ஆதரவை வாபஸ் பெற்றது இடதுசாரி …
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனை காரணமாக மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக இடதுசாரி இன்று முறைப்படி அறிவித்தது. டெல்லியில் இன்று திரளான செய்தியாளர்கள் கூட்டத்தில் இதனை அறிவித்த மார்க்சிஸ்த் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், ஆதரவை வாபஸ் பெறும் கடிதத்தை நாளை ஜனாதிபதியை நேரில் சந்தித்து முறைப்படி அளிக்க இருப்பதாகவும், இதற்காக ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் நேரம் ஒதுக்குமாறு கேட்டுள்ளதாகவும் கூறினார்.
ஜப்பான் செல்லும் வழியில் நேற்று விமானத்தில் பேட்டி அளித்த பிரதமர் மன்மோகன் சிங், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பாதுகாப்பு அம்சங்களை இறுதி செய்வதற்காக சர்வதேச அணுசக்தி முகமையை அரசு விரைவில் அணுக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
அவரது இந்த பேட்டி இடதுசாரிகளை மிகுந்த கோபத்திற்குள்ளாக்கியது.அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஐமுகூ - இடதுசாரிகளின் ஒருங்கிணைப்புகூட்டத்தை கூட்டி விவாதிக்கலாம் என இடதுசாரிகளுக்கு பிரணாப் முகர்ஜி நேற்று கடிதம் அளித்திருந்த நிலையில், பிரதமரின் மேற்கூறிய பேட்டி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை அர்த்தமில்லாமல் ஆக்கிவிட்டதாக கருதியே இடதுசாரிகள் இன்று ஆதரவை விலக்கிக் கொள்ளும் முடிவை மேற்கொண்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசின் ஸ்திரத்தன்மை பாதிக்காது - மன்மோகன்
இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்றதால் தமது அரசின் ஸ்திரத்தன்மை பாதிக்காது என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
Source: வெள்ளிநிலா நீயுஸ்
குறிச்சொல் ஏதும் இல்லை.இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்