அதிகாரம் என்பது அதிகாரம் செலுத்துவதற்குக் கிடையாது : நாஞ்சில் குமரன் | சற்றுமுன்...




அதிகாரம் என்பது அதிகாரம் செலுத்துவதற்குக் கிடையாது : நாஞ்சில் குமரன்

போலீஸ் கமிஷனராக இருந்த படியே பணியில் இருந்து ஓய்வு பெறுவது காவல் துறை வரலாற்றில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

சென்னை மாநகர கமிஷனராக இருந்து பணியில் இருந்து ஓய்வு பெற்ற நாஞ்சில் குமரனுக்கு, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் பணி நிறைவு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அவருக்கு சிறப்பு அணிவகுப்பு மரியாதை தரப்பட்டது. மனைவி மங்களம், மகள் திவ்யா ஆகியோருடன் நாஞ்சில் குமரன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், “அதிகாரம் என்பது அதிகாரம் செலுத்துவதற்குக் கிடையாது. மக்களுக்கு சேவை செய்யவே அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். சென்னை கமிஷனராகப் பொறுப்பில் இருப்பது என்பது சவால் நிறைந்த பணியாகும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்’ என்றார்.

கமிஷனராக இருந்த படியே ஓய்வு பெற்றது சிறப்பு: 93-வது கமிஷனராகப் பொறுப்பேற்ற கமிஷனர் நாஞ்சில் குமரன், கமிஷனராக இருந்தபடியே ஓய்வு பெறுவது என்பது சிறப்பம்சம். இதற்கு முன்னர் யாருக்கும் இம்மாதிரி வாய்ப்பு கிட்டவில்லை. சென்னை காவல்துறை வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
 

குறிச்சொற்கள்: , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்