையீரல் பாதிப்பு: தீவிர கண்காணிப்பில் அர்ஜுன் சிங்- எய்ம்ஸ் தகவல்

August 3rd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், உடல்நலம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

நுரையீரல் பாதிப்பு: தீவிர கண்காணிப்பில் அர்ஜுன் சிங்- எய்ம்ஸ் தகவல்

புதுதில்லி, ஆக.2: உடல் நலக்குறைவால் கடந்த 30-ம் தேதி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங், நுரையீரல் நோய் பாதிப்பால் அவதிப்படுவதாக டாக்டர்கள் சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

அவரது உடல்நிலை சீராக இருந்தாலும், நுரையீரல் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளதால் சுவாசிப்பதில் அவர் மிகவும் சிரமப்படுவதாக டாக்டர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும் மூத்த டாக்டர்கள் குழுவின் மேற்பார்வையில் அவர் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக எய்ம்ஸ் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 


இந்திய மருத்துவ கூட்டமைப்பு 5 ஆயிரம் கிராமங்கள் தத்தெடுப்பு : பி.சி.ராய் விருது பெற்ற டாக்டர் அஷ்ரப் பேச்சு

July 20th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, உடல்நலம், சுற்றுச்சூழல், மருத்துவம், விருது | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

இந்திய மருத்துவ கூட்டமைப்பு 5 ஆயிரம் கிராமங்கள் தத்தெடுப்பு : பி.சி.ராய் விருது பெற்ற டாக்டர் அஷ்ரப் பேச்சு

இந்திய மருத்துவ கூட்டமைப்பு 5 ஆயிரம் கிராமங்களை தத்தெடுத்து உள்ளது என்று பி.சி.ராய் விருது பெற்ற டாக்டர் அஷ்ரப் கூறினார்.

பாராட்டு விழா

கடந்த 2006-ம் ஆண்டு “வாருங்கள் கிராமம் செல்வோம்” என்ற திட்டத்தை கிராமப்புறங்களில் செயல்படுத்தி சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக திருச்சி டாக்டர் அஷ்ரப்பிற்கு மருத்துவ துறையில் தேசிய அளவில் மிக உயர்ந்த விருதான பி.சி.ராய் விருது வழங்கப்பட்டது. இதற்கான பாராட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.

விழாவிற்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு திருச்சி கிளை தலைவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் டாக்டர் குணசேகரன், டாக்டர்கள் ஞானதிலகன், கலைக்கோவன், எஸ்.எம்.ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் அஷ்ரப் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

கிராமங்கள் தத்தெடுப்பு

ஒரு நாள் மருத்துவ முகாம்கள் நடத்துவதால் கிராமப்புற மக்களுக்கு எந்த நன்மையும் கிடைப்பதில்லை. தொடர்ந்து அந்த கிராமங்களுக்கு மருத்துவ குழுவினர் செல்ல வேண்டும். வியாதிக்கான மருந்துகள் எங்கெல்லாம் கிடைக்கிறது என்று அவர்களுக்கு எடுத்து கூற வேண்டும். இந்திய மருத்துவ கூட்டமைப்பில் 2500 கிளைகள் உள்ளன. இதன் மூலம் 5 ஆயிரம் கிராமங்களை தத்தெடுத்து உள்ளோம்.

கடந்த 60 வருடத்தில் நாம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சியால் டாக்டர்கள் மற்றும் நோயாளிகளுக்கிடையே இடைவெளி நீடிக்கிறது. டாக்டர்களின் அணுகுமுறை நோயாளிகளிடம் சிறந்ததாக இருக்க வேண்டும். சாலை விதிகளை நாம் பின்பற்ற வேண்டும். நான் அடுத்ததாக சாலை விபத்துக்கள் குறித்த ஆய்வினை மேற்கொள்ள இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக பாலகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் கீதாராமனுஜம் நன்றி கூறினார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=426581&disdate=7/20/2008&advt=2


கிளன் மெக்ராத் மனைவி மரணம்

June 22nd, 2008 பகுப்புகள்: உடல்நலம், கிரிக்கெட், பெண்கள், மரணம் | தொகுப்பாளர்: சற்றுமுன் - வினையூக்கி | மறுமொழிகள் இல்லை » |

