நுரையீரல் பாதிப்பு: தீவிர கண்காணிப்பில் அர்ஜுன் சிங்- எய்ம்ஸ் தகவல் | சற்றுமுன்...




நுரையீரல் பாதிப்பு: தீவிர கண்காணிப்பில் அர்ஜுன் சிங்- எய்ம்ஸ் தகவல்

நுரையீரல் பாதிப்பு: தீவிர கண்காணிப்பில் அர்ஜுன் சிங்- எய்ம்ஸ் தகவல்

புதுதில்லி, ஆக.2: உடல் நலக்குறைவால் கடந்த 30-ம் தேதி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங், நுரையீரல் நோய் பாதிப்பால் அவதிப்படுவதாக டாக்டர்கள் சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

அவரது உடல்நிலை சீராக இருந்தாலும், நுரையீரல் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளதால் சுவாசிப்பதில் அவர் மிகவும் சிரமப்படுவதாக டாக்டர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும் மூத்த டாக்டர்கள் குழுவின் மேற்பார்வையில் அவர் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக எய்ம்ஸ் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்