சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் சினிமா: கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு | சற்றுமுன்...




சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் சினிமா: கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு

சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் சினிமா: கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு

சென்னை, ஆக. 4 : சுதந்திர தினத்தன்று தொலைக்காட்சியில் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைத் தவிர்க்குமாறு திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் சுதந்திர தினத்தை கொச்சைப்படுத்துகிறார்கள். கூத்தும், கும்மாளமும், பேட்டி என்ற பெயரில் நடிகர், நடிகைகள் தங்களின் சுயபுராணத்தைக் கூறுவதும் அருவருப்பாக உள்ளது.

வரும் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று காலை முதல் மாலை வரை சுதந்திரத்தின் அருமை, பெருமைகள், தியாகிகளின் வீர வரலாறு, காட்சிகளாக, ஆடல், பாடல்களாக, எழுச்சி உரைகளாக, கதை, கவிதை, பட்டிமன்றங்களாக ஒளிபரப்ப வேண்டும்.

இதைத்தான் மாணவர்களாகிய நாங்கள் எதிர்பார்க்கிறோம் என, தங்கள் கையெழுத்துடன் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்