பூடானின் முதல் பிரதமர் நாளை இந்தியா வருகை | சற்றுமுன்...




பூடானின் முதல் பிரதமர் நாளை இந்தியா வருகை

பூடானின் முதல் பிரதமர் நாளை இந்தியா வருகை

பூடான் நாட்டின் முதல் பிரதமர் ஜிக்மி ஒய் தின்லே நான்கு நாள்கள் பயணமாக திங்கள்கிழமை தில்லி வருகிறார்.

கடந்த ஏப்ரலில் பதவியேற்ற அவர் தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வருகிறார். அவருடன் அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட 42 பேர் அடங்கிய உயர்நிலைக் குழுவும் வருகிறது.

குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை ஜிக்மி சந்தித்துப் பேசுகிறார்.

பூடான் பிரதமரின் இந்திய பயணத்தின்போது மின்சக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்