லத்தீன் அமெரிக்க, மேற்கிந்திய நாடுகளில் வறுமையின் பிடியில் மேலும் 1.60 கோடி பேர்!
லத்தீன் அமெரிக்க, மேற்கிந்திய நாடுகளில் வறுமையின் பிடியில் மேலும் 1.60 கோடி பேர்!
நியூயார்க், ஜூலை 26: உலக பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால் லத்தீன் அமெரிக்க மற்றும் மேற்கிந்திய நாடுகளைச் சேர்ந்த 1 கோடியே 60 லட்சம் பேர் வறுமையின் கோரப்பிடிக்குத் தள்ளப்படும் நிலையில் உள்ளதாக, ஐ.நா. நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கச் சுகாதார அமைப்பின் இரு நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட ஐக்கிய நாட்டு சபையின் 13 அமைப்புகளைச் சேர்ந்த பிராந்திய இயக்குநர்
கள் இந்த எச்சரிக்கையை விடுத்தனர்.
அத்துடன், லத்தீன் அமெரிக்க மற்றும் மேற்கிந்திய நாடுகளில் ஐக்கிய நாட்டு சபையின் புத்தாயிரம் மேம்பாட்டு இலக்கை எட்டுவதற்காக இணைந்து செயல்படவும் அவர்கள் உறுதி அளித்தனர்.
உலக நாடுகள் சந்தித்து வரும் பல்வேறு சமூக மற்றும் பொருளாதாரச் சிக்கல்களுக்கு 2015-ம் ஆண்டுக்குள் தீர்வு காண்பதென்பது ஐக்கிய நாட்டு சபையின் புத்தாயிரம் மேம்பாட்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சமமாகப் பயனடையவில்லை: இந்த இலக்கை எட்ட லத்தீன் அமெரிக்க மற்றும் மேற்கிந்திய நாடுகள் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
எனினும், இதன் மூலம் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் சமமாகப் பயனடையவில்லை என்றார் அமெரிக்கச் சுகாதார அமைப்பின் இயக்குநர் மிர்தா ரோசஸ் பெரியகோ. லத்தீன் அமெரிக்க மற்றும் மேற்கிந்திய நாடுகளில் தற்போது 19 கோடி பேர் வறுமை நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதில் 7 கோடி பேர் வறுமையின் கோரப்பிடியில் வாழ்கின்றனர்.
இதுபோன்ற நிலையில் உலக பொருளாதாரத்தில் 2007-ம் ஆண்டின் மத்தியில் இருந்து நிலவி வரும் அசாதாரண நிலை காரணமாக, மேற்கண்ட பகுதிகளில் மேலும் 1 கோடியே 60 லட்சம் பேர் வறுமையின் கோரப்பிடிக்குத் தள்ளப்படும் நிலையில் உள்ளனர் என்று மிர்தா ரோசஸýம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்