வெளிநாட்டில் பொலிவிழந்து வரும் எல்ஐசி
வெளிநாட்டில் பொலிவிழந்து வரும் எல்ஐசி
காப்பீட்டுத்துறையில் இந்தியாவில் முன்னணியில் விளங்கிவரும் அரசுத் துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) சமீப ஆண்டுகளாக வெளிநாடுகளில் வர்த்தகத்தை இழந்து வருகிறது.
வெளிநாடுகளில் எல்ஐசி-யின் ஆண்டு வர்த்தகம் தொடர்ந்து குறைந்து வருவதிலிருந்தே இதை உணர முடியும்.
கடந்த மூன்று ஆண்டுகளில் எல்ஐசியின் வெளிநாட்டு வர்த்தகம் 12 சதவீத அளவுக்கு சரிந்துள்ளது.
2004-05ம் நிதி ஆண்டில் முதல் பிரீமியமாக வசூலான தொகை ரூ. 123.41 கோடி. இது அடுத்த ஆண்டு ரூ. 120.8 கோடியாகவும் கடந்த ஆண்டு 2007 மார்ச்சில் 108.67 கோடியாகவும் குறைந்துள்ளது.
வெளிநாட்டு நிறுவன போட்டிகளைச் சமாளிக்கத் தவறியதால் எல்ஐசி வருவாய் குறைந்து வருகிறது. மேலும் புதிய வாடிக்கையாளரை ஈர்ப்பதற்கு எல்ஐசி தவறிவிட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல தனிநபர் காப்பீட்டுத் திட்டங்களும் போதிய அளவுக்கு விற்பனையாகவில்லை. 2004-05-ம் ஆண்டில் பஹ்ரைனில் தனிநபர் பாலிசி விற்பனை குறைந்துள்ளது. இருப்பினும் பழைய பாலிசிகளை புதுப்பிப்பது உள்ளிட்டவை அதிகரித்துள்ளன. முதல் பிரீமியம் குறைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எல்ஐசி. ஆசிய நாடுகளில் கிளைகளைத் தொடங்க திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் எல்ஐசி ஈடுபட்டுள்ளது.
இது தவிர, சவூதி அரேபியாவில் வர்த்தகத்தை மேம்படுத்த சவூதி இந்திய கூட்டுறவு நிறுவனத்துடன் கூட்டு வணிகம் செய்ய திட்டமிட்டு அதற்கான சான்றிதழையும் பெற்றுள்ளது எல்ஐசி. தற்போது எல்ஐசி நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ஏமன், நேபாளம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் எல்ஐசி நிறுவனத்துக்கு 2007-08-ம் நிதி ஆண்டில் முதல் பிரீமியமாக வசூலான தொகை ரூ. 59,182 கோடி.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்