அமெரிக்காவில் ஒரே பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த 17 மாணவிகள் ஒரே நேரத்தில் கருத்தரித்தது எப்படி?
அமெரிக்காவின் மஸச்சுஸெட்ஸ் மாநிலத்தில் ஒரே பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த 17 பதின்ம வயது மாணவிகள் ஒரே நேரத்தில் ஏன் கர்பிணியானார்கள் என்று அந்த மாநில அதிகாரிகள் புலன் விசாரணை செய்கிறார்கள்.
இந்த எண்ணிக்கை, கடந்த வருடத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும். அத்துடன் இவர்களில் பலர் பல தடவைகள் கர்ப்பத்தை உறுதி செய்வதற்கான சோதனைகளைச் செய்துகொண்டதுடன், தாம் கர்ப்பம் தரிக்கவில்லை என்று அறிந்தவுடன் அதனால் ஏமாற்றம் அடைந்ததாக கூறப்படும் நிலையில், இவர்கள் அனைவரும் தாம் ஒரே நேரத்தில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது என்று ஒரு உடன்படிக்கையை செய்துகொண்டிருக்கலாம் என்று சில அதிகாரிகள் நம்புகிறார்கள்.
அத்தோடு, இந்தக் குழந்தைகளுக்கான தகப்பன்மார் யார் என்பது குறித்தும் அதிகாரிகள் புலன்விசாரணை செய்கிறார்கள்.
அவர்களில் சிலருக்கு இருபது வயதுக்கும் குறைவு என்று நம்பப்படுவதுடன், சிறுமிகளுடன் பாலியல் உறவு கொண்டதற்காக அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடியும்.
மேலும் விவரங்களுக்கு:
1. Pregnancy Boom at Gloucester High - TIME
2. Teens had pact to get pregnant, report says - The Boston Globe
குறிச்சொல் ஏதும் இல்லை.இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்