ரயில்வே பணிக்கு மதராஸா மாணவர்கள்!
மதரசா பட்டப் படிப்பு முடித்த இஸ்லாமிய மாண வர்கள் ரயில்வே துறை வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியு டையவர்கள் என லாலு பிரசாத் யாதவ் தெரிவித் துள்ளார்.
இஸ்லாமிய இளைஞர் கள் “மதரசா’ என்ற அரபிமொழி பட்டப் படிப்பை பாரம்பரியமாக கற்று வருகின்றனர். தற்போது இந்தப் பட்டம் பெற்றவர்கள் ரயில்வே துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், அதற்கான அரசு துறை சார்பான அனைத்து பணிகளும் சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்பட உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் நேற்று தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தகவல் அளித்துள்ளார்.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் இன மக்களின் ஓட்டுவங்கியை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இழக்காமல் பாதுகாக்கும் வண்ணம் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
இதன்படி கடந்த ஆண்டு ராஜேந்தர் சர்ச்சார் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு சிறுபான்மையினர்கள் அரசு சார்பான துறைகளில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான வழிவகைகளை ஆராய்ந்தது. மேலும் இந்த ஆண்டின் துவக்கத்தில் லாலு பிரசாத் யாதவும், ரயில்வே துறை களில் முஸ்லிம்கள் அதிகளவில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவோம் என அறிவித்து இருந்தார்.
அதன்படி தற்போது மத்திய அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை உயர்த்தும் நடவடிக்கையால் வேலை பெறுவோரின் எண்ணிக்கை 5 சதவீதம் கணிசமாக உயரும் வாய்ப் புள்ளது.
குறிச்சொல் ஏதும் இல்லை.இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்