July 1st, 2008 | பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, சென்னை, தமிழ்நாடு, போக்குவரத்து, போராட்டம் | தொகுப்பாளர்: ✪சிந்தாநதி |
தமிழ்கத்தில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு காரணமாக இன்று காலை முதல் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளதால் பேருந்துகள் உட்பட வாகனங்களும் இயங்க இயலாத கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 3000க்கு மேற்பட்ட தனியார் பேருந்துகளும் 20 சதவீத அரசுப் பேருந்துகளும் நிறுத்தப் பட்டு விட்டன.
நிலைமை சீராகும்… திரிபாதி நம்பிக்கை
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து இன்று நள்ளிரவு முதல் அகில இந்திய அளவில் லாரிகள் ஸ்டிரைக் ஆரம்பமாகிறது. இதற்கு முன்னதாக பெட்ரோல் தட்டுப் பாடு காரணமாக இன்றே இந்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நிலைமை சீராகாத பட்சம் நாளை தமிழ்கத்தில் எந்த வாகனமும் சாலையில் காணப்படாது.
இதற்கிடையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக தலைமை செயலாளர் திரிபாதி தமிழகத்தில் டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு இன்று நள்ளிவுக்குள் சகஜ நிலைக்கு திரும்பி விடும் என்று தெரிவித்துள்ளார்.
குறிச்சொற்கள்:
டீசல்,
பெட்ரோல்,
ஸ்டிரைக்,
diesel,
petrol
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்