இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்கு தடை தொடர்கிறது: தீர்ப்பாய ஆணைக்கு உச்சநீதிமன்றம் தடை | சற்றுமுன்...




இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்கு தடை தொடர்கிறது: தீர்ப்பாய ஆணைக்கு உச்சநீதிமன்றம் தடை

இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்கு தடை தொடர்கிறது: தீர்ப்பாய ஆணைக்கு உச்சநீதிமன்றம் தடை

புதுதில்லி, ஆக. 6: “சிமி’ எனப்படும் இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்கு தடையை நீக்கி சிறப்புத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

2001-ம் ஆண்டில் இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வந்தது. தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து கடந்த பிப்ரவரி 7-ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து தில்லியில் உள்ள சிறப்பு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை நீதிபதி கீதா மித்தல் விசாரித்தார்.

சிமி இயக்கத்தின் மீது தடையை நீட்டிப்பதற்கு புதிய ஆதாரம் ஏதுமில்லை என்று அவர் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு கூறினார்.

இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை மேல் முறையீடு செய்தது. தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், மத்திய அரசின் மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது. சிறப்புத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தது.

3 வாரங்களில் பதில் அளிக்குமாறு சிமி இயக்கத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
 

குறிச்சொற்கள்: , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்