பிரதமர் விருந்தில் தயாநிதி, கனிமொழி | சற்றுமுன்...




பிரதமர் விருந்தில் தயாநிதி, கனிமொழி

பிரதமர் விருந்தில் தயாநிதி, கனிமொழி

பிரதமர் அளித்த விருந்தில் தயாநிதி மாறன், கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளவுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரதமர் மன்மோகன் சிங் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து எம்.பி.க்களும் விருந்து அளித்தார்.

இந்த விருந்தில், பாஜக எம்.பி. பிரிஜ்பூஷன் சரண் சிங் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

சமாஜவாதி கட்சியில் இணைந்த அவரை, அக்கட்சியின் பொதுச் செயலர் அமர்சிங் அழைத்து வந்தார்.

இறுதியாக, தனது ஆதரவை உறுதிப்படுத்திய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் சிபு சோரன், கட்சியின் 4 எம்.பி.க்களுடனும் விருந்தில் பங்கேற்றார்.

அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த சமாஜவாதி எம்.பி. ராஜ் பப்பர் விருந்தில் பங்கேற்றார்.

இதைத் தவிர, எஸ்.எஸ். பங்காரப்பா, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் முப்தி முகமது சயீது, அசாம் முதல்வர் தருண் கோகோய், ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விருந்தில் பங்கேற்றனர்.
 
 

குறிச்சொற்கள்: , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்