காடுவெட்டி குரு அதிகாலையில் கைது
காடுவெட்டி குரு அதிகாலையில் கைது
வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி கிராமத்துக்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் சென்று குருவை கைது செய்தனர்.
காடுவெட்டியைச் சேர்ந்த குரு வன்னியர் சங்க மாநிலத் தலைவராக உள்ளார். கடந்த ஏப்ரல் 28-ம் தேதி, அதிமுக பாசறையைத் தொடங்கவுள்ளதாகக் கூறிய காடுவெட்டியைச் சேர்ந்த ஜெ. குணசேகரன் (33) என்பவரை குருவின் ஆதரவாளர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில், குரு உள்பட 4 பேர் மீது மீன்சுருட்டி போலீஸôர் மே 1-ம் தேதி வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
குரு கைது செய்யப்பட்டதையொட்டி வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க கடலூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்