வெடிகுண்டு மிரட்டல்: இ - மெயில் அனுப்பிய கணக்காளர் கைது
வெடிகுண்டு மிரட்டல்: இ - மெயில் அனுப்பிய கணக்காளர் கைது
மும்பை, ஆக. 1: வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ - மெயில் அனுப்பிய பஞ்சாப் கணக்காளர் ஒருவரை மும்பை போலீஸôர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கணக்காளர் தீபக் பாண்டே பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்தவர்.
ஆமதாபாத் தொடர் குண்டு வெடிப்பை அடுத்து தொடர்ந்து பல இடங்களில் குண்டு வெடிக்கும் என்று தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு இ - மெயில் மிரட்டல் வந்தது. இது குறித்து மும்பை போலீஸôர் விசாரித்தனர். இ - மெயில் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று போலீஸôர் கண்டுபிடித்தபோது லூதியானாவைச் சேர்ந்த தீபக் என்பவர் அனுப்பியது தெரியவந்தது. வதந்தியைப் பரப்புவதற்காக இவர் இ - மெயில் மிரட்டல் விடுத்தாரா அல்லது உண்மையிலேயே இவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்பது விசாரணையில் தெரிய வரும் என்று மும்பை குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் தேபன் பார்த்தி கூறினார்.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்