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளன் மெக்ராத்தின் மனைவி ஜேன் மெக்ராத் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 42. அவர் மார்பக புற்றுநோயினாலும் எலும்பு புற்றுநோயினாலும் பாதிக்கப்பட்டு சிலகாலமாக மருத்துவ சிகிச்சை பெற்றுவந்தார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் குடும்பத்தினர் மத்தியில் நன்மதிப்பைப் பெற்று இருந்த மெக்ராத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். மெக்ராத் தம்பதியினர் மெக்ராத் பவுண்டேசன் என்ற அமைப்பை மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்படும் பெண்களுக்காக நடத்தி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மெக்ராத் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

மெக்ராத் பவுண்டேசன் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்


அறிவியல் செய்திகள்

April 17th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், இந்தியா, உடல்நலம், குழந்தைகள், சமூகம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

இரட்டை முகங்களுடன் இந்தியாவில் பிறந்த குழந்தை:
BBC

மேலும் விவரங்களுக்கு: BBC NEWS | South Asia | 'Miracle baby' is feted in India

2. ‘கெட்ட பழக்க’ங்களும் அல்செய்மரும்: அதிகமாக மது அருந்துபவர்களுக்கும் புகை பிடிப்பவர்களுக்கும் அல்செய்மர் நோய் ஏழு வருடம் சீக்கிரமாகவே வந்துவிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

நாள்தோறும் இரு கோப்பைக்கு மேல் மது உட்கொண்டு அதிகமாக குடிப்பவர்களும், தினந்தோறும் இருபது வெண்சுருட்டு (சிகரெட்) பிடிப்பவர்களும், தவிர்க்கக்கூடிய அபாயமான காரணிகளைக் கொண்டிருப்பவர்கள் என்று ஆய்வு முடிவு அறிவித்திருக்கின்றது.

மேலும் விவரங்களுக்கு: BBC NEWS | Health | 'Bad habits' link to Alzheimer's

3. உயிர்ச்சத்து (விடமின்) மாத்திரை உட்கொண்டால் ஆயுள் குறையலாம்: சிற்சில உயிர்ச்சத்து மாத்திரைகளை சாப்பிடுவதால் வாழ்நாள் குறைந்து சீக்கிரமே மரணம் வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இயற்கையாக உணவின் மூலமாக வராத விட்டமின் ஏ மற்றும் ஈ மாத்திரைகளினால் பலன் எதுவும் இல்லை என்பதுடன், இறப்பையும் வேகப்படுத்துகின்றன என்கிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு: BBC NEWS | Health | Vitamins 'may shorten your life'


தவ்ஹீத் மாநாடு 10லட்ச மக்கள் பங்கேற்ப்பார்கள்

April 10th, 2008 பகுப்புகள்: அரசியல், உடல்நலம் | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

தஞ்சை அருகே வல்லத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள தவ்ஹீத் ஜமாத் மாநாட்டில் 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் அந்த அமைப்பினர் மாநில துணை தலைவர் சைபுல்லா ஹாஜா தெரிவித்தார்.

தஞ்சை அருகே வல்லத்தில் வரும் மே 10,11ம் தேதிகளில் தவ்ஹீத் ஜமாஅத் மாநில மாநாடு நடைபெற உள்ளது.

சுமார் ரூ.2 கோடி செலவில் மாநாட்டு பணிகள் நடந்து வருகிறன. 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொள்கின்றனர்.

மூடபழக்க வழக்கம், சடங்கு சம்பிராயதம், சமுதாய அவலம், புகை மற்றும் பான்பராக், உடலுக்கு தீங்கான போதை பொருட்கள், வரதட்சணை கொடுமை, சிசு கொலை, வட்டி போன்றவை குறித்து அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இஸ்லாம் மார்க்கத்தை பற்றி வரலாற்று குறிப்புகளுடன் புகைப்பட கண்காட்சி இடம் பெறவுள்ளது என சைபுல்லா ஹாஜா  தெரிவிதார்.


