ஓய்வு காலத்தை கழிக்க இந்தியாவுக்கு வருமாறு முஷாரபுக்கு சீக்கியர் அழைப்பு
ஓய்வு காலத்தை கழிக்க இந்தியாவுக்கு வருமாறு முஷாரபுக்கு சீக்கியர் அழைப்பு
புதுதில்லி, ஆக.19: ஓய்வு காலத்தை கழிக்க வருமாறு முஷாரபுக்கு இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர் அழைப்பு விடுத்திருக்கிறார்.
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலதேவ் சிங். முஷாரப் தனது ஓய்வுக்காலத்தை கழிக்க இந்தியாவுக்கு வர வேண்டும் என பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.
முஷாரபுக்கு 350 ஏக்கர் நிலம், நல்ல குதிரைகள், சொகுசுக் கார், ஆடம்பரமான மாளிகை ஆகியவற்றைத் தரவும் அவர் முன்வந்திருக்கிறார்.
முஷாரபும் இந்தியாவில் பிறந்தவர் என்பதால் தாம் இதைத் தர முன்வந்திருப்பதாகக் கூறும் பலதேவ் சிங், பாகிஸ்தானில் முஷாரபுக்கு மதிப்புக் குறைந்திருந்தாலும், இந்தியர்கள் அவர் மீது அன்பு வைத்திருக்கிறார்கள் என்றார்.
குறிச்சொற்கள்: சீக்கியர், முஷாரப், ஓய்வு, இந்தியா, காலம், அழைப்புஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்