குழந்தைகள் நல அகில இந்திய மருத்துவர்கள் மாநாடு
குழந்தைகள் நல அகில இந்திய மருத்துவர்கள் மாநாடு
குழந்தைகள் நல மருத்துவர்கள் மாநாடு மதுரையில் 3 நாட்கள் நடைபெறுகிறது.
2008 ம் ஆண்டிற்கான குழந்தைகள் நல மருத்துவர்கள் மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாடு வருகிற 8 ம் தேதி தொடங்கி 10 ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தொற்று நோய், புதிய சவால்கள், குறைந்த வாய்ப்புகள் மற்றும் டெங்கு, மலேரியா, வயிற்று போக்கு உள்ளி நோய்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது. மாநாட்டையொட்டி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவிலிகளுக்கான பச்சிளங்குழந்தைகள் உயிர் காக்கும் பயிற்சி 7 ம் தேதி நடக்கிறது.
இந்த மாநாட்டில் இத்துறையில் தலைசிறந்த வல்லுனர்கள் அம்பேத்கார், ரோஹித் அகர்வால், உட்பட ஏராளமானோர் சிறப்புரையாற்றுகின்றனர். 8 ம் தேதி காலை 7 மணிக்கு குடும்ப நலத்துறை செயலாளர் மாநாட்டை துவக்கி வைக்கிறார். இதில் மாவட்ட கலெக்டர் ஜவகர், மருத்துவமனை டீன் சிவக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை அரசு மருத்துவமனை குழந்தைகள் நல பிரிவு துறை தலைவர் டாக்டர் வசந்தாகுமாரி மற்றும் மருத்துவர் மகாலிங்கம், ஒருங்கிணைப்பாளர் சண்முக சுந்தரம், அமுதா ராஜேஸ்வரி உள்ளிட்ட மருத்துவர்கள் செய்து வருகிறார்கள்
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்