மக்கள் தொலைக்காட்சிக்கு விருது

April 7th, 2008 பகுப்புகள்: உடல்நலம், ஊடகம், சமூகம், தொலைக்காட்சி, பெண்கள் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | 3 மறுமொழிகள் » |

பெண் குழந்தைகளை நேசிக்க ஊக்கப்படுத்தும் சிறந்த ஊடக முயற்சிகளுக்கு ஐ.நா.மக்கள் தொகை நிதியமைப்பு (யூ.என்.எஃப்.பி.ஏ.) சார்பில் ‘லாட்லி’ விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த 2007-ம் ஆண்டில் ‘மண்ணைக் காக்க பெண்ணைக் காப்போம்’ என்ற சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்காக மக்கள் தொலைக்காட்சிக்கு இந்த விருது அண்மையில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி, கடந்த ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் சுமார் 3650 தடவை ஒளிபரப்பப்பட்டது. வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாமல் மக்களுக்குத் தேவையான, அவர்களை நல்வழிப்படுத்துகிற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறோம்.

  • புகைப்பழக்கம்.
  • குடிப்பழக்கம்,
  • வரதட்சிணை
  • போன்ற தீய வழக்கங்களுக்கு எதிரான மற்றும்
  • தூய்மைக்கு ஆதரவான

சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் மக்கள் தொலைக்காட்சிக்குக் கிடைத்துள்ள இந்த விருது, எங்கள் பணி மேலும் சிறக்க உதவும் என மக்கள் தொலைக்காட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தன

நன்றி: தினமணி


முட்டை தின்றால் மார்பக புற்றுநோய் வருவதை தடுக்கலாம்

April 5th, 2008 பகுப்புகள்: உடல்நலம், பெண்கள், மருத்துவம் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

உணவில் முட்டை உண்பதை அதிகரித்தால் அதிலுள்ள கோலைன் (choline) என்ற வேதிப்பொருளால் மார்பக புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூற்றினை 24% வரை குறைக்க முடியும் என ஆய்வொன்று கூறுகிறது. வட கரோலினா பல்கலை.யில் ஸ்டீவன்  செய்சல் (Steven H Zeisel, MD, PhD, University of North Carolina) தலைமையில் நிகழ்த்தப்பெற்ற இந்த கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வில் மார்பக புற்றுநோயின் வரவினை குறைப்பதற்கும் முட்டை உண்பதற்கும் இடையேயான இணைப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கோலைன் என்ற வேதிப்பொருள் செல்கள் இயல்பாக செயல்பட உதவுவதாக செய்சல் கூறினார். இந்த செயல்பாடு அனைத்து வயது,பாலின மக்களுக்கும் பொதுவானதாக இருப்பினும் பெண்களுக்கு, அதுவும் குழந்தை பெறக்கூடிய வயதுள்ளவர்களுக்கு, மிகவும் முக்கியமானதாக உள்ளது என்றும் அவர் கூறினார். ஒரு முட்டையில் 125.5 மி.கிராம் கோலைன் உள்ளது,இது ஒருநாளுக்கு ஒருவருக்கு தேவைப்படும் அளவில் கால்பங்காகும்.முட்டையின் மஞ்சள்கருவில் கிடைக்கிறது. கோலை கிடைக்கும் மற்ற உணவுப் பொருட்கள்: ஈரல், கோதுமை கருப்பகுதி, காலிபிளவர் பூ. கோலைன் பிறப்பு குறைகளை தவிர்ப்பதுடன் நினைவாற்றலை வளர்க்கவும் இதயநோய்களை தடுக்கவும் பயனாகிறது.

Eating eggs reduces breast cancer risk


போபால் விஷவாயுக் கசிவு: பாதிக்கப்பட்டவர்கள் தில்லியில் போராட்டம்

March 30th, 2008 பகுப்புகள்: இந்தியா, உடல்நலம், குழந்தைகள், சட்டம் - நீதி, சுகாதாரம், தொழில், பொருளாதாரம், போராட்டம், மரணம், வணிகம், விபத்து | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

இந்தியாவின் போபால் நகரில் கடந்த 1984ஆம் ஆண்டு யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், 24 ஆண்டுகளாகியும் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று போராடிவருகிறார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போபாலில் இருந்து தலைநகர் புதுடெல்லிக்கு 800 கி.மீ. பாதயாத்திரை நடத்தி, இவர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்கள்.

