நீதித் துறையில் தமிழ் முழங்க வேண்டும்: மத்திய சட்ட இணை அமைச்சர்
“நீதித் துறையில் தமிழ் முழங்க வேண்டும்’: மத்திய சட்ட இணை அமைச்சர்
தஞ்சாவூர், ஜூன் 24: அனைத்துத் தகுதிகளும் பெற்ற தமிழ் மொழி விரைவில் நீதித் துறையில் முழங்க வேண்டும் என்றார் மத்திய சட்டத் துறை இணை அமைச்சர் கே. வேங்கடபதி.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தஞ்சை நீதிமன்றத்தின் 200-வது ஆண்டு விழாவில் அவர் பேசியது:
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்த பூம்புகாரில் நீதிக்காகப் போராடி வென்ற கண்ணகி பிறந்தாள். சிலப்பதிகாரம் தோன்றியதும் இங்கேதான். அந்த வகையில் இப்பகுதி பழங்காலம் தொட்டே சிறப்பான நீதிநெறி பரிபாலனத்துக்கு வித்திட்டுள்ளதை யாரும் மறுக்க முடியாது.
தமிழக அரசு நீதித் துறைக்கு ரூ. 300 கோடி ஒதுக்கியுள்ளது. அனைத்து நீதிமன்றங்களும் கணினி மயமாக்கப்பட்டு, வழக்குகள் விரைந்து தீர்க்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அனைத்துத் தகுதிகளும் பெற்ற தமிழ் மொழி நீதித் துறையில் முழங்க வேண்டும், அது விரைவில் நிறைவேற வேண்டும் என்றார் அமைச்சர் கே. வேங்கடபதி.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்