தமிழ் செம்மொழி ஆய்வு மையத்துக்கு ரூ.1 கோடி வழங்கினார் கருணாநிதி
தமிழ் செம்மொழி ஆய்வு மையத்துக்கு ரூ.1 கோடி வழங்கினார் கருணாநிதி
‘கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை’ மூலம் விருது, பொறிகிழி.
சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான தமிழ் செம்மொழி ஆய்வு மையத்துக்கு முதல்வர் கருணாநிதி தனது சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
தமிழ் செம்மொழி ஆய்வு மையத்தின் அலுவலக திறப்பு விழா சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள பாலாறு கட்டிடத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில், முதல்வர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இந்த அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
“”இந்த விழாவில் கலந்துகொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 150 ஆண்டுகளுக்கு முன்னர் பரிதிமாற் கலைஞர் கண்ட கனவும், 50 ஆண்டுகளுக்கு முன் நான் கண்ட கனவும் இன்று நிறைவேறிவிட்டது.
அந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் வகையில் எனது சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாயை தமிழ் செம்மொழி ஆய்வு மையத்துக்கு வழங்குகிறேன்.
இதன் மூலம் ‘கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை’ நிறுவப்பட்டு அதன் பெயரில் இந்த ஒரு கோடி ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையில் வைக்கப்படும். அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையில் ஆண்டுதோறும் தமிழ் வரலாற்று கல்வெட்டுகளை ஆய்வு செய்வோருக்கு விருதும் பொறிகிழியும் வழங்கப்படும்”" என்றார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் மு.க. ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, கவிஞர்கள் வைரமுத்து, கனிமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்