ஆனால் அப்போது பிரதமர் அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், அதை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரி, பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாதயாத்திரையாக வெள்ளிக்கிழமையன்று புதுடெல்லி வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. AFP: Bhopal tragedy survivors reach Delhi after 37-day protest march

2. Tehelka - India's Independent Weekly News Magazine: “Timeline: The Toxic Trail”

3. Indians Pressure Dow on Bhopal Cleanup - washingtonpost.com


‘மேற்கு வங்க முதன் மந்திரி புகை பிடித்தலை நிறுத்த வேண்டும்’ - அன்புமணி ராமதாஸ்

March 21st, 2008 பகுப்புகள்: அரசியல், இந்தியா, உடல்நலம், சட்டம் - நீதி | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

மத்திய மந்திரி அன்புமணி புகழ்பெற்ற நடிகர்களான அமிதாப் பச்சன், ஷாரூக் கான், ரஜினி, விஜய் ஆகியோரிடம் பிகைபிடித்தல் தொடர்பான திரைப்பட காட்சிகளை தவிர்க்குமாறு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார்.

புகை பிடிப்பது தடைசெய்யப்பட்ட இடங்களில் விதியை மீறினால், அபராதமாக 5000 ரூபாய் வசூலிக்கப்படும் என்னும் அறிவிப்பின் தொடர்ச்சியாக, ‘மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேப் பட்டாசார்யா உடபட எழுபது சதவீதத்துக்கும் மேற்பட்டோர் புகைபிடிக்கிறார்கள். அலுவலில், புகைத்தல் தடை விதிக்கப்பட்ட இடங்களில் முதன் மந்திரி உதாரணமாக விளங்கவேண்டும். அவரைப் போன்ற மூத்த தலைவருக்கு என்னிடமிருந்து ஆலோசனை தேவைப்படாது.’ என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு:

1. The Hindu : Front Page : Fine on organisations for persons smoking in office

2. DNA - India - Now, Buddhadeb in Ramadoss’ line of smoke - Daily News & Analysis

3. Ban or no ban, Buddha lights up in office - India - The Times of India


வில்லன் நடிகர் ரகுவரன் மரணம்

March 20th, 2008 பகுப்புகள்: உடல்நலம், மரணம் | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வில்லன், குணசித்திர வேடங்களில் 300 படங்களுக்கு மேல் நடித்த ரகு வரன் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60.
ரகுவரனுக்கு போதை பழக்கம் இருந்தது. கல்லீரல் பாதிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே உடல் நலம் பாதித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். டாக்டர்கள் மது அருந்ததக்கூடாது என எச்சரித்தனர். சிகிச்சைக்கு பின் உடல் தேறினார். தற்போது சில படங்களில் நடித்து வந்தார். மீண்டும் குடிப்பழக்கத்துக்கு ஆளானார்.

raguvaran002.jpg

இதையடுத்து உடல்நிலை மிகுந்த பாதிப்புக்க உள்ளானது. சேத்துப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்தார்.

ரகுவரன் உடல் அவரது வீட்டில் இன்று பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது. நாளை
இறுதிசடங்கு நடக்கிறது.


உடன்பிறந்தவர்களுடன் உறவு கொள்வது குற்றம் - செர்மனி சட்டம்

March 19th, 2008 பகுப்புகள்: உடல்நலம், உலகம், ஐரோப்பா, குற்றம், சட்டம் - நீதி, சமூகம், தீர்ப்பு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

Host unlimited photos at slide.com for FREE!‘நெருங்கிய உறவினர்களுடன் பாலுறுவு கொள்வதற்கு எதிரான சட்டம் இருப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது அல்ல’ என்று செருமனியின் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

இதனால், தன்னுடைய 23 வயது சகோதரியுடன் நான்கு குழந்தைகளைப் பெற்றிருக்கும் பாட்ரிக் என்பவருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் வாய்ப்பு வலுத்திருக்கிறது. ஏழு வருடங்களுக்கு முன்புதான் பேட்ரிக், தனது தங்கையை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு விவரங்களுக்கு: Incest Ruling: Sibling Sex Remains Prosecutable in Germany - International - SPIEGEL ONLINE - News: “Germany’s high court ruled on Thursday that laws against incest do not violate the constitution. The ruling means that a man in a high-profile national incest case will soon be sent to prison for siring four children with his sister.”