நேரு கொள்கைக்கு நேர்மாறாக செயல்படும் மத்திய அரசு
நேரு கொள்கைக்கு நேர்மாறாக செயல்படும் மத்திய அரசு
சிவகங்கை, ஆக. 15: நேருவின் கொள்கைகளுக்கு நேர்மாறாக மத்திய அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறினார்.
சிவகங்கையில் வெள்ளிக்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியது:
நாடு சுதந்திரம் அடைந்து 61 ஆண்டுகள் கடந்து விட்டன. சுதந்திர இந்தியாவில் ஜவஹர்லால் நேரு கட்டிக்காப்பாற்றி வந்த நடுநிலைக்கொள்கை, பொதுத்துறை கொள்கை ஆகியவற்றுக்கு நேர்மாறாக மத்திய அரசு செயல்படுகிறது.
மதவாத அரசு ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற காரணத்துக்காக காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு கொடுத்தோம். குறைந்தபட்ச செயல் திட்டத்தில் உள்ள அம்சங்களை செயல்படுத்த நாங்கள் மிகவும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. அணுசக்தி ஒப்பந்தத்தை எங்கள் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றத் துணிந்தனர். இதுபோன்ற காரணங்களால் மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றோம்.
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி ரூ. 2,45,000 கோடியை மத்திய அரசு 4 தனியார் கம்பெனிகளில் முதலீடு செய்ய இருந்ததை கடுமையாக எதிர்த்தோம்.
நாங்கள் வெளியேறிய பிறகு வைப்பு நிதியை தனியாரிடம் துணிந்து ஒப்படைத்துவிட்டனர். மக்களைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் ஆட்சி நடத்துகிறது காங்கிரஸ்.
மக்கள் நலனை முன்னிட்டு நாங்கள் வாபஸ் பெற்றோம். நாடு முழுவதும் இனி காங்கிரஸ், பாரதிய ஜனதா அல்லாத அணி அமைக்க முயற்சி செய்வோம் என்றார்.
குறிச்சொற்கள்: நேரு, மத்திய அரசு, கொள்கைஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்