இலங்கை ராணுவத்துக்கு இந்தியா பெரிய அளவில் உதவுகிறது: இலங்கை ராணுவத் தளபதி | சற்றுமுன்...




இலங்கை ராணுவத்துக்கு இந்தியா பெரிய அளவில் உதவுகிறது: இலங்கை ராணுவத் தளபதி

இலங்கை ராணுவத்துக்கு இந்தியா பெரிய அளவில் உதவுகிறது: இலங்கை ராணுவத் தளபதி

இலங்கை ராணுவத்துக்கு இந்தியா பெரிய அளவில் உதவுகிறது என்று இலங்கை ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா கூறினார்.

தார்மீக அடிப்படையிலும் அரசியல் ரீதியாகவும் இலங்கைக்கு இந்தியா ஆதரவு தருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இலங்கை ராணுவ அதிகாரிகள் 800 பேர் இந்தியாவில் இலவசமாக பயிற்சி பெறுகின்றனர். இந்தியா தரும் ஆதரவு மிகப் பெரியது என்று, கொழும்பில் உள்ள வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களிடம் அவர் பேசினார்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், கொழும்புக்கு சமீபத்தில் வந்தார். சீனா, பாகிஸ்தானிடம் ஆயுதம் கேட்டு இலங்கை அணுகாமல் தடுக்க, இந்தியாவே ஆயுதம் வழங்கும் என்று இலங்கையிடம் அவர் கூறினாரா என்று நிருபர்கள் கேட்டதற்கு, அதுபோல அவர் எதுவும் கூறவில்லை என்றார் பொன்சேகா.

எங்களுக்குத் தேவையான ஆயுதங்கள் உள்ளன என்று இந்தியாவுக்குத் தெரியும் என்றார் அவர்.

இலங்கைக்கு இந்தியா ஆயுதம் வழங்கினால், தென் இந்தியாவில் அரசியல் ரீதியாக எதிர்ப்பு இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். எனவே இந்திய அரசை தொந்தரவு செய்ய நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவிடம் இருந்து ஆயுதம் வாங்க முடியவில்லையே என்று நாங்கள் வருத்தப்படவில்லை என்று கூறிய பொன்சேகா, வழக்கமான முறையில் இலங்கை ராணுவத்துடன் நேருக்கு நேராக போரிடுவதில் விடுதலைப் புலிகள் ஏற்கெனவே தோற்றுவிட்டனர். 2006 ம் ஆண்டிலிருந்து இதுவரை 9000 விடுதலைப் புலிகள் போரில் கொல்லப்பட்டனர் என்றார்.

இன்னும் ஓராண்டில் அவர்கள் ராணுவ அளவில் முழுவதுமாக தோல்வியை சந்திப்பர். காடுகளில் போரிடுவதில் இலங்கை ராணுவத்தினர் உலகிலேயே சிறந்து விளங்குகின்றனர் என்றார் பொன்சேகா

குறிச்சொற்கள்: , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்