அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற அமெரிக்க இந்தியர்கள் தீவிரம்
அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற அமெரிக்க இந்தியர்கள் தீவிரம்
வாஷிங்டன், ஜூலை 27: இந்தியா-அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதற்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் அரசு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற ஆதரவு திரட்டி வருகின்றனர்.
ஹைட் சட்டத்தை உருவாக்கியதில் பெரும் பங்கு இங்குள்ள அமெரிக்கவாழ் இந்தியர்களையே சாரும். தற்போது இந்த 123 ஒப்பந்தம் இரு சபைகளிலும் நிறைவேறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் வாஷிங்டனில் திங்கள்கிழமை கூடி விவாதிக்க உள்ளதாக அமெரிக்க-இந்திய கூட்டமைப்பின் தலைவர் அசோக் மாகோ தெரிவித்தார். இந்த அமைப்பு டல்லாûஸ தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.
அமெரிக்க பிரதிநிதிகள் சபை கூட்டம் செப்டம்பர் 26-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே செனட் கூட்டமும் கூடலாம் என தெரிகிறது.
பொதுவாக பிரதிநிதிகள் சபைக் கூட்டம் அக்டோபர் மாதம் கூடும். ஆனால் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 4-ம் தேதி நடைபெற உள்ளதால் செப்டம்பரில் கூடுகிறது.
அதிபர் தேர்தலில் போட்டியிடும் பாரக் ஒபாமா மற்றும் மெக்கைய்ன் ஆகிய இருவரும் இந்த அணுசக்தி ஒப்பந்தத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளதால் இதை நிறைவேற்றுவதில் எவ்வித சிரமமும் இருக்காது என்று தெரிகிறது.
குறிச்சொற்கள்: ஒப்பந்த, ஆதரவு, இந்தியர், அணு, அமெரிக்காஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்