தலித்-முஸ்லிம் ஒற்றுமையை யாராலும் பிரிக்க முடியாது: திருமாவளவன்
தலித்-முஸ்லிம் ஒற்றுமையை யாராலும் பிரிக்க முடியாது: திருமாவளவன்
சென்னை, ஆக. 19: “தலித்கள் - முஸ்லிம்கள் இடையே பிரச்னையை ஏற்படுத்த சில அமைப்புகள் முயற்சிக்கின்றன. ஆனால் தலித் - முஸ்லிம் ஒற்றுமையை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
இது குறித்து சென்னையில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கட்சி விழாவில் பங்கேற்பதற்காக கடந்த 17-ம் தேதி சென்னை வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களுக்கும், கல்பாக்கம் அருகில் உள்ள புதுப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த விரும்பத் தகாத, வேதனை அளிக்கும் நிகழ்வுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இது குறித்து கள ஆய்வு மேற்கொண்டு தவறு செய்த கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் இதுவரை விடுதலைச் சிறுத்தைகளுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பிரச்னை நடைபெறவில்லை. தலித் மக்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் அவர்களுக்கு பக்கபலமாக முஸ்லிம்கள் இருந்துவருகின்றனர்.
தமிழகத்தில் எங்களது ஒற்றுமையை விரும்பாத சில அமைப்புகள் இப் பிரச்னையை ஊதிப் பெரிதாக்கி உள்ளனர். ஆனால் நாங்கள் ஒற்றுமையாக இருக்க உறுதி ஏற்கிறோம்.
புதுப்பட்டினத்தில் பிரச்னை நடைபெற்ற இடத்தில் போதுமான போலீஸ் பாதுகாப்பு இல்லை. போலீஸôரின் அஜாக்கிரதை, முன் எச்சரிக்கை நடவடிக்கை இல்லாதது, போலீஸôரின் தவறான அணுகுமுறை ஆகியவையே இப் பிரச்னை பெரிய அளவில் ஏற்பட காரணமாக இருந்தன என்றார் திருமாவளவன்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் ஹைதர் அலி, தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் உமர் பரூக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
குறிச்சொற்கள்: தலித், திருமாவளவன், முஸ்லிம், ஒற்றுமைஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்