கிராமப்புறங்களில் இருந்துதான் சிறந்த தலைவர்கள் உருவாகி இருக்கிறார்கள்: தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்
கிராமப்புறங்களில் இருந்துதான் சிறந்த தலைவர்கள் உருவாகி இருக்கிறார்கள்: தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்
திண்டுக்கல், ஆக. 4: மிகச் சிறந்த தலைவர்களும், விஞ்ஞானிகளும் கிராமப்புறங்களில் இருந்துதான் உருவாகி இருக்கிறார்கள் என தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் தினமணி நாளிதழ் மற்றும் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற “சிகரத்தை வெல்வோம்’ நிகழ்ச்சியில் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் பேசியதாவது:
கிராமப்புற மாணவர்கள் எதிலும் சளைத்தவர்களோ, பின்தங்கியவர்களோ அல்ல. பல முக்கியத் தலைவர்களும், அறிஞர்களும் கிராமப்புறங்களில் இருந்துதான் உருவாகி உள்ளனர்.
நகர்ப்புற மாணவர்களுக்குக் கிடைக்கும் சில வாய்ப்புகள் கிராமங்களில் கிடைக்காமல் போவதால், அவர்களுக்கு அது ஒரு பலவீனமாக அமைந்துவிடக் கூடாதே என்பதற்காகத்தான் சிறு நகரங்களில் தினமணி இத்தகைய வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை நடத்துகிறது.
பிளஸ் 2 தேர்வுகளை எழுதிய மாணவர்களிடம் மட்டும்தான் எத்தனை மதிப்பெண்கள் என்ற கேள்வி எழுப்பப்படும். மாணவர்களின் திறமைக்கும், அறிவுக்கும் மதிப்பெண்கள் மட்டுமே அடிப்படையாக இல்லை என்றாலும், தற்போதைய காலக்கட்டத்தில் மதிப்பெண்கள் மட்டுமே மாணவ, மாணவிகளின் எதிர்கால படிப்பையும், வேலைவாய்ப்பையும் நிர்ணயிப்பதாக அமைந்து விடுகிறது. எனவேதான், மதிப்பெண்களை கூடுதலாகப் பெறுவதற்கு இந்த நிகழ்ச்சி உதவும்.
மாணவ சமுதாயம் மற்ற விஷயங்களில் வேண்டுமானால் குசேலனாக இருக்கலாம். ஆனால், படிப்பில் மட்டும் குபேரனாக இருங்கள். நீங்கள் வெற்றிபெற்று எதிர்காலத்தில் நல்ல நிலைமையை அடைய வேண்டும். அப்படி அடையும்போது, பாரதியாரின் அறிவுரையை மறந்துவிடாமல் தாய்மொழி தமிழையும், தாய்நாட்டையும் வளம்பெறச் செய்யுங்கள். உலகம் முழுவதும் தமிழரின் பெருமையை நிலைநாட்ட முன்வாருங்கள் எனக் கேட்டுக் கொண்டார் கே. வைத்தியநாதன்.
மேலும் விரிவான செய்திக்கு
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080804141246&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&ndate=8/5/2008&dName=No+Title&Dist=0
குறிச்சொற்கள்: தலைவர், தினமணி, நகரம், மதிப்பெண், வைத்தியநாதன், ஆசிரியர், கிராமம்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்