ஜூன் 11-ம் தேதி நூற்றாண்டு விழா காணும் எழும்பூர் ரயில் நிலையம்
ஜூன் 11-ம் தேதி நூற்றாண்டு விழா காணும் எழும்பூர் ரயில் நிலையம்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் நூற்றாண்டு விழா வரும் ஜூன் 11-ம் தேதி நடைபெற உள்ளது.
சென்னையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு, புகழ்பெற்ற மரபுச் சின்னங்களில் முதன்மையானதாக ஏழும்பூர் ரயில் நிலையம் இன்றளவும் திகழ்கிறது.
கடந்த 1908-ம் ஆண்டு ஜூன் 11-ல் தொடங்கப்பட்ட இந்த ரயில் நிலையம் தமிழகத்தின் நுழைவாயிலாக விளங்குகிறது.
நூற்றாண்டு விழாவையொட்டி, புதுப்பொலிவு பெறும் வகையில் ரூ. 11 கோடியில் இந்த ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் மான்சிங் புதன்கிழமை கூறியதாவது:
எழும்பூர் ரயில் நிலையத்தில் ஏற்கெனவே இதுவரை ரூ. 3 கோடியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுதவிர தெற்கு ரயில்வே கட்டுமானப் பிரிவின் மூலம் மேலும் ரூ. 4 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதுதவிர வளர்ச்சிப் பணிகளுக்காக கூடுதலாக ரூ. 4 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. பிளாட்பாரங்கள் விரிவாக்கம், பயணிகளுக்கான இருக்கை வசதி, நடைமேம்பாலங்கள், கழிவறைகளைப் புதுப்பிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெறுகின்றன.
இதுதவிர கண்ணாடி -அப்ட், ஓளிரும் விளக்குகள், பொது ஆறிவிப்பு வசதி, பயணிகளின் உடைமைகளைச் சோதிக்க கன்வேயர் ஸ்கேனர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
வரும் ஜூன் 11-ம் தேதி எழும்பூர் ரயில்நிலைய வளாகத்தில் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. இதில் ரயில்வே இணை ஆமைச்சர் இர். வேலு மற்றும் மாநில ஆமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார் மான்சிங்.
அஞ்சல் தலை வெளியீடு:நூற்றாண்டு விழாவையொட்டி எழும்பூர் ரயில் நிலையத்தின் முகப்புத் தோற்றத்தை வண்ணப் படமாக அச்சிடப்பட்ட அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் ஊறை வெளியிடப்பட உள்ளது.
குறிச்சொற்கள்: எழும்பூர், நூற்றாண்டு, ரயில் நிலையம்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்