இந்திய ராணுவ முன்னாள் தலைமை தளபதி உடல்நிலை கவலைகிடம் | சற்றுமுன்...




இந்திய ராணுவ முன்னாள் தலைமை தளபதி உடல்நிலை கவலைகிடம்

பீல்டு மார்ஷல் மானேக்ஷா உடல்நிலை கவலைகிடம்

இந்திய ராணுவ முன்னாள் தலைமை தளபதி பீல்டு மார்ஷல் மானேக்ஷா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கடந்த 1971_ம் ஆண்டு இந்திய ராணுவ தலமை தளபதியாக மானேக்ஷா இருந்தார். அப்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் நடந்தது. மேற்குபாகிஸ்தானில் இருந்து தனிநாடு கோரி கிழக்கு பாகிஸ்தானில் போராட்டம் நடந்தது. அதாவது தற்போது உள்ள வங்கதேசம்தான் கிழக்கு பாகிஸ்தானாகும்.

இந்த சுதந்திர போராட்டத்திற்கு இந்தியா தார்மீகமான முறையில் ஆதரவு அளித்தது. அப்போது பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி நடந்தது. சர்வதிகாரியாக இருந்த யாகியாகன் இந்தியா மீது 10 நாட்களில் போர் தொடுப்பேன் என்று கூறினான். அதன்படி 10_வது நாள் இந்தியா மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் தேவையில்லாமலும் வேண்டுமென்ற வலுக்கட்டாயமாக குண்டுகளை வீசின. அப்போது ரஷ்யா மற்றும் அமெரிக்கா உள்பட பல மேற்கத்திய நாடுகளுக்கு பயணம் செய்த இந்திரா காந்தி ரஷ்யாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொண்டார். அவரது ராஜதந்திரமானது இந்தியாவை பல வழிகளிலும் காப்பாற்றியது. இந்திரா காந்தி பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியதும் பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுக்க உத்தரவிட்டார்.

இந்திய ராணுவமானது மனேக்ஷா தலமையில் பாகிஸ்தானை தாக்கத்தொடங்கியது. அவ்வளவுதான் பாகிஸ்தான் படைகள் பின்வாங்கின. கராச்சி துறைமுகம் அடியோடு அழிந்தது. மேலும் வங்கதேசத்தில் இருந்த பாகிஸ்தான் படைகள் 10 லட்சம் பேரை இந்திய ராணுவம் சுற்றிவளைத்தது. இனியும் சரணடையாவிட்டால் இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றுவிடும் என்று கருதிய பாகிஸ்தான் படைகள் 10 லட்சம்பேரும் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தனர். வங்கதேசம் தனி நாடு என்று பிரகடனம் செய்தது.

பாகிஸ்தானின் பரிதாபத்தை பார்த்த இந்திராகாந்தி தானாகவே முன்வந்து சண்டையை நிறுத்த இந்திய ராணுவத்திற்கு உத்தரவிட்டார். சண்டையில் ராஜதந்திரத்துடன் போரிட்டு வெற்றிபெற்று இந்தியாவுக்கு பெருமையை தேடிக்கொடுத்ததற்காக மானேக்ஷாவுக்கு பீல்டு மார்ஷல் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அப்படிப்பட்ட மாவீரன் மானேக்ஷாவுக்கு தற்போது 94 வயதாகிறது. அவருக்கு நுரையீரல் நோய் ஏற்பட்டுள்ளது. அவர் ஞிலகிரி மாவட்டம் வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு டெல்லியில் இருந்து நுரையீரல் நோய் நிபுணர் வந்து சிகிச்சை அளித்து வருகிறார்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இருந்தபோதிலும் சிகிச்சை நல்ல பலன் அளித்து வருவதாக ராணுவ கமாண்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

குறிச்சொற்கள்: ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்