இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை நியமிக்க நேர்காணல்: தங்கபாலு
இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை நியமிக்க நேர்காணல்: தங்கபாலு
சென்னை, ஆக.26: இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க ஆகஸ்ட் 28, 29 தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு தெரிவித்துள்ளார்.
இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மதவாத சக்திகளின் தடைகளை உடைத்து நாட்டைக் காக்க இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் இளைஞர் காங்கிரஸ் அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய நேர்காணல் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ் அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க ஆகஸ்ட் 28, 29 தேதிகளில் மதியம் 2 மணிக்கு நேர்காணல் நடைபெறும்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஜிதேந்திர சிங், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வர் ஆகியோர் இந்த நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.
தேசிய உணர்வு கொண்ட 18 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தங்கபாலு அறிவித்துள்ளார்.
குறிச்சொற்கள்: தங்கபாலு, நிர்வாகி, நேர்காணல், காங்கிரஸ்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்