இந்திய எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம் | சற்றுமுன்...




இந்திய எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம்

இந்திய எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம்

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா அருகே இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 15 பேர் இன்று நுழைந்தனர். மேலும், அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று மாலை 3.30 மணியளவில் குப்வாரா அருகே அவர்கள் எல்லைக் கோட்டை தாண்டி இந்தியப் பகுதிக்குள் நுழைந்தனர். அங்கு நௌகான் செக்டரில் உள்ள கண்காணிப்பு முகாமை இந்திய ராணுவத்தினர் காலி செய்ய வேண்டும் என்று கோரினர். மேலும், திடீரென இந்திய வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 22வது ராஜ்புத் படைப்பிரிவைச் சேர்ந்த ஒரு வீரர் உயிரிழந்தார்.

இதையடுத்து, இந்திய வீரர்களும் திருப்பிச் சுட்டனர். இந்த மோதல் சில மணிநேரம் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பகுதிக்குள் 15 பேர் கொண்ட குழுவாக பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்திருப்பது, அரசியல் மற்றும் ராணுவ வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

குறிச்சொற்கள்: , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்