சிட்டுக்குருவி எண்ணிக்கையை கணக்கு எடுத்தல் அவசியம்: நிபுணர்கள் வலியுறுத்தல்
சிட்டுக்குருவி எண்ணிக்கையை கணக்கு எடுத்தல் அவசியம்: நிபுணர்கள் வலியுறுத்தல்
மும்பை, ஆக.22: சிட்டுக்குருவி நடமாட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே, அதன் எண்ணிக்கையை கணக்கு எடுப்பது அவசியம் என்று, பறவைகள் ஆய்வு நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிட்டுக்குருவி எண்ணிக்கை குறித்து கணக்கு எடுப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்துக்கு தாங்கள் பரிந்துரை செய்துள்ளதாக, பாம்பே தேசிய வரலாற்று சமூகத்தின் விஞ்ஞானி கிரிஷ் ஜெதர் தெரிவித்தார். பறவைகளின் நலம் குறித்து வன உயிரி ஆர்வலர்கள் பெரிய அளவில் கவலைப்படுவதில்லை. பறவைகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்காததே சிட்டுக்குருவி போன்ற பறவை இனத்தை நாம் இழக்க முக்கியக் காரணமாக அமைந்துள்ளது என்று குற்றம்சாட்டினார் நேச்சர் இந்தியா என்ற அமைப்பின் நிறுவனர் முகமது.
மாறிவரும் சுற்றுச்சூழலால் பறவைகள் இனம் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது. சில பறவை இனம் முற்றிலும் அழிந்து போகும் நிலையில் உள்ளது. செல்போன் தொலை தொடர்புக்கு உதவும் மின் காந்த அலைகளாலும் பறவைகள் அழிந்து வருவதாக அண்மையில் ஆய்வு உறுதிபடுத்தியது.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்