சென்னை : உருட்டு கட்டைகளுடன் பொதுமக்கள் ரோந்து: குடியிருப்பு காவலாளி வேடத்தில் போலீஸôர்
உருட்டு கட்டைகளுடன் பொதுமக்கள் ரோந்து: குடியிருப்பு காவலாளி வேடத்தில் போலீஸôர்
சென்னை வடபழனி அருகே உள்ள புதூர் மற்றும் ஒட்டகபாளையத்தில் பொதுமக்கள் இரவில் விடிய விடிய உருட்டு கட்டைகளுடன் ரோந்து சுற்றி வருகின்றனர்.
சைக்கோ மனிதன் பீதியால், அவர்கள் உருட்டு கட்டைகளுடன் வலம் வருவதாகப் போலீஸôர் தெரிவித்தனர்.
அதேநேரத்தில், அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிகளாகவும் போலீஸôர் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை வடபழனி, கே.கே.நகர் பகுதிகளில் தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிகள், குப்பை பொறுக்கும் நபர்கள் கொலை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தல், தீ வைத்து எரித்தல் என சுமார் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
இதனால் வடபழனி மற்றும் கே.கே.நகர், அசோக் நகர் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே ஒருவித பீதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புதூர் மற்றும் ஒட்டகபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், இரவு நேரங்களில் உருட்டு கட்டைகளுடன் வலம் வருகின்றனர். அவ்வழியே செல்பவர்களும் மிகுந்த அச்சத்துடனே சென்று வருகின்றனர்.
காவலாளி வேடத்தில்…: காவலாளிகள் குறி வைத்து கொல்லப்பட்டு வருவதால், போலீஸôரே நேராக அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிகளாக மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாதிரி சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீஸôர் காவலாளிகளாக இரவு ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் குப்பை பொறுக்கும் நபர்களாகவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போலவும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகப் போலீஸôர் தெரிவிக்கின்றனர்.
அசோக்நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கியிருந்த நேபாள இளைஞர்கள் 3 பேரை பிடித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.
குறிச்சொற்கள்: பொதுமக்கள், ரோந்து, வேடம் போலீஸ், காவலாளி, குடியிருப்பு, உருட்டு கட்டைஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்