பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு மத்திய அமைச்சர் அறிவிப்பு
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா இன்று தெரிவித்தார்.
வீட்டு உபயோகத்துக்கான சமையல் கேஸ் விலை சிலிண்டருக்கு ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தல் மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்படவில்லை. இந்த விலை உயர்வுகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றன.
எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம் ரூ. 2.2 லட்சம் கோடியைத் தாண்டியது. என அரசு அறிவித்துள்ளது அதன் அடிப்படையில் இந்த விலை உயர்வு செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் விலையேற்றத்தின் காரணமாக இந்த விலை உயர்வு என்ற காரணம் சொன்னாலும் நமது நாட்டில் உற்பத்தி செய்து விற்கப்படும் பெட்ரோலுக்கும் இந்த விலை உயர்வு அமல் செய்யப்படுகிறது என்பதும் உண்மை.
எண்ணை விலையேற்றம் இதனால் நட்டம் என காரணம் காட்டினாலும் இறுதியில் இந்த எண்ணை நிறுவன்ங்கள் பலகோடி இலாபக்கணக்கையே கடந்த காலங்களில் காட்டியுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம் எட்டு சதவிகிதத்தை எட்டிவிட்ட்தாக மத்திய அரசே ஒப்புக்கொண்டாலும் உண்மையில் பணவீக்க விகிதம் இதைவிட அதிகமாகவே உள்ளது. என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் இந்த பெட்ரோல் உயர்வு மேலும் விலையேற்றத்திற்கு காரணமாக பணவீக்க விகிதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால சாதாரண மக்கள் மேலும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
குறிச்சொற்கள்: வணிகம், விலையேற்றம் பொருளாத, அரசியல்
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்