பருத்தி வீரன் படத்துக்கு 6 பிலிம்பேர் விருதுகள்
பருத்தி வீரன் படத்துக்கு 6 பிலிம்பேர் விருதுகள்
அமீர் இயக்கிய “பருத்தி வீரன்’ படத்துக்கு 6 பிலிம்பேர் விருதுகள் கிடைத்துள்ளன. நடிகர் சிவகுமார், நடிகை ஜெயப்ரதா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
2007-ம் ஆண்டின் சிறந்த தென்னிந்தியத் திரைப்படங்களுக்கான பிலிம்பேர் விருது வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த 55-வது விருது விழாவில் “பருத்தி வீரன்’ சிறந்த திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
படத்தின் இயக்குநர் அமீர் (சிறந்த இயக்குநர்), படத்தில் நடித்த கார்த்தி (சிறந்த நடிகர்), ப்ரியாமணி (சிறந்த நடிகை), சரவணன் (சிறந்த குணசித்திர நடிகர்), சுஜாதா (சிறந்த குணசித்திர நடிகை) ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் “பருத்தி வீரன்’ படத்துக்கு 6 விருதுகள் கிடைத்தன.
“சிவாஜி’ படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் -சிறந்த இசையமைப்பாளர் விருதையும், கே.வி.ஆனந்த் -சிறந்த ஒளிப்பதிவாளர் விருதையும் பெற்றனர். “உன்னாலே உன்னாலே’ படத்துக்காக பாடலாசிரியர் பா.விஜய், “அழகிய தமிழ்மகன்’ படத்துக்காக நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித், “மொழி’ படத்துக்காக பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், “கிரீடம்’ படத்துக்காக பின்னணிப் பாடகி சாதனா சர்கம